குறள் நிலா முற்றம் – 6

Related image

ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

“உணவுக்கு முன் ஒரு நிமிடம்… கவிஞர் கருப்பையா அவர்களே, திருக்குறளின் சிறப்பான பெருமைகளை எடுத்துக் கூறுங்கள்?

கவிஞர் கா.கருப்பையா

திருக்குறளுக்குச் சூட்டப்பெற்ற புகழாரங்கள் சில:

    “திருக்குறள் நீரோட்டம் பாயாத தமிழ்வயல்களே இல்லை”

– மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்

மானிட வேதம்

“சினமெனும் வேதம் மற்றும் இடமெனும் பேதம் மாறும்

 தினமெனும் வேதம் யாவும் தீர்த்தொரு பொதுமை கண்டு

 வாழ்வியல் படைத்த மேதை வள்ளுவன் தந்தமுப்பால்

 சூழ்நிலை அனைத்தும் தன்னுள் சூழ்ந்தொரு பாதை

காட்டும்,

 மானிட வேதம் சிந்த வையத்தார் அனைவர்கட்கும்

 தேனினும் இனிய எங்கள் செந்தமிழ் தந்த செல்வம்”

& அறிஞர் வா.செ.கு. (குலோத்துங்கன்)

ஒப்பற்ற நூல்

“வானுக்குச் செங்கதிரவன் போன்றும்

     புனல் வன்மைக்குக் காவிரியாறு போன்றும்

     நல்ல மானத்தைக் காத்து வாழ எண்ணும்

     வையக மாந்தர்க்கு ஒப்பற்ற நூல் திருக்குறள்…”

& பாவேந்தர் பாரதிதாசன்

வளரும் எண்ணம்

“வள்ளுவரின் குறள் மீது விழியை நாட்டி

     வடித்த இரண்டடி எடுத்து மனத்துள் போட்டுத்

     தெள்ளிதின் நற்பொருள் கண்டே உளம்பூரித்துச்

     சிந்தித்துப் பார்க்குங்கால் வளரும் எண்ணம்”

& கவியரசு கண்ணதாசன்

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்…” என்றுதானே வள்ளுவர் சொன்னார்; நாம் செவிக்கு இதுவரை உணர்வு பெற்றோம்; இனி வாயுணர்வுக்கு வகை வகையாக வைக்கப் பட்டுள்ளவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு வருவோமே! பந்திக்கு முந்துங்கள் ஐயா!”

 

ஒருவர்

“நிலா முற்றத்தில் செவிக்குக் கிட்டிய உணவால் நிறைவு கிட்டியதா..?”

மற்றவர்

“அல்லது வயிற்றுக்குக் கிட்டிய அறுசுவை உணவால் நிறைவு ஏற்பட்டதா? எனச் சொல்ல முடியாத அளவு நிலாச்சோறும் சுவையாய் இருந்தது; வள்ளுவச் செய்திகளும் சுவையாய் இருந்தன.”

முன்னவர்

“அது சரி… நாம் சைவப் பந்திக்குச் சென்று வந்தோம். அசைவத்தை நாடிச் சென்றவர்கள் எங்கே? இன்னும் காணோமே…”

இரண்டாமவர்

“அதோ பாரும் ஐயா… அசைந்து அசைந்து, ஆடியபடி வருகிறார்கள். நடக்கக்கூட முடியாமல்.. அவர்தான் அசைவ வேட்டைக்குப் போனவர்… அவர் அசைந்தாடி வந்தபின் சாப்பாட்டை ருசித்துப் பாராட்டுவார். வந்த பின் கேட்டால் நமக்கும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். கட்சி மாறி விடுவோம்.” 

முன்னவர்

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

மற்றவர்

“நீரே பாராட்டிவிட்டீர் மிக அரிதாக, ஆச்சரியமாக!”

முன்னவர்

“ஏன் அப்படிச் சொல்கிறீர்? நல்லதைப் பாராட்ட வேண்டியது மனிதப் பண்பு அல்லவா?”

மற்றவர்

“அந்த நல்ல இயல்பு தமிழர்களாகிய நம்மிடம் அதிகம் இல்லையே? இது நம் தவக்குறை; நம் ஒருமித்த வளர்ச்சிக்கும் தடை.”

ஓர் அரசு அதிகாரி

“ஆங்கிலத்தில் வரும் புகழ்பெற்ற மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் அண்மையில் படித்தேன்: “மனிதன் சற்று அதிகமாகவே உணர்ச்சி வசப்படுபவன், அவன் முதுகைச் சற்று ‘சபாஷ்’ எனத் தட்டிக் கொடுத்துவிட்டால், உடனே தலை கனத்துப்போய் விடுமாம், கர்வம் வந்துவிடுமாம்.”

இன்னொருவர்

“ஆனால், பலருக்குத் தட்டிக்கொடுக்காமலே கர்வம் தலைக்கேறி விடுகிறதே?”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த கர்வம் பார்க்கும் சர்ச்சையை விடுத்து,  நாம் உணவுக்கு முன் பேசிய, வள்ளுவ முரண், அரண்களைப் பற்றிப் பேசுவோமா..?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“அதற்கும் முன்பாக நிலா முற்ற விருந்துச் சாப்பாட்டைப் பற்றி ஓரிரு சொற்களில் பாராட்டட்டுமே.. ‘பண்பு பாராட்டும் உலகு’ என வள்ளுவரே சொல்லி உள்ளாரே..?”

 

ஒருங்கிணைப்பாளர்

“‘பண்பு’, ‘பாராட்டு’, ‘நாகரிகம்’ எனும் சொற்களுக்கு அறிவுபூர்வமாகச் சரியான விளக்கம் ஒரு போதும் சொல்ல இயலாது; உணர்வை வேண்டுமானால் ஓரளவு புலப்படுத்தலாம்.

இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் அரசியல், சமுதாயக் காழ்ப்புணர்வுகள், சுயநல வேட்டைகள் முதலியவை காரணமாகப் பண்புகள் அருகி வருகின்றன என்பது ஓரளவு ஏற்கத்தக்கதுதான் என்றாலும் பாராட்டும் பண்பினைச் சிறு வயது முதலே ஊக்கியும் போற்றியும் வளர்க்க வேண்டியது அனைவரின் அன்றாட வாழ்வுப் பொறுப்பே ஆகும். நலம் கண்ட இடத்துப் பாராட்டுவது பண்புடையாரிடம் மட்டும் காணப்பெற்றால் போதாது. பலரிடம் பரவ வேண்டும்.”

பண்பு பாராட்டும் பக்குவம்

புலவர் ஒருவர்

“‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு’ (994) எனும் தமிழ்மறை, அறிவுடையோர் பண்பு பாராட்டுவதே சிறப்பு என அறிவுறுத்துகிறது. எல்லோரும் பாராட்ட முற்பட்டால் அறிவுடையோராகவும், ஆட்சித் திறத்தை ஊக்குவிப்போராகவும் வளரலாம்; தாமும் உயர்ந்து, நாட்டோரையும் உயர்த்தலாம். பாராட்டு வோரிடத்திலும் அதனை ஏற்போரிடத்திலும் பாராட்டுதல் எனும் பண்பு மேன்மேலும் சிறந்தோங்கிடவே துணை புரியும்.”

தமிழ்ச் சங்கக் கல்லூரிப் பேராசான்

“பாராட்டு எனும் போது என் நினைவில் படரும் இரு சங்கப் பாடல்களின் செய்திகளைச் சுருக்கமாகச் சொல்ல எனக்கு இந்த நிலா முற்ற அவை இசைவு தர வேண்டும்.”

ஒருவர்

“நிலா மறைந்து பொழுது விடிவதற்குள் சொன்னால் தூங்கி விடாமல் கேட்போம்… புலவரய்யா… புறநானூற்றிலேயே எங்களை மூழ்கடித்துவிடக்கூடாது” (சிரிப்பு)

பேராசான்

“நான் அகத்துறை நற்றிணைப் பாடலில் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல் ஒன்றின் கருத்தைச் சொல்ல விழைந்தேன். போருக்குச் சென்ற வீரன், ஆற்றலோடு போர் முடித்து வெற்றி வீரனாகத் தன் மனையாளைக் காணக் குதிரை பூட்டிய தேரில் விரைந்திடும் காட்சியை, ஒக்கூரார் ஓவியமாக்கி உள்ளார். ‘வாயு வேகம் மனோ வேகம்’ என விரைந்து வந்திட அவனுக்கு உதவிய தேரோட்டியையும் குதிரைகளையும் செய்வினை முடித்த செம்மல் உள்ளத்தோடும், புரிந்த காதலொடும் வந்த அவன் ‘போர் முடித்துத் தேரில் ஏறியதைத் தான் அறிவேன்; ஆனால் இவ்வளவு விரைவில் வந்தது எப்படி என அறியேன். என்னப்பா..! வானில் சுழலும் காற்றைக் குதிரைகளாகப் பூட்டிவந்தாயா! அல்லது மனத்தைப் பூட்டி வந்தாயா?’ என வியந்து கேட்கும் அளவுக்கு விரைந்து வந்து இறங்கிக் காலமெல்லாம் காத்திருந்த தன் மனையாளை மார்புடன் கட்டி அணைத்துக் கொள்ளுகிறான்… இது மாசாத்தியார் வெற்றி வீரன் ஒருவன் தன்னிலும் நிலை தாழ்ந்த குதிரைச் சாரதியை மனதாரப் பாராட்டுவதாக அமைத்த அரிய காட்சி. அதுபோல, ‘யான் கண்டனையர் என் இளையரும்’ எனப் பிசிராந்தையார் எனும் புறநானூற்றுப் பெரும்புலவர் தம்மினும் இளைஞரைப் பெருமையுறப் பாராட்டினார். முதுமையிலும் கவலையால் நரை முடி படராது எனச் சான்று காட்டினார். எனவே ‘யார் யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றாற் போல, யார் சிறந்த பணி செய்தாலும் சிந்தை குளிரப் பாராட்டும் சிறந்த மனம் வேண்டும். ‘சின்னப் பசங்க தானே..?’ என அலட்சியப்படுத்துவதால், அவர்கள் பெரியவர்களைத் தாமும் அலட்சியப்படுத்துவதில் கைதேர்ந்தவர் களாகி வருவது சமுதாயக் காட்சியாகி விட்டது.”

ஒருவர்

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

ஒருங்கிணைப்பாளர்

“இந்தக் கருத்தை நம் மூதறிஞர் மு.வ. ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை நிலா முற்ற அவையின் கவனத்திற்குக் கொணர்கிறேன்.

பொருளும் புகழும் வாழ்வுக்குத் தேவை. ‘புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்’ என்ற வள்ளுவர், ஒருவர் மறைவுக்குப்பின்னர் தாம் பெற்ற மக்களைப் போல அவருக்கு எஞ்சி நிற்கப்போவது அவர் ஈட்டும் புகழே என வலியுறுத்திச் சொல்லியுள்ளார்.”

ஒருவர்

“வள்ளுவர் ‘புகழெனும் எச்சம்’ என்றே குறிக்கிறார்: ‘இசையெனும் எச்சம்’ (238): அன்பரின் நினைவூட்டலுக்கு நன்றி. ஆனால் வள்ளுவர் காலச் சமுதாய வாழ்வு ஊரளவில் – கிராம அளவில் – சுருங்கியதொரு குடிமை வாழ்வாக இருந்தது. எனவே ஒருவர் புகழுக்கு உரியவர் தானா என ஒரு சாதனையாளரை உண்மையிலேயே நேரிடையாகக் கண்டறிந்து போற்றிப் பாராட்டு வதையும் அதைச் சமுதாயத்தவர் ஒருமனமாக ஏற்பதையும் உணர முடியும். ஆனால், போலிப் புகழ் ஊர்வலங்கள் இன்று, உலகின் நாலா திசையிலும் ஒரு வகையில் விரிந்துள்ளன; இன்னொரு வகையில் உலகம் கைக்குள் அடங்கு மாறு சுருங்கியும் உள்ளது. இன்றுள்ள அறிவியல் சாதனத் தொடர்புப் பெருக்கத்தின் காரணமாக ஒரு வினாடிக்குள் ஒருவர் உலகப் புகழுக்கோ அல்லது உலகின் கவனத்துக்கோ கொணரப் பட்டு விடுகிறார்.”

இடைமறிக்கும் ஒருவர்

“அதை கின்னஸ் சாதனை எனப் பதிவு செய்கிறார்கள். அப்புறம் இன்னொருவர் அந்த நுனியைத் தொட்டவுடன் முந்தையவர் பெயர் காணாமல் போய்விடுகிறதே, அது புகழா? போலியா?”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைக்குப் புகழ், பாராட்டு என்பதெல்லாம் பணபலமோ, ஆட்பலமோ உள்ளவர்களின் கைக்கருவியாகி விட்டது உண்மை. செய்தித் தாள்கள் போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு விலைபோகி விடுவதும் மறுக்க முடியாத நடைமுறை. அவையோர்க்கு இங்கே ஒன்றை நினைவூட்டுவது என் கடமை. மேலும், இது குறள் நிலா முற்றமாக இருப்பதால், புகழ் – போலி என்பதைப் பற்றிய வள்ளுவர் கருத்தைச் சுற்றி வருவதைவிட, வள்ளுவப் பெருந்தகை புகழுக்கு ஊறு செய்பவை என எவ்வெவற்றைப் பட்டியலிட்டாரோ அவற்றையும் இன்றைய வாழ்வோட்டத் தோடு கருதிப் பார்க்கலாம்.”

இடைமறித்த ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

 

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

 

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

 

( தொடரும் )

 

5399total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>