என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1

என்னைச் செதுக்கிய நூல்*

Image result for thirukkural

எனக்கு வந்தவுடனே ஒருவிதப் பெரிய திகைப்பு. இந்த இனிய மாலைப்பொழுதில் என்னைப் பற்றி அன்பின் காரணமாக அளவுக்கு மீறிப் புகழ்ந்து உரைத்தார்கள். இங்கே அமர்ந்திருப்பவர்கள் பல துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள்; பெரும் பேராசிரியர்கள். கற்றோர் முன் பேசுகின்றபொழுது பிழை ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. இருந்த போதிலும்கூட பிள்ளையைத் தந்தை பார்த்து மகிழ்வது போல நான் பேசுகின்ற சொல்லைச் செவிமடுத்து என்னை வாழ்த்து வார்கள் என்று கருதுகிறேன். சாகித்திய அகாதெமி கொடுத்திருக்கிற இந்தப் பெருமை என்றும் நினைந்து மகிழ்வதற்கு உரியது. இதனை நான் மிகப்பெரிய பேறாகக் கருதுகிறேன்.

இந்நாள் எப்படி அமைந்திருக்கிறது பாருங்கள்: 9-9-2007. இதைக் கூட்டினால் 9 வருகிறது. எப்படிக் கூட்டினாலும் 9 தான் வருகிறது. ஆகவே இந்த நாள் என் மனதில் இருந்து நீங்காது. இது ஒரு பசுமையான நினைவுகளைச் சுமந்திருக்கும்.

‘என்னைச் செதுக்கிய நூல்கள்’ என்று சாகித்திய அகாதெமி நண்பர்கள் தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். செதுக்கிய என்று பார்க்கிற சமயத்திலே அது ஒரு சிற்பமாகத்தான் இருக்கும். ஒரு பாறை இருக்கிறது. அதனை ஒரு சிற்பி சிலைவடிக்க நினைக்கிறார். சிற்பம் வடிக்க நினைக்கிறார். மிகச்சிறந்த பாறையைத் தேர்ந்தெடுக்கிறார். அதில் ஒரு சிறந்த அழகிய உருவத்தைக் காணுகிறார். அந்தப் பாறையில் வேண்டாத பகுதியை நீக்கிவிடுகிறார். அங்கே அழகிய சிற்பம் கிடைக்கிறது. அதற்கு எந்த உளியைப் பயன்படுத்துகிறார்? கலைநயத்தை, கற்பனையை, அறிவை, அனுபவத்தைப் பயன்படுத்தி மன ஒருமைப்பாட்டுடன் அந்தச் சிலையை வடிக்கிறார். பாறையில் உள்ள வேண்டாத பகுதியை நீக்கியவுடனே, அழகிய சிற்பம் அமைந்து விடுகிறது. அதுபோல வாழ்க்கை ஒரு பாறையாக இருந்தால் அதில் வேண்டிய பகுதிகளை வைத்துக் கொண்டு, வேண்டாத பகுதியை நீக்கிவிட்டால் அழகிய வாழ்க்கை என்னும் சிற்பம் அமைந்து விடும் என்பதைச் சுட்டிக் காட்டுவது போல இந்தத் தலைப்பை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக் கிறார்கள்.

ஒரு மனிதனை உருவாக்குவது எது? சந்தர்ப்பமா? சூழ்நிலையா? எது அவனை உருவாக்குகிறது? ஒரு வித்து இருக்கிறது. அதை நல்ல விளைநிலத்தில் போடுகிறோம். நல்ல விளைநிலத்தில் போடுகின்ற சமயத்திலே அங்கு அந்த விதை தன்னை முளைவிட்டுக் காட்டுகிறது. அந்தச் செழிப்பு மண்ணுடைய செழுமையைக் காட்டுகிறது. எந்த விதை போட்டோமோ அந்த விதை தன் கருவை வெளிப்படுத்துகிறது. ஆகவே சூழ்நிலையும், சந்தர்ப்பமும் ஒரு விதையின் தோற்றத்தை மண்ணிற்கு ஏற்ப மாற்றி விடுகிறது. ‘விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?’ மாம்பழ விதை போட்டால் மாமரம் கிடைக்கும். பலா விதை போட்டால் பலாமரம் கிடைக்கும். எந்தக் கனி விதையைப் போடுகிறோமோ அந்தக் கனி மரம் கிடைக்கும். ஆகவே மனிதனைச் சூழ்நிலையும், சந்தர்ப்பமும் உருவாக்குகின்றனவா என்றால் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் உருவாவதற்குத் துணைபுரிகின்றனவே தவிர அவனை உருவாக்குவதில்லை அதுதான் ஒருமனிதனுடைய குலச்சிறப்பு.

“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

     குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்” (959)

இங்கே நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது: சாதி என்பது வேறு. குலம் என்பது வேறு. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவர், குலச்சிறப்பு சொல்லுகின்ற பொழுது எந்தச் சாதியில் பிறந்தாலும் எங்கே பிறந்தாலும் சரி ஒரு பாரம்பரியம் என்று சொல்கிறோமே, அதுபோல பாரம்பரியச் சிறப்பு உடையவர்களுக்கு இயல்பாகவே சில பண்பாடுகள் அமைந்திருக்கும். அவர்களிடம் ஒழுக்கம், நேர்மை, பிறர்க்கு உதவுதல், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் என்ற சான்றாண்மைப் பண்புகள் மரபு வழியில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட குடும்பங்கள் தனிச்சிறப்புடையனவாக இருக்கும். அதனால் குலச்சிறப்பு என்பது முக்கியமான ஓர் உண்மை. அதுமட்டுமல்லாமல் பழகுகின்றவர்கள், படித்த புத்தகங்கள், சார்ந்து இருப்பவர்கள் இவைகளெல்லாம் ஒருவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்று சொன்னால் நான் வரலாற்றைச் சொல்லுகின்ற அளவுக்குப் பெருமையுடையன் அல்ல இருந்தாலும் இந்த நேரத்தில் சொல்வது பொருந்தும் என்பதனால் சில செய்திகளை நான் சொல்ல விரும்புகிறேன்.

என்னுடைய கிராமத்தில் இருந்த எனது தாத்தா ஓர் அருளாளராக இருந்தார். அவர் செல்வாக்கு உடையவராக இருந்தார். ஆசுகவி என்ற பட்டம் பெற்றவராக இருந்தார். அதுபோல என் தந்தையும் அதிகம் படிக்காதவராக இருந்தாலும் கூட ஓர் அருளாளராகவும் பிறர் நலம் பேணக் கூடியவராகவும் இருந்தார். ஏறக்குறைய 150 ஆண்டுகள் என்று சொல்லலாம். அவர்கள் நிறைய அறப்பணிகள் செய்தார்கள். சிவன் கோயில் ஒன்று, பெருமாள் கோயில் ஒன்று, குளம் ஒன்று கட்டினார்கள். இப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

அந்தப் பாரம்பரியப் பண்புகள் என்னை அறியாமலே என்னுள் வித்திட்டு இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். நான் உருவாவதற்கும் திருக்குறளில் ஈடுபாடு கொள்வதற்கும் இயல்பாகவே அவர்களுடைய வித்தில் இருக்கக்கூடிய கரு எனக்கு கிடைத்திருக்கிறது என நான் கருதுகின்றேன். ஆகவேதான் நான் வேறு துறையில் – பொருளாதாரத் துறையில் – படித்திருந்தாலும்கூட இயல்பாகவே இது அமைந்தது.

பாரம்பரியப் பண்பைப் பற்றி வள்ளுவர் சொல்லு கின்றபோது,

Image result for thirukkural

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

     உண்மை அறிவே மிகும்”            (373)

என்கிறார். உண்மை அறிவு என்பது பாரம்பரியமான அறிவு. அந்த வகையில் அந்தச் சிறப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்நேரத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உயர்வதற்கு அடிப்படையாக அவன் ஒரு சிறந்த வித்தாக இருக்க வேண்டும். சார்ந்தவன் சார்ந்த வண்ணம் உயர்வதாலே சார்ந்தவர்கள் சிறப்புடையவர் களாக இருக்க வேண்டும். அந்த வகையிலே என்னைச் சார்ந்தவர்கள் எல்லாம் சிறப்பைச் செய்திருக்கிறார்கள். சான்றாக, எனக்கு சின்ன வயதிலே ஒரு சுயமரியாதை உணர்வு ஏற்பட்டது. எப்படி என்று சொன்னால் எனது தந்தை இயல்பாகவே என்னை அவன், இவன் என்று சொல்லமாட்டார். அவர் இவர் என்று தான் சொல்லுவார். அதுபோல ஆசிரியர்களும் அப்படித்தான். எல்லா மாணவர்களையும் அவன், இவன் என்று அழைப்பதில்லை. சின்ன வயதிலே எந்த விதச் செருக்கும் உண்டாகவில்லை. அதற்கு மாறாக, ஒரு பெருமிதம் ஏற்பட்டது. ஆகவே தன்மானத்தோடும் சுய மரியாதையோடும் இருப்பதற்கு அடிப்படையிலே என்னை அறியாமலே ஒரு பண்பாடு ஏற்பட்டது. ஆகவே ஒரு மனிதனை உருவாக்குவதற்கு அந்த வித்தினைச் சார்ந்தவர்கள், சிறந்தவர்களாக. சார்ந்த வண்ணம் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அதுபோல நான் படிக்கிற காலத்தில் எனது ஆசிரியப் பெருமக்கள் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள்.

“நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

     இனத்துஇயல்பது ஆகும் அறிவு.”      (452)

என்பது போல சார்ந்தவர்கள் வண்ணமாக பெரியோர்களை துணைக் கொள்ளும்போது அவர்களின் நற்பண்புகள் எல்லாம் என்னைச் சார்ந்திருக்கின்றன. மேலும் மேலும்  சிற்றினம் சேராமல் பெரியோர்களைச் சார்ந்ததால் அந்தப் பெருமிதம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

சிந்தித்துப் பார்க்கிற சமயத்திலே ஒரு மனிதன்  பிறந்த குடும்பம்; அவன் சார்ந்திருக்கிற மனிதர்கள்; அவனது மிகச்சிறந்த ஆசிரியர்கள்; அவன் படித்த புத்தகங்கள் இவைகள்தான் ஒரு மனிதனை உருவாக்குகின்றன என்பதை அறியமுடிகிறது.

நமது ஐயா பேராசிரியர் தமிழண்ணல் இருக்கிறார். இவரை அறிமுகப்படுத்தியவர் பெரும்புலமை மிக்க பொய்சொல்லா மாணிக்கம் டாக்டர் வ.சு.ப.மாணிக்கம் அவர்கள். அவர்களைப் போன்ற பெரிய பேராசிரியர்கள் எல்லாம் என்னை உயர்த்தினார்கள். பேராசிரியர் சு.குழந்தைநாதன், பேராசிரியர் நமச்சிவாயம், பேராசிரியர் சுப.அண்ணாமலை, பேராசிரியர் நா.பாலுசாமி. இதுபோன்ற மிகச்சிறந்த அறிஞர் கூட்டம் என்னைச் சூழ்ந்திருந்தது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது போல இந்த அறிஞர்களுடைய செல்வாக்கு எனக்கு மிகுதியாக இருந்தது. அது எனக்குத் தமிழ்மீது ஆர்வமும், பற்றும் ஏற்படுத்தியது. நான் மிகப்பெரிய தமிழ்த்துறையில் படித்தவனில்லை. இருந்தாலும் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இந்தப் பெருமையெல்லாம் கிடைத்திருக்கிறது எனக் கருதுகிறேன். அதிலும் இந்தப் பேராசிரியர்களின் பங்கு மிகச் சிறப்பானது.

அந்தக் காலத்தில் நான் மேடைகளில் பேசுகின்ற சமயத்திலே எல்லாம் பார்த்தேன். எங்கு சென்றாலும் தமிழறிஞர்கள் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். அப்பொழுது எனக்கு ஓர் ஆசை வந்தது, ஏன் திருக்குறளை முழுமையாகப் படித்துவிடக் கூடாது என்று.

பள்ளி இறுதி வகுப்பு பயின்ற சமயத்திலேயே நான் 1330 திருக்குறளையும் முடிந்தவரை படித்துவிட்டேன். அதற்குப் பிறகு  திருக்குறள் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. உலகப் பொதுமறைக்கு நிகராக வேறு ஒன்றும் இல்லை என்பதை நன்றாகக் கண்டுகொண்டேன்.

திருக்குறளின் பெருமைகளை எல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். திரும்பத் திரும்பச் சொன்னாலும் பெருமை தரக்கூடிய வாசகம் இது.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே & தந்து

     வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

நாம் வள்ளுவரை உலகிற்குத் தந்தோம்; அவரிடம் இருந்து புகழை நாம் எடுத்துக் கொண்டோம்.

திருக்குறள் தமிழகத்தில் தோன்றினாலும் அது தமிழனுக்கு மட்டும் படைக்கப்பட்டது அல்ல அது உலகத்திற்குப் படைக்கப் பட்டது.

அதனால் தான் பாரதி மிகப்பெருமையாகப் பேசுகிறார்:

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

 வள்ளுவர் போல் இளங்கோ வைப்போல்

 பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,

 உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை”

திருக்குறளின் பெருமையைக் கேட்டுக் கேட்டு அந்தத் திருக்குறளே எனக்கு உயிர் மூச்சானது.

‘என்னைச் செதுக்கிய நூல்’ என்று பார்க்கும்போது திருக்குறள் ஒன்றை முழுமையாகப் படித்துவிட்டாலே அத்தனை நூல்களையும் படித்ததற்குச் சமம் என அறிந்து கொண்டேன்.

சில ஆண்டுகளுக்குமுன் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பாக மூன்று நாள் கருத்தரங்கம் நடத்தினோம் அது. ‘உலக அரங்கிலே திருவள்ளுவர்’ என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதில் மார்க்கஸ் அரேலியஸ், சாக்ரடீஸ், சுக்கிரநீதி, பெரியார், கீதை, நாராயண குரு எனப் பல அறிஞர்களுடன் அறநூல்களுடன் எல்லாம் ஒப்பீடு செய்து அறிஞர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டபொழுது, எல்லாவற்றிலும் திருவள்ளுவர் விஞ்சி நிற்கிறார் என்பதை உணர முடிந்தது.

திருவள்ளுவர் ஒருவரைப் படித்துவிட்டாலே, திருக்குறளின் 133 அதிகாரங்களைப் படித்து விட்டாலே 133 புத்தகங்களைப் படித்ததற்குச் சமம். இதைவிடச் சொல்வதற்கு ஒன்றில்லை. எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று திருக்குறளை எனது உயிர் மூச்சாகக் கொண்டேன்.

திருவள்ளுவர் ஒருவர்தான் அக உலகை அளந்தவர் என ஒருவர் பாராட்டினார். உங்கள் எல்லோருக்கும் வாமன அவதாரத்தைப் பற்றித் தெரியும். வாமன அவதாரத்தில் திருமால் குள்ள வடிவினனாக வந்து மாவலி சக்கரவர்த்தியிடம் 3 அடி நிலம் கேட்கிறார். குள்ளம் என்றால் 1 1/2 அடி குறள் வடிவினனாக வந்தார். மாவலியும் குள்ளமானவன் என்பதனாலே மூன்றடியைக் கொடுத்தார். திருமால் விசுவரூபம் எடுத்து ஓர் அடியால் இந்தப் பரந்த மண்ணுலகையும் இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் மூன்றாவது அடியை அவன் தலையில் வைத்து மாவலியின் அகந்தையை அழித்தார். திருமால் புற உலகை அளந்தார்; திருவள்ளுவர் அதே குறள் வடிவினால் அக உலகை அளந்தார். இதை அழகாக ஒரு புலவர் ‘திருவள்ளுவ மாலை’ என்ற புகழ் பெற்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

வள்ளுவர் பாவடியினால் அளந்தார், திருமால் காலடியால் அளந்தார் திருமால் புறவுலகை அளந்தார், வள்ளுவர் அகவுலகை அளந்தார். இரண்டு பேரும் குறள் வடிவிலே அளந்தனர். திருமாலும் வள்ளுவரும் ஒருவரே என மிக அழகாகப் பாடுகிறார் புலவர். அந்த வகையில் அக உலகை அளந்த திருவள்ளுவர் மீது எனக்கு ஓர் உயிர்ப்பு ஏற்பட்டது. அது உயிர் மூச்சாக இருந்தது. திருக்குறளைப் படித்தாலே போதும், நம்முடைய வாழ்க்கை செம்மையாகும் என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையில் வள்ளுவத்தை மிகப்பெரியதாகக்  காட்டின.

முதலில் படிக்கின்ற காலத்திலே திருக்குறளின் பெருமை அவ்வளவு பெரியதாகத் தெரியவில்லை. வாழ்க்கையில் சிக்கல்களும் பிரச்சினைகளும் சோதனைகளும் வரும்பொழுது தான் திருவள்ளுவரின் அருமைகளை பெருமைகளை உணர முடிந்தது. திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்று, நாம் வாழ்கின்ற காலத்திலும் இங்கு இருக்கக்கூடிய நிகழ்காலச் சிக்கல்களுக்கும் எதிர்காலச் சிக்கல்களுக்கும் தீர்வு காண்பவர்.

திருக்குறளைப் படிப்பது இலக்கியச் சுவைக்காகவோ, இன்ப நலத்திற்காகவோ மட்டும் இல்லை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

 தெய்வத்துள் வைக்கப் படும்.”       (50)

என்கிற நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் எனச் சொன்னால் திருக்குறள் ஒன்றைப் படித்தாலே போதும் என்ற உணர்வோடு திருக்குறளின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. திருக்குறளில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை எனக் கண்டு கொண்டேன். அதுபோல வாழ்க்கையில் பிரச்சினை என்று வரும் பொழுது (எனது அனுபவத்தைச் சொல்கிறேன்) திருக்குறளைப் புரட்டிப்பார்ப்பேன்; அதில் தீர்வு இருக்கும். எனக்கே வியப்பாக இருக்கும். இது மூட நம்பிக்கையாகக் கூட இருக்கட்டும். ஆனால் இந்த வகையில் தீர்வு என்ன என்பதைக் கண்டு பிடித்திருக்கிறேன்.

மகாத்மா காந்தி அவர்களை மாற்றியது எல்லாம் புத்தகங்கள்தான். ஜான் ரஸ்கின் எழுதிய ஹிஸீ ஜிஷீ ஜிலீமீ லிணீst என்ற புத்தகமும், அவர் பார்த்த அரிச்சந்திர நாடகமும் தான் காந்தியடிகளை மகாத்மா ஆக்கின.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

     செய்யாமை செய்யாமை நன்று” (297)

என்பது வள்ளுவம். காந்தியடிகள் இரண்டு கொள்கைகளைக் கைக்கொண்டார்: அகிம்சை, கொல்லாமை. அந்த அகிம்சையையும், கொல்லாமையையும் திருவள்ளுவர் ஒன்றாகச் சொல்கிறார்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்

     பின்சாரப் பொய்யாமை நன்று.” (323)

காந்தியடிகள் போற்றியது எல்லாம் உண்மையையும் நேர்மையையும் கொல்லாமையையும், அகிம்சையையும் தான். வீரனுக்கு உரியது என்று போற்றி, விடாது அவற்றைக் கடைப்பிடித்தார். அவர் வாழ்க்கையிலே மிகப்பெரிய திருப்பு முனைக்குக் காரணமாக இருந்தது புத்தகம்தான். அடிகள் சொல்கிறார்: “பிரச்சினைகள், துன்பங்கள் வரும் போதெல்லாம் என்னை மாற்றியது கீதை தான். எனது பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வைக் கீதையில் காண்பேன்.”

அதுபோல என்னுடைய வாழ்க்கையில் பிரச்சினைகள், துன்பங்கள் முன் வந்த பொழுது திருக்குறள்தான் முன்னின்றது. மிகச்சிறந்த புத்தகம் நம் கையில் இருக்குமானால் அது நம்மை உருவாக்குகிறது. சில புத்தகங்களை நாம் படித்திருக் கிறோம். ஆனால் அவற்றின் பெருமையை உணர்ந்திருக்க மாட்டோம்.

சில நூல்கள் படித்து அப்படியே மகிழ்வதற்கு மட்டும் இருக்கும். இலக்கியம் இலக்கியத்திற்கு மட்டும் இருக்கும் ஆனால் திருக்குறள் அப்படியல்ல. ஓதி உணர்வதற்கும் பிறர்க்கு உரைப்பதற்கும் உரிய நூல் அது.

“ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்

     பேதையின் பேதையார் இல்”         (834)

என்பது வள்ளுவம்.

ஓதுவது சிரமம்; ஓதி உணர்வது அதை விடச் சிரமம்; உணர்தல் சிரமம்; உணர்ந்ததை உணர்ந்தபடியே சொல்வது அதை விடச் சிரமம்.

“இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

     உணர விரித்துஉரையா தார்”               (650)

படித்ததை சிரமப்பட்டு விளக்கிச் சொல்லி அதைப் பரப்புவதும் சிரமமானது. கொத்தாக மலர் மலர்ந்திருக்கிறது. அந்த மலர்கள் மணம் வீசாத காகிதப் பூக்களாக இருந்தால் பயனில்லை இவைகளையெல்லாம் தெரிந்தும், பிறர்க்கு உணர்த்தியும், சிரமப்பட்டு தாம் படித்ததை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழாமல் போய்விட்டால் அவன் பேதையிலும் பேதை என்கிறார் வள்ளுவர். ஆகவே திருக்குறளைப் படிக்கின்ற நோக்கமே அதை வாழ்வியல் நூலாக, வருகின்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியதாக இருப்பதுதான் என்பதைக் கண்டேன்.

கனடா நாட்டுப் பயணம்

கனடா நாட்டுப் பயணம்

Image result for canada

விழுமிய திருக்குறள் பிறந்த நம்நாடு, நழுவவிட்ட அந்த நல்லுணர்வை ஏக்கத்துடன் கனடா நாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை எண்ணத் தொடங்கினேன். அமெரிக்காவில் இத்தனை நாட்களும் எப்படியோ ஓடிவிட்டன!

தமிழில் ‘நல்வரவு’ கூறும் திருநாடு

உலக நாடுகளுள் சோவியத் யூனியனுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய நாடு நோக்கிப் பயணமாக வேண்டும். அதுதான் கண்ணாரக் காணவேண்டிய கனடா!

வட அமெரிக்கக் கண்டத்தின் வடபாதி முழுதும் வியாபித்துள்ள இயற்கைக் கொலுமண்டபம் இந்த நாடு. கிழக்கே அட்லாண்டிக் சமுத்திரம்; மேற்கே பசிபிக் சமுத்திரம்; தெற்கே அமெரிக்கா; வடக்கே ஆர்க்டிக்.

எவ்வளவு பெரிய நாடு! ஆனால் மக்கள்தொகை மிகக்குறைவு. சுமார் 3கோடி மக்கள்; மூன்று நூற்றாண்டுக் குடியேற்ற வம்சா வழியினர்.

வடதுருவத்தை ஒட்டியுள்ள கனடாவின் குளிர்காலப் பருவம் மிக நீண்டது; கோடைப் பருவம் மிகச்சுருங்கியது.

நம் நாட்டில் மூன்றே பருவங்கள்தான் உண்டு கோடைக் காலம், மிகுகோடைக் காலம், சுடும்கோடைக் காலம்!

ஆனால் கனடாவைப் போன்ற நாடுகளில் மட்டும் இயற்கை மிகுந்த கருணை காட்டுகிறது! இங்கு உள்ள காடுகளின் அடர்த்தியை, நீரோடைகளின் பாய்ச்சலை, பயிர்களின் பசுமையை, மக்களின் வளமையைப் பார்த்தாலே… இயற்கையின் பாரபட்சம் புரிகிறது.

இங்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்து முதன்முதலில் குடியேறியவர்கள் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும். அவர்களுக்குள் மூண்ட ஆதிக்கச் சண்டை ‘ஏழாண்டுப் போர்’ என வருணிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கை ஓங்கியதால் – மாட்சிமை தங்கிய மன்னர் ஆட்சியின் கீழ் . டொமினியன் ஆகி, ஆஸ்திரேலியாவைப் போல் காமன்வெல்த் அங்க நாடாகச் செல்வம் கொழிக்கிறது. ஆங்கிலமும் பிரெஞ்சும் அரசு மொழிகள். அங்கும் மொழி- இனச் சிக்கல் உண்டு. எனினும் பொதுவளர்ச்சிக்கு ஊறு செய்யாமல் ஒத்துப் போகிறார்கள். சமீப ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு சரணாலயமாகவும் இந்நாடு ஒருவகையில் தமிழ் மானம் காக்கிறது!

இயன்றவரை ஈழத் தமிழர் மானம் காக்கக் கைகொடுக்கும் கனடாவில் இனிய தமிழ் மணமும் கமழுவதை நுகர அரிய வாய்ப்பு இப்பயணத்தில் கிட்டியது.

சமச்சீரான வெப்பதட்பமுடைய வாழ்க்கைக்கு உகந்த நாடுகள் என உலகில் ஆஸ்திரேலியாவையும், கனடாவையும் சொல்லுவார்கள். அமெரிக்காவில் பொதுவான, ஆங்கிலக் கலாச்சாரப் பின்னணி புலப்படுவதுபோல் அதையடுத்துள்ள கனடாவில் பிரெஞ்சக் கலாச்சாரச் சூழல் வெளிப்படை யாகத் தெரியும் என்றும் சொல்லுவார்கள். அதுவும் உண்மை எனக் கண்டறிய அதிவேகமாக அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க்கிலிருந்து கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் இடங்களில் எல்லாம், நம்மை வரவேற்று உபசரிக்க நண்பர்கள் இருந்துவிட்டால் எந்த நாட்டிற்கும் போய்வரலாம். நற்பயனாக எங்களுக்கு இந்தப்பேறு எங்கும் கிட்டியது. சென்னையில் உள்ள பிரபல டாக்டர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருமதி. ரீத்தா, திரு.பார்த்திபன் அவர்களின் துணைவியார். இவர் அவர் சகோதரி சத்யா, மதுரையைச் சேர்ந்த திரு.அசோகன், கானடியன் ஆப் செட் ஸ்கிரீனிங் எனும் நிறுவனத்தை நடத்தும் ரோட்டரி கழக உறுப்பினர் திரு.ஸ்டூவர்ட் ஜெரோம், திரு.விஜயநாதன் மற்றும் பலர் எங்களுக்கு இனிய வரவேற்பு அளித்தனர்.

நாங்கள் கனடா போய்ச் சேர்ந்ததும் அமெரிக்கா விலிருந்து திரு.நாராயணன் குடும்பத்தினரும் எங்களுக்குத் துணையிருக்க வழிகாட்ட வந்து (அங்கிருந்து சுமார் 400 மைல்தான்) சேர்ந்து கொண்டனர். கடலை, மலையை, யானையை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள். அந்தப் பட்டியலில் இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம். நீர் அருவி, ஆலயக் கோபுரம்! அதிலும் நாங்கள் பார்த்த நயாகரா அருவி (நீர்வீழ்ச்சி) உலகிலே மிகப்பெரிது, அதன் பிரமாண்ட தோற்றமும், இடையறாது கொட்டும் நீர்ப் பெருக்கும், வண்ண வண்ணக்கோலமும் நெஞ்சைப் பின்னிப் பிணைத்தன.

நம் பாண்டிய நாட்டுச் சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாட்டில் தொடரும் வரிகளான ‘கல்பொருது இரங்கும் மல்லல்பேர்யாற்று நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப்படூஉம்’ என்ற வரிகள் இப்பெரும் நீர்வீழ்ச்சியைக் கண்டவுடன் தோன்றின.

தேக்கிவைக்கப்பட்ட செல்வம், தேக்கிவைக்கப்பட்டு பயன்படுத்தாத நீர் போல அலையாமல், நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல, பரந்து விரிந்து பாலை நிலத்தை எல்லாம் செழிப்பாக்க வேண்டும் என்று நினைத்தேன். அமெரிக்காவிலும் கனடாவிலும் உற்பத்தியாகும் பொருட்களை நுகர்வோர் அதிகமாக இருப்பதனால், அங்கு பணப்புழக்கத்தின் வேகம் காரணமாகப் பொருளாதார நிலையும் மேம்பட்டு இருக்கிறது. நமது நாட்டிலும் பணப் புழக்கம் தேங்கி இருக்காமல் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் நம் வளர்ச்சியும் மேம்படும்.

உலகிலேயே மிகப் பெரிய சியென் கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். சிகாகோவில் நாங்கள் பார்த்த சியொ டவர் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு இதைப்பார்க்க வந்தபோது மலைப்புத் தோன்றவில்லை. ஆனால் மனதைத் தொடும் ஒரு காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அந்த மாபெரும் டவரின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வாசகத்தில் ‘நல்வரவு’ எனத் தமிழில் மின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு உலகில் உள்ள பலமொழிகளில் எழுதியிருப்பினும் இந்தியா விலிருந்து தேர்ந்தெழுதிய நான்கு மொழிகளில் நமது தமிழ் மொழியும் ஒன்று என்றவுடன் என் எண்ணமெல்லாம், இதயமெல்லாம் பூத்தன; வான் முட்ட உயர்ந்திருந்த கோபுரத்தின் படிக்கட்டுக்குச் செல்லக் கால்கள் தயங்கின. “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும், வண்மொழி வாழியவே!” என மகாகவி பாரதி அன்று பாடினானே… அந்த வானத்துக்கே இந்தத் தமிழ் வாசகம் என்னைத் தூக்கிப் போவது போலப் பிரமையுற்றேன். அந்த வாசகத்தின் முன்னர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

‘நல்வரவு’ எனத் தமிழ் வரவேற்பு அளித்த தமிழன்பர்கள் உள்ளமும், இல்லமும் எங்களுக்குச் சென்றவிடமெல்லாம் நல்வரவு கூறின.

கனடாவிலிருந்து, ஏற்கெனவே திட்டமிட்ட எங்கள் ஐரோப்பியப் பயணத்தில் விடுபட்டுப் போயிருந்த பிரெஞ்சு நாட்டுக்குப் போக விசா எடுக்க முடியும் என்றார்கள். அந்த முயற்சியில் நண்பர்கள் ஓடி ஓடி அலைந்தார்கள். ஆனால் 45 நாள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் உதட்டைப் பிதுக்கி விட்டார்கள். நான்கு நாட்கள் இதில் வீணாகிவிட்டன.

கனடாவிலும்  விரிவான பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தரவும் முடியவில்லை. அதற்கேற்ப எங்கள் பயணத்தை நீட்டிக்கவும் இயலவில்லை. நண்பர்கள் வீடுகளில் பலரும் வந்து கூடி கலந்துரையாடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காகவே ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திரு.பார்த்திபன் – ரீத்தா தம்பதியினரின் உபசாரத்தை மறக்கவே முடியாது. அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்துத் தமிழன்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர். ஈழத்தின் கண்ணீர்க் கதையும் அங்கு விரைவில் தமிழர் நல்வாழ்வுக்கு உரிய சுமுக நிலை ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் கவலையும், எல்லாப் பிரிவினரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய அவசியம் பற்றியும் கருத்துக்கள் தங்குதடையின்றி வந்தன. யாழ்ப்பாணத் தமிழன்பர்கள் கூறியவற்றைக் கேட்ட போது எங்கள் கண்கள் கண்ணீர்க் குளமாயின.

பின்னர் ‘திருக்குறள் பெருமைகளும் நமது பண்பாட்டுச் சிறப்புகளும்’ பேசப்பட்டன. இவற்றைக் கேட்பதில் அங்கு உள்ளோருக்கு உள்ள ஆர்வத்தை, அக்கறையை நாம் இங்கெல்லாம் காணமுடிவதில்லை. தன்னிடம் பூத்த தாமரையின் அழகு குளத்துக்குத் தெரியவில்லை என்றால் எங்கே போய் முறையிடுவது?

உலகத் திருக்குறள் பேரவையின் நோக்கங்கள் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதன் கிளை ஒன்றைக் கனடாவிலும் நிறுவத் தாம் எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக உற்சாகம் அளித்தனர்.

கனடாவில் சீக்கியர்களும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர். சீக்கியர்களின் பற்றுறுதிக்கும் உழைப்புக்கும் நிகராக நம் தமிழர்களும் விளங்கக்கண்டு பெருமிதமும் பேருவகையும் கொண்டேன்.

கலந்துரையாடல்களில் உற்சாகமாகக் கலந்து கொண்ட திரு.பார்த்திபன் ஒவ்வொரு வேளை விருந்தின்போதும் புதிது புதிதாக நண்பர்களைக் கூட்டி வருவார். நீண்ட உரையாடல்கள் தொடரும். சமயம், தத்துவம், கலை, இலக்கியம், தொழில், வாணிபம் என்றெல்லாம் கலந்துரையாடல் வலம் வரும். இவ்வுரையாடல்களில் எனக்கு ஏற்பட்ட பயனும் அனுபவமும் மிக அதிகம். அவற்றையெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டு இலண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அருமை நண்பர் திரு.பார்த்திபன், “உங்கள் பேச்சால் வசீகரிக்கப் பட்டேன்” என்றார். ஆனால் உண்மையில் வசீகரிக்கப் பட்டது நாங்கள்தான். கனடாவில் வாழும் நம் சகோதரர்களின் அன்பும் உபசாரமும் திருக்குறள் வாழ்வும் வாக்குறுதியும் எங்களை என்றென்றும் வசீகரித்துக் கொண்டன….!

“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

     அனைத்தே அன்பர் தொழில்”        (394)

எனப் புதுக்குறள் புனையும் ஆசை வளர்ந்தது!

குறள் நிலா முற்றம் – 15

 

நிறைவுப் பகுதி

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி

எளிய அன்பர்

ஆடி அசைந்தபடி – பின்னால் இருப்போரை மறைத்திருப்பவரிடம் – “ஐயா… உங்களைத் தானே? கொஞ்சம் அசையாமல் ஒரே நிலையில் உட்கார முடியாதா? உங்க முதுகுதான் தெரியுது…”

(அவர் சற்று சினத்தோடு திரும்பியபடி)

அவர்

“இப்ப என்னய்யா கெட்டுப்போச்சு? திரைப்படமா ஓடுது? நான் ஆடி அசைந்தால் உனக்கு என்னய்யா? நீயும் அதுக்கேற்றபடி நகர்ந்து கொண்டு, கேட்க வேண்டியது தானே?”

இன்னொருவர்

“புலவர் ஐயாதான் இப்படிப் பேசுறீங்களா? பெரியவங்களுக்குக் கோபம் இப்படி வரலாமா? அவர் ஏதும் தவறாகப் பேசிவிடவில்லையே? தனக்கு மறைக்கிறது என்று தானே சொன்னார்?”

புலவர்

“புலவர்னா – கோபமே படக்கூடாதா? நாங்க என்ன உணர்ச்சியில்லாத மரக்கட்டைகளா? நான் ஆடி அசைகிறேங்கிறாரு… என்னை யானைங்கிறாரா?”

முதலாமவர்

“நான் யானைன்னு சொல்லவில்லை ஐயா! நந்தி போல் மறைக்கிறீர்கள் எனச் சொல்ல நினைத்தேன். அதற்குமுன் இவ்வளவு கோபப்பட்டு விட்டீர்களே! இவ்வளவு சினமும் சீற்றமும்… சாதாரணக் காரியத்திற்கு வரலாமா?”

புலவர்

“நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடக்கும் போது – உன்னைப் போல ஆள் இடையே புகுந்து, விதண்டாவாதம் செய்தால் வெகுளி வராதா – ஐயா நீங்களே சொல்லுங்க.”

ஒருங்கிணைப்பாளர்

“அங்கே என்ன… வெகுளாமையைப் பற்றிய விவாதமா?”

முதலாமவர்

“ஆமாம் செம்மல் ஐயா! கொஞ்சம் அசையாமல் அமர்ந்து இருங்கள் என்றேன் – புலவருக்குக் கோபம் பொத்துக் கொண்டது. இதையே அந்த சப் கலெக்டர் ஐயா சொல்லி யிருந்தால், புலவர் பேசாமல் இருந்திருப்பார்; நான் எளிமையானவன் என்று ஏறி மேயப் பார்க்கிறார்…”

செம்மல்

“செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல்இடத்துக் காக்கின் என், காவாக்கால் என்?” என சினத்தைத்தான் வள்ளுவர் கேட்டார். உயர் காவல்துறை அதிகாரியிடமோ பெரிய பதவி வகிப்போரிடமோ கோபத்தைக் காட்ட முடியுமா? நம் வீட்டில் மனைவி, மக்கள், ஏவலரிடம் காட்ட முடியும். அதைத்தான் ‘சினம் செல்லும் இடம்’ என்கிறார் வள்ளுவர். அத்தகையோரிடம் சினம் கொள்ளாமல் இருப்பதுதான் உண்மையிலேயே வெகுளாமை என்கிறார்.”

அரசு அதிகாரி

“செல்ல இயலாத இடத்தைவிட, செல்லும் இடத்தில் சினம் கொள்ளுவது தீது என்றார் வள்ளுவர்.”

 

புலவர்

“‘சுருக்குக; செல்லா இடத்தும் சினம்’ – என நான்மணிக்கடிகையும் சொல்லியிருக்கிறதே?”

செம்மல்

“‘வெகுளியை யார்மாட்டும் மறத்தல் வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். ஏனெனில் – தீய பிறத்தல் அதனால் வருமாம்!”

அரசு அதிகாரி

“அதாவது – நாமெல்லாம் ஜிமீனீஜீமீக்ஷீ-ஐ அதாவது வெகுளியை விட்டுவிட வேண்டும். அது சாத்தியமா? ஜிமீனீஜீமீக்ஷீ உடைய முறுக்குக் கம்பிக்குத்தான் கட்டிடத்தைத் தாங்கும் வலிமை அதிகம். அதுபோல, நமக்கும் அவ்வப் போது ஜிமீனீஜீமீக்ஷீ  என்கிற கோபம் வர வேண்டும்.”

இன்னொருவர்

“அது  வந்தவுடன் போயும் விட வேண்டும்… (சிரிப்பு) புலவர் ஐயாவின் ஜிமீனீஜீமீக்ஷீ கொஞ்சம் குறைந்து விட்டது!”

கல்லூரி மாணவி

“ஐயா… புலவர் போலக் குணம் ஏறி நின்றார்க்குக் கோபம் வரலாமா? விசுவாமித்திரர் போலப் புராணகால முனிவர்கள் எல்லாம் கோபத்தால் சாபம் இட்டுப் பட்ட துயர்களை எல்லாம் படித்திருக்கிறோம்.”

செம்மல்

“குணம் எனும் குன்றேறி நின்றார் வெகுளி கொள்வது எல்லாக் காலத்தும் தீமை தருவது எனக் கருதக் கூடாது. அவர்களுக்கும் தகாதன நடக்கக் கண்டால் சினம் வரும். ஆனால் அந்த வெகுளி எனும் வெஞ்சினம் ஒரு கணமே நீடிக்கும்; அந்த நேர அளவே நீடிக்கவும் வேண்டும். இல்லாவிடில் அதுவே சேர்ந்தாரையெல்லாம் கொன்று விடும்.”

அரசு அதிகாரி

“திருக்குறள் செம்மலின் விளக்கம் குழப்பமாய்  இருக்கிறதே?”

செம்மல்

“குணம் எனும் குன்றேறியோர் இயல்பான சூழலில் நியாயமாகச் சினம் கொள்ளக்கூடாது. ஆயினும், தவிர்க்க முடியாத சூழலில் அவர்களுக்கும் வெகுளி ஏற்படுவது மனித இயல்பு. அத்தகைய சான்றோர் தன்னலம் காரணமாகச் சினம் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் சினம் கொள்வதும் பொதுநலன் கருதியதாகவே, சமுதாயச் சீர்கேட்டிற்கு எதிரானதாகவே இருக்கும். இராமபிரான் சினந்தார்; இயேசு பிரான் சினந்தார்.”

வருவாய்த் துறை உயர் அதிகாரி

“அண்ணல் காந்தி, பிரதமர் நேரு, வின்ஸ்டன் சர்ச்சில், ராஜாஜி, தந்தை பெரியார், மகாகவி பாரதி போன்றோர் வெளிப்படுத்திய வெகுளிக்கெல்லாம் சமுதாய நலனே காரணம்.”

வளனரசு

“அருமையான பட்டியலைத் தந்தார்கள்… ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது…’ என்ற நாட்டு வழக்கும் நம் நினைவுக்கு வருகிறதே…”

ஓரன்பர்

“சாதுக்கள் மிரளுவதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம்.”

செம்மல்

“வள்ளுவர் சாதுக்கள் எனச் சொல்ல வில்லை. அவர் குணம் எனும் குன்றேறி நிற்கவல்ல சான்றோரையே குறிப்பிடுகிறார். அத்தகைய ஏந்திய கொள்கையார் சீற்றம் கொண்டால், ‘இடைமுறிந்து வேந்தனும் வெந்து கெடும்’ என்றல்லவா எச்சரிக்கிறார். எனவே, வீட்டில் பெரியவர்கள், சமுதாயத்தில் சான்றோர் ஆகியோர் சினம் கொண்டால், அது ஒரு சறுக்கலையோ, வழுக்கலையோ சீராக்கிடவே எனக் கருத வேண்டும்.

நம் பாஞ்சாலி சபதத்திலேயே ஒரு காட்சி. பாஞ்சாலியைத் தாயமுருட்டிச் சூதில் தோற்றுப் பாண்டவர்கள் பரிதாபமாக நின்ற கோலத்தை ‘நெட்டை மரங்கள் போல’ நின்றார்கள் எனப் பாரதியார் ஆத்திரப்படுவதை நினைவூட்டுகிறார். அப்போது பாஞ்சாலி கொண்ட சினத்தால்தான் – அவர் போட்ட சபதத்தால்தான் பாரதப் போரே மூண்டது.”

அரசு அதிகாரி

“எங்கள் வீட்டில் எனக்கும் மனைவிக்கும் இடையே தினமும் பாரதப் போர்தான் போங்கள்!” (சிரிப்பு)

இன்னொருவர்

“அது நாங்கள் பார்க்க முடியாத போராக அல்லவா இருக்கும். அதை விடுங்கள்…”

மாணவி

“வள்ளுவர் ஓரிடத்தில் சினமே கொள்ளாதே எனச் சொல்லிவிட்டு – ஏந்திய கொள்கை யராயிருந்தால் அவர்கள் கோபப் படலாம் என்பது ஒரு முரணாகத் தோன்றவில்லையா?”

செம்மல்

“இதில் முரண் ஏதும் இல்லை.

‘சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

 நிலத்துஅறைந்தான் கைபிழை யாதற்று..’    (307)

வீணாகச் சினமே கொண்டால் – தரையிலே தானே அடித்துக் கொண்டு, கை வலிக்கிறதே என்ற கதை போன்றது, அது வீண் சினம்; வெற்றுப் புலம்பல்.

வள்ளுவர் கூறுவது – அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுக்க வல்ல- சான்றோரும் கூடச்சில சமயங்களில் கோபம் கொண்டே ஆக வேண்டும். அப்போது தான், சமுதாயத்திலும், குடும்பத்திலும் மக்கள் திருந்துவார்கள். அத்தகைய சினம் – ஆக்கச் சினம்.”

ஒருவர்

“எங்கள் வீட்டில் என் துணைவியார்தான் அடிக்கடி கோபப்படுகிறார்.”

இன்னொருவர்

“மனைவியை இங்கு வந்தும் விடமாட்டார் போலிருக்கிறதே! (சிரிப்பு)

அதற்குக் காரணம் – நீராகவும் இருக்கக்கூடும். நீவிர் சரிதான் என்றால் – வீட்டு அம்மாவை – ஒரு மனோதத்துவ டாக்டரிடம் கூட்டிச் செல்லும். உங்கள் உறவில் புதிய தத்துவம் பிறக்கும்.” (சிரிப்பு)

வருவாய்த் துறை அதிகாரி

“தம்பதியரிடையே உருவாகும் சினம். ஒரே நாளில் சமரசம் ஆகிவிட வேண்டும். இல்லை என்றால்… விரசம்தான்…”

செம்மல்

“நாம் அந்த விரசத்திற்கெல்லாம் போக வேண்டாம்… நம் மதுரையிலே அன்று நடந்ததை நினைப்போம். சிலப்பதிகாரக் காட்சி இது. மறுவாழ்வு தேடி மதுரைக்கு வந்த கண்ணகி, கணவன் கொலையுண்டு இறந்திடக் கையறு நிலையள் ஆனாள்… அப்போது…

புலவர்

“‘சான்றோரும் உண்டு கொல், சான்றோரும் உண்டு கொல்’ எனக் கேட்டாள்.”

செம்மல்

“அதைத்தான் நானும் குறள் செய்தியாகக் குறிப்பிட விரும்புகிறேன். தக்க சான்றோர்கள் தலையிட்டிருந்தால் தனக்கு இந்த அவலம் நேரிட்டிருக்க மாட்டாதே எனக் கதறுகிறாள். கண்ணகி அன்று கேட்டதைப் போல, இன்றும் கேட்கக்கூடிய நிலையில், வாழ்க்கைப் பாதையில் ஓரம் கட்டப்பட்டவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களது துயர் தீர்க்க – சினம் கொள்ளக்கூடிய அளவு- செல்லக் கூடிய – பொதுநல நாட்டமுடைய – சான்றோர்கள் நம்மிடையே வேண்டும்.”

பேராசிரியர்

“சமுதாயத் தொண்டர்களுக்கு – போர்க்குணம் வேண்டும். பிரெஞ்சுப் புரட்சியை அன்று தூண்டிடச் சினங்கொண்ட வால்டேர், ரூசோ போன்றவர்கள் – இக்காலத்தில் வேண்டும் என்கிறார் செம்மல்… ஆனால் அவர் மட்டும் சினம் கொண்டதை நாம் யாரும் கண்டதில்லை…” (சிரிப்பு)

செம்மல்

“சினம் என்பதிலும் இருகூறு உண்டு. சான்றோராயினும் ஆட்சித் தலைவராயினும் – சமூக எதிரிகளைச் சினத்தோடுதான் அணுக வேண்டும்; அகற்றவும் வேண்டும்.

‘ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தால் வரும்’ என்பார் வள்ளுவர். சமுதாயத்திற்குக் கேடு செய்வோரை அழித்தலும், சமுதாய நலனால் மகிழ்வோரை உருவாக்குதலும் எண்ணினால், தவத்தால் வரும் என்கிறார்.”

ஒருவர்

“ஐயா! புராண காலத்திலே – தவம் செய்த முனிவர்கள் கோபம் கொண்டதிலே ஒரு நியாயம் -நிவாரணம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம், தவசிகளே தடுமாறு கிறார்களே… போலித் தவசிகள் புகுந்து விட்டார்களே…”

செம்மல்

“அதனால் தான் வள்ளுவர்,

‘தவமும் தவம்உடையார்க்கு ஆகும்; அவம்அதனை

     அஃதுஇலார் மேற்கொள் வது’  (262)

எனச் சட்டம் போட்டுத் தடுத்துவிட்டார். சமுதாய ஒழுக்க நெறியைப் பழிப்பது போல, தம் வாழ்வில் சீர்கேடாக நடந்து கொள்வது தவம் இல்லை; அது ‘அவம்’ – சமுதாயக் கேடான பாவம் என்கிறார்.”

புலவர்

“தவம் செய்வார் தம் கருமம் செய்வார்..”

பேராசிரியர்

“உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை..”

செம்மல்

“தவத்தின் ஆற்றலாலும், ஒழுக்கத்தாலும் ஓங்கி நிற்கும் சான்றோர் தரும் வரமே… வாழ்வு… அத்தகையோரை வாழ்த்தி வணங்குவதே வாழ்க்கைப் பேறு.”

ஒருவர்

“இதுதாங்க.. இன்றைக்கு அவசியமான அறிவுரை; அறிவுடைமை!”

செம்மல்

“‘அறிவுடைமை’ என்ற அருமையான சொல்லை அன்பர் இப்போது குறிப்பிட்டுள்ளார். நம் நான்காம் அமர்வு நிலா முற்றம் நிறைவு பெற்று, உதய வேளை காணும் சமயத்தே இந்த அறிவொளிக் கேள்வி எழுந்துள்ளது.”

அரசியல் அன்பர்

“எங்கள் பொதுவுடைமை போன்ற சித்தாந்தங் களுக்கெல்லாம் அடித்தளமானது அறிவுடைமைத் தத்துவங்கள். வள்ளுவர் அறிவைத் தனிமனித சாதனையாகவும் சொல்கிறார்; சமுதாய வளர்ச்சியில் பாதையாகவும் விளக்குகிறார். எனவே இந்த அறிவுடைமைச் சிந்தனை யோடு குறள் நிலா முற்றம் விடியலைக் காணட்டுமே என்பது இங்குள்ள அன்பர்கள் கருத்து.”

பேராசிரியர்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”- என்பதற்கே ஒரு தனி ஆய்வரங்கம் நடத்தலாமே!

உதவி ஆணையர்

“அந்த மெய்ப்பொருளையும் நம் திருக்குறள் செம்மல் வழியாக, இப்போதைக்குக் கேட்போமே…!”

செம்மல்

“கல்வி, கேள்வி, அறிவுடைமை பற்றியெல்லாம் வள்ளுவர் அன்றே வரையறுத்த செய்திகள், இன்றுள்ள உலகப் பல்கலைக்கழகக் கல்வித் துறையாளர்களாலும் வியந்து பாராட்டத் தக்கவை.”

இடைமறிக்கும் அன்பர்

“‘கற்க கசடறக் கற்பவை…’ எனத் தொடங்கும் குறள் ஒன்று போதுமே…”

செம்மல்

“பல குறள்கள் உள்ளன. நான் கோடிட்டுக் காட்ட விரும்பும் நிலைகள் இரண்டே இரண்டு:

ஒன்று: குழந்தைப் பருவம் தொட்டுக் கற்க மேற்கொள்ளும் முயற்சி. இம்முயற்சி பலவகைப் படும்; வெவ்வேறு நிலைப்படும். பிள்ளைகள் கற்கக்கற்க – புதிய வற்றை அறிய, அறிய, அறிதொறும் அறியாமை புலப்படும்.”

புலவர்

“‘கல்வி கரையில, கற்பவர் நாள்சில, மெல்ல நினைக்கின் பிணிபல’ – என்ற பாடமே உள்ளது.”

ஒருவர்

“செம்மல் ஐயாவைப் பேசவிடுங்கள்.”

செம்மல்

“குழந்தைப் பருவந்தொட்டு – புதிய, புதிய படிநிலை களில் பயிலும் பிள்ளைகள் – அத்தகைய புதியனவற்றை அறியும் போதெல்லாம் உவகை அடைகிறார்கள்; மேலும் அறிய ஆர்வம் கொள்ளுகிறார்கள். அந்தக் கல்வியின்- ஒரு சொல் விளக்கம் – வளர்ச்சி, அறிவு ஒழுக்கம், சிந்தனை ஆகியவை ஒருங்கிணைந்ததொரு வளர்ச்சி. ஆனால், ஓரளவு படித்து, உலகியல் அறிந்தவர்களில் பலர்- கற்றவற்றின் எல்லையை அறியாமல், வீண் அகந்தையுடன் செருக்கித் திரிவார்கள். தாமின்புறுவது உலகும் இன்புறக்கண்டு காமுற மாட்டார்கள்; காழ்ப்புணர்வே கொள்வார்கள்.”

 

செம்மல்

“குழந்தைப் பருவந்தொட்டு – புதிய, புதிய படிநிலை களில் பயிலும் பிள்ளைகள் – அத்தகைய புதியனவற்றை அறியும் போதெல்லாம் உவகை அடைகிறார்கள்; மேலும் அறிய ஆர்வம் கொள்ளுகிறார்கள். அந்தக் கல்வியின்- ஒரு சொல் விளக்கம் – வளர்ச்சி, அறிவு ஒழுக்கம், சிந்தனை ஆகியவை ஒருங்கிணைந்ததொரு வளர்ச்சி. ஆனால், ஓரளவு படித்து, உலகியல் அறிந்தவர்களில் பலர்- கற்றவற்றின் எல்லையை அறியாமல், வீண் அகந்தையுடன் செருக்கித் திரிவார்கள். தாமின்புறுவது உலகும் இன்புறக்கண்டு காமுற மாட்டார்கள்; காழ்ப்புணர்வே கொள்வார்கள்.”

புலவர்

“அது புலமைக் காய்ச்சல், பொறாமைத் தீ…”

அரசு அதிகாரி

“அது புலவர்களுக்கு மட்டும் தானா?”

இன்னொருவர்

“அடக்கமில்லாத, அகந்தையுடைய எல்லோருக்கும் அந்தக் காய்ச்சல் வந்துவிடும்.”

மற்றொருவர்

“ஐயா! கற்றிலன் ஆயினும் மணிமொழியன் சொல்வதைக் கேட்டிடுக…”

செம்மல்

“‘சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு’ என முத்தாய்ப்பு இட்டுவிட்டார். தனக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தராத அறிவு – விழலுக்கு இறைத்த நீர். அது எல்லோரும் அஞ்சவேண்டிய பேதைமை. கல்லாதவர் அறிவுக்கும் கற்றவருடைய அறிவுக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு.

சிற்றறிவு வெண்மை எனப்படும் முதிராத புல்லறிவு. அது தன்னைத்தான் மதிக்கும் போலிப் பெருமிதம். கல்லாததைக் கற்றது போலக் காட்டிக் கொள்ளுவதும் ஒருவகைச் சிற்றறிவுதான். அத்தகைய ஏவலும் செய்ய இயலாது, தாமும் செய்யாத புல்லறிவாளர்கள் சமுதாயத்திற்கே நோய் போன்றவர்கள்.”

புலவர்

“வள்ளுவரின் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களில் புகுந்துவிட்டால் பொழுது புலர்ந்துவிடும்.”

செம்மல்

“அதனால்தான் பொழுது புலரும் முன்னரே – இன்பத்துப்பாலில் (அவையில் சிரிப்பு) இருந்து ஓரிடத்தைச் சொல்லி நிறைவு செய்ய முற்படுகிறேன்.”

ஒருவர்

“இன்பத்துப்பால் என்றால்… எளிதில் நிறைவு கண்டுவிட முடியுமா?” (மீண்டும் சிரிப்பலை)

செம்மல்

“நான், அன்பர் நினைக்கும் அந்த உணர்ச்சி இன்பத்தை, கிளர்ச்சி இன்பத்தைச் சொல்ல வரவில்லை. எதற்கு இணையாக வள்ளுவர் அறிவெனும் இன்பச் சோலையை உவமிக்கிறார் என்பதையே நினைவூட்டுகிறேன்.

‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்

 செறிதோறும் சேயிழை மாட்டு’      (1110)

அறிவு வளர, வளர – பழைய அறியாமை காணப்படு வதைப் போல, என் காதலி அல்லது மனைவியுடன் மகிழ, மகிழக் காதல் இன்பம் காணப்படுகிறது என்று என்றும் இனிக்கும் அந்தக் காதல் உறவோடு, அறிவின் தாக்கத்தையும் வள்ளுவர் அழகாக உவமிக்கிறார். (கைதட்டல்)

குறள் அன்பர்களே… ‘அறிதொறும் அறியாமை…’ என்பதற்குத் தெளிவான விளக்கம் கண்டோம்…”

ஒருவர்

“இப்போதெல்லாம் மூளைச்சலவை (ஙிக்ஷீணீவீஸீ ஷ்ணீsலீ) எனும் அறிவுச்சலவை தான் நடக்கிறது. ‘அறிவுச்செம்மை’ பற்றி யாரும் பேசுவதில்லை, கேட்பதில்லை.”

செம்மல்

“அதற்காகத்தான் இந்தக் குறள் முற்றத்தில் கூடியுள்ளோம். இங்கே, நாம் பெற்றது கலந்துரைப் பயனால் கிட்டிய ‘கேள்விச் செல்வம்’, ‘அல்லவை தேய, அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்’ என்றதைப்போல நாமெல்லாம் நல்லன வற்றையே, நமக்குள் பகிர்ந்து கொண்டோம். இந்த நயம் தரும் ஆக்க உணர்வே நாட்டில் செயலாக வேண்டும். வேலிக்கருவை போலத் தீய சக்திகள் தாமாகப் படரும் இடமெல்லாம், வேப்ப மரம் போன்ற நல்ல உணர்வுகளைப் பராமரித்துப் பாதுகாப்போம். இத்தகைய உணர்வுப் பரிமாற்றமே மனிதநேயம். இன்றைய சமுதாயப் போக்கில் இது போன்ற நல்லிணக்கமே தழைக்க வேண்டும்.”

புலவர்

“செவிக்கு உணவோடு, வயிற்றுக்கும் நல்லுணவு தந்த நம் பேரவை வாழ்க; நிலா முற்றம் – வளர்பிறையாக வளர்ந்து – மாதம் தோறும் முழு நிலாப் பேரொளி ஆகுக.”

(கைதட்டல்)

செம்மல்

“திருக்குறள் சுற்றத்தார்களே… நம் அழிவிலாச் செல்வமாகிய திருக்குறளை – நிலா முற்ற அரங்காக – நான்கு முறை கூடி – மனம் கலந்து உரையாடினோம்; மிகுந்த பயனுற்றோம். இத்தகைய பயனும் நலமும் தரும்- குறள் நிலா முற்றம் எனும் புதிய இலக்கிய விளக்க உத்தியை வகுத்திட்ட மதுரை வானொலிக்கு – உங்கள் சார்பாகவும் உலகத் திருக்குறள் பேரவை சார்பாகவும் உளமார்ந்த நன்றியைப் புலப்படுத்துகிறேன்.

இக்குறள் நிலா முற்றத்தை நடத்தும் பொறுப்பை எனக்குத் தந்தார்கள். என்னிலும் குறளை ஆழ்ந்து கற்ற அறிஞர்களிடையே நான் இந்தப் பொறுப்பை ஒரு அக்கினிப் பிரவேசம் போல ஏற்றுக் கொண்டேன்.

புலவர்

“‘அக்கினிப் பிரவேசம் இல்லை – அர்ச்சனைப் பிரசாதம் போல குறளை அள்ளி அள்ளித் தெளித்தீர்கள்.

குறிதவறாமல் செலுத்தவல்ல கருவிகளைக் கண்டுவிட்டோம். நெறிபிறழாமல் நடக்கவல்ல மனிதநேயம் சமூகத்தை உருவாக்கத் திருக்குறளையே சாதனமாக்கிக் கொள்ளுவோம்.

‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ (430) எனும் குறள் நெறியை ஏற்க – மீண்டும் மீண்டும் குறளுக்குப் புதுவிளக்கம் காணவும், அதன் வழியிலே புதியதோர் உலகு சமைக்கவும் புறப்படுவோம். எல்லோர்க்கும் குறள் நெறி வணக்கம்.”

Image result for வள்ளுவர்


 

 

குறள் நிலா முற்றம் 14


ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

திருக்குறள் பேரவை அன்பர் ஒருவர்

“நல்லாட்சி அமைவதெல்லாம் ஓட்டுப் போடும் வாக்காளர் கையிலும், தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர் தோளிலுமே உள்ளது. ஆனாலும் இந்த இரு சாராரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணராத அவலத்தை நம் திருக்குறள் பேரவையில் சில ஆண்டுகளுக்கு முன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அயர்வோடு, ஆறாத் துயரோடு ஆற்றிய உரை நம் பேரவை நண்பர்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் எனக் கருதுகிறேன். பேராசிரியர் அவர்களே உங்கள் நினைவில் இருந்தால் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லுங்கள்.”

மற்றொருவர்

“நெடுநேரம் அமர்ந்துவிட்டோம், அரசியலுக்குள் நுழைந்தவுடன் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.” (சிரிப்பலைகள்)

உணவுக்குப் பின் மீண்டும் நிலா முற்ற அவை கூடுகிறது.

பெரும்புலவர்

“தேர்தல், வாக்காளர் கடமை பற்றி எல்லாம், குன்றக்குடி மகாசந்நிதான அமரர் பிரான் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் நம்மிடையே ஆற்றிய அறிவுரை பற்றிப் பேராசிரியர் நினைவோட்டங் களைக் கொணருவார் எனச் சொல்லி உணவுக்காகக் கலைந்தோம்… ஆனால், தேர்தலில் உரிமையாய் வாக்களிக்கச் சாவடிக்கு வர, படித்தவர்களும் நல்லவர்களும் பொதுவாகத் தயக்கம் காட்டுவதால் பொல்லாதவர்கள் கள்ள ஓட்டுப் போட்டு விடுகிறார்கள்.”

இன்னோர் இளைஞர்

“அதுபோல, நிலா முற்ற அன்பர்கள் வாக்களிக்கச் செல்லத் தேர்தல் எதுவும் இப்போது நடக்கவில்லையே.. நம் திருக்குறள் பேரவையினர் தேர்தலைப் புறக்கணிக்க மாட்டார்கள். அது புனிதமான, குடியாட்சி உரிமை, கடமை என்றே கருதுவார்கள். எந்தத் தில்லுமுல்லுக்கும், பொய்ம்மை, கயமைக்கும் இணங்க மாட்டார்கள். அதை என் போன்ற இளைஞர் சமுதாயமும் கண்விழிப்போடு கட்டிக் காக்கும்.”

அரசு அதிகாரி ஒருவர்

“வாழ்க இளமைச் சமுதாயம்!” (கரஒலி)

ஒருங்கிணைப்பாளர்

“சமுதாயப் பிரச்சினைகளுக்கெல்லாம், திருக்குறள் வழியே தீர்வுகள் காண முற்படும் ஓர் இயக்கமே நம் திருக்குறள் பேரவை. சீரிய சிந்தனைகளும், உயரிய கோட்பாடுகளும் நிறைந்துள்ளது நம் நாடு; எனினும், அவை விடுதலைப் போர்க்கால இயக்கம் போல, இந்தக் குடியுரிமை ஆக்க நெறிக்குச் செயல்படாமல் போனதால், ஆளும் கட்சி, மாற்றுக் கட்சி என்றில்லாமல், ஆளுக்கொரு கட்சி என வேர்க் கொல்லிகள் புகுந்ததால் நம் ஜனநாயகம் சாக்காட்டை நோக்கிப் போகிறதே என நம் வணக்கத்திற்கு என்றும் உரிய அடிகளார் அவர்கள் பலமுறை நம் அரங்கங்களில் மட்டும் இன்றி – பேசும் மேடைகளில் எல்லாம் – உளம் வருந்தியது உண்டு, அவற்றுள் சில செய்திகளையாவது பேராசிரியர் சொல்லட்டும்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற அரசாகப் புதிய குடியாட்சி அமையும் எனச் சுதந்திரம் பெற்ற நாள் முதல் கனவு கண்டோம். ‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கும் இவ்வையகம்’ எனும் புரட்சிக் கவிஞர் உறுதியும், ‘முப்பது கோடியும் வாழ்வோம், வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ எனும் மகாகவி சபதமும் நனவாகும் என நம்பினோம்.”

இடைமறித்த மூத்த அரசு அதிகாரி

“ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வறுமையும் வரிச் சுமையும்தான் அதிகரித்து வந்தன. எப்படியேனும் செல்வத்தைச் சேர்த்து அதைக் கொண்டு ஆட்சிச் செல்வாக்குப் பெற்று, அவரவர் அனுபவிக்கும் புதிய ஜமீன்தார் ராஜ்யங்களே உருவாயின.”

மற்றொருவர்

“செல்வச் செருக்காலும் அதிகார பலத்தாலும் தனிச் சலுகையோடு, நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் பலரிடம் நீடிக்கும் வரை, சமுதாயத்தில் சமத்துவம் நிலவாது. இந்நிலை மாறாத போது புள்ளி விவரப்படி உற்பத்தி பெருகினாலும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடுவோர் எண்ணிக்கை குறையாது; புரட்சி ஓயாது. அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்படும் நிலை நீடிக்கும் வரை நியாயமான மக்களாட்சி மலராது.”

ஒருங்கிணைப்பாளர்

“சொல் வேறு, செயல் வேறு எனும் போக்கு உடையவர்கள் அரசியல் களத்தில் அதிகமாக நுழைந்தமை யால் ஏற்பட்டு வரும் அவக்கேடு இது. இதனைக் களைய வேண்டுமானால், வாக்காளர்கள், நல்லவர்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அடிகளார் வற்புறுத்தி வந்தார்கள்.”

பேராசிரியர்

“வள்ளுவர் மன்னராட்சிக் காலத்தே வாழ்ந்து சமுதாயக் கோட்பாடுகளை வகுத்தவர் எனினும்- குடிதழுவிக் கோலோச்சும் மக்களாட்சி முறையை, அப்போதே, முதன்முதலில் சொல்லிவிட்டார் என்பது அடிகளாரின் உறுதிப்பாடு. அவர் கொடுங்கோன்மை புரிந்த அரசுகளையும் அறிந்திருந்ததாலோ என்னவோ, அதனை நீக்கி- நல்லாட்சி நடத்தும் அரசை அமைப்பதே குறளின் குறிக்கோள் எனப் பல அதிகாரங்களில் வரையறுத்தார். இந்தக் குடியாட்சி வரையறுப்பின் அடித்தளம் வாக்காளர்கள். இந்த வாக்காளர்களின் அரசியல் அறிவு, தகுதி ஆகியவற்றிற்கு ஏற்பவே ஆட்சியும் அமையும்.”

மற்றொரு பேராசிரியர்

“மக்கள் ஆட்டு மந்தைகளாக இருந்தால் ஓநாய்களே ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஒரு மேலை நாட்டு அரசியல் ஞானியின் அறிவுரை” (அரங்கில் கர ஒலி)

பேராசிரியர்

“அடிகளாரின் கருத்தைத் தொடருகிறேன்; நாம் நமது நாட்டைச் சொத்தாகக் கருத வேண்டும்.”

ஒரு புலவர்

“அதனால்தான் அவரவர் பங்குகளைச் சுரண்ட ஆசைப்படுகிறார்கள்” (சிரிப்பலை)

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நாடு நம் சொத்து என்பது போல, நாமும் நாட்டின் சொத்து எனப் பெருமையோடு கருதி, கடமைப் பொறுப்போடு செயல்படத் தூண்டி வந்தார். வளர்ச்சி எனும் திட்டப் பணிகளைக் காரணம் காட்டி இதுவரை நம்நாடு வாங்கியுள்ள வெளிநாட்டுக் கடன் சுமை எப்போது இறக்கி வைக்கப்படுமோ என ஏங்கினார். எனவே பொருளாதாரச் சீரழிவை இப்போதாவது தடுத்து வளம் செழிக்கும் பாதைக்கு நாட்டைக் கொணரவல்ல நல்ல ஆட்சியைத் திறம்படத் தேர்ந்தமைக்கப் பல உரைகளில் தொடர்ந்து மன்றாடினார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் நாட்டில் வசியும் வளனும் சுரப்பதை விட, நாள்தோறும் பசியும் பகையும் பெருகக் கண்டு, நம் அடிகளார் கண்ணீர் மல்கியதை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அதனால்தான் – நல்குரவோடு பல்குறைத் துன்பங்களும் சென்றுபடும் நிலை வந்தாக வேண்டும் என வலியுறுத்தினார்.”

பேராசிரியர்

“நமது நாடு பசி, பிணி, செறுபகை என்பனவற்றில் இருந்து விடுதலை பெறுவது ஒரு புறம் இருக்க, நாடு தழுவிய வளர்ச்சி நிலைபெற வேண்டுமானால், நமது நாட்டின் அளப்பரிய ஆற்றலான மனித வளத்தை மூலைக்கல்லாகக் கொண்டே இதர கட்டுமானங் களையும் முறையாக எழுப்ப வேண்டும் எனக் கட்டளையிட்டார், திட்டமும் தந்தார் மகா சந்நிதானம் அவர்கள்.”

பெரும்புலவர் செல்வ கணபதி

“அறிவியலையும் கிராமப்புறத் தொழில் களையும் ஓரணியில் கொணர்ந்து, புதுமையான வளர்ச்சித் திட்டங்களை…”

இடைமறித்த அன்பர்

“சுவாமிகளின் இந்த ஒருங்கமைப்புத் திட்டத்தைக் ‘குன்றக்குடித் திட்டம்’ (ரிuஸீக்ஷீணீளீuபீவீ றிறீணீஸீ) என மைய அரசே பாராட்டியது. ஆனால் வழக்கம் போல அத்திட்டத்தை ஊர்தோறும் வளர்க்காமல் தயங்கியும் நின்று கொண்டது.”

பேராசிரியர்

“அடிகளார் பெருந்தகை நம்மவர் உழைப்பெல்லாம்- சாதி – சமய – மொழிச் சிக்கல்கள் போன்ற வேண்டாத, உடனடிப் பயனற்ற, நாட்டுக்கு ஊனம் தரக்கூடிய பிரச்சினைகளிலேயே செலவிடப்பட்டு, விழலுக்கு இறைத்த நீராகிறதே எனவும் வேதனையுற்றார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் முன்பே குறிப்பிட்டது போல… ‘பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும்’ நம் நாட்டில்தான் அதிகம் என்பது அடிகளார் வருத்தம்.”

அரசு அதிகாரி

“நம் ஊர்களில் ஊர்வலமோ, போராட்டமோ, கோஷமோ, கொடி பிடிப்போ இல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் மனப்போக்கும் அப்படி, ஆட்சியாளர் மனப்பக்குவம் இன்மையும் அப்படியே.”

திருக்குறள் செம்மல்

“‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்லது அரசு’ (385) – எனும் குறளில் குன்றக்குடி அடிகளார் ‘வகுத்தல்’ எனும் சொல்லுக்கே, செயலுக்கே அதிக அழுத்தம் தருவார். நாட்டில் உருவாக்கப்பெறும் உற்பத்திப் பொருள்கள் எல்லாம் உரியவாறு மக்கள் நுகர்வுக்குப் பயன்படுவதில்லையே? செல்வம் மறுமுதலீடாக மீண்டும் சுழற்சிக்கு வருவதில்லையே? வேலை வாய்ப்பும் பெருகுவதில்லையே! என்பது அடிகளாரின் வள்ளுவச் சிந்தனை, ஏக்கம்.”

பேராசிரியர்

“நமது நாட்டில் ஆட்சியை அமைக்க உதவும் களம்- தேர்தல், அத்தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு ஏற்கக் கூடிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க உதவும் உரிமை – வாக்குச்சீட்டு. ஆற்றல் மிக்க, புனிதமான இந்த வாக்குச் சீட்டால் நல்லவரை, ஒழுக்கத்திலும் செயலிலும் வல்லவரைத் தெரிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த நல்லவர் – தனி நபராக ஒற்றைப் பனையாக நின்றால் ஏதும் செய்ய முடியாது. ஏனெனில் குடியாட்சியின் கட்டுமானம் – கட்சி அமைப்பு. நாணயமானவர்கள் இடம்பெற அதிக அளவில் முன்வந்தாக வேண்டும் என்பது அடிகளார் அவர்களின் விருப்பம். அப்போதுதான், ‘சான்றோர் பழிக்கும் வினை’ என்பன தொடரமாட்டா. வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே. அதை நிறைவேற்றாத வரை நாணயமானவர்கள் என எப்படி ஏற்க முடியும்?”

ஒருங்கிணைப்பாளர்

“இதற்கெல்லாம் அடிப்படை நல்ல குடிமக்களாக நாம் அமைவதுதான்.”

இடையில் ஒருவர்

“இப்பொழுது குடிமகன்கள் நிறையப் பேர் பாதையெங்கும் காணப்படுகிறார்கள். அத்தகையவர் களுக்குப் பஞ்சமே இல்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்ல செங்கற்களால் நல்ல கட்டிடம் எழும்பும். அது போல நல்ல குடிமக்களால் – ‘வரப்புயர’ என ஔவை சொன்னது போல – வீடும் நாடும் உயரும். நாடு என்பதன் நுண்துளி வட்டம் அவரவர் குடி எனும் குடும்பம். எனவேதான் வள்ளுவர் ஒவ்வொருவரும் உழைப்பால் தம் நிலையை உயர்த்தி – தாம் பிறந்து வளரும் குடியையும் மேம்படுத்த முற்பட்டாலே – நாடு தானாகச் செழித்தோங்கும் எனக் குடிமைப் பண்பை வலியுறுத்தினார். அத்தகையோர் பருவம்- காலம் – பொழுது பாராமல், கடுமையாக உழைத்துக் குடிமானம் காப்பர். ‘பொதுப்பணியில் கடமையைச் செய்யச் சோர்வடைய மாட்டேன்’ என நினைத்தாலே – முற்பட்டாலே – அதைவிடப் பெருமையின் பீடுடையது இல் என்று ஊக்கு விக்கிறார் வள்ளுவர். இந்த நாட்டின் ஒவ்வொரு உரிமை மகனும், மகளும் தன்னலம் இல்லா உழைப்பால், நிர்வாகத் திறமையால், வளர்ச்சி மேலாண்மையால் தன் குடியை நிமிர்த்தி – நாட்டையும் உயர்த்த – பெருமையுடனும் உறுதிமாறா வீரப்பொறுப்புடனும் மார் தட்டிப் புறப்பட்டு அணிவகுத்தால் நம் இந்தியத் திருநாடு, பாரதி பாடியது போல் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ ஆகும். நம் பெருமைக் கெல்லாம் உரிய தாயகம் ஆகும். என நம் தவத்திரு அடிகளார் கண்ட கனவை, அதற்கும் பல ஆண்டுகட்கு முன்னரே, ‘மண் பயனுற வேண்டும் – வானகம் இங்கு தென்பட வேண்டும்’ என மகாகவி பாரதி வேண்டிய வரத்தை – நம் காலத்திலேயே நாமே நடைமுறை ஆக்க உறுதி பூணுவோம். அதில் வெற்றியும் காண்போம். இந்த உறுதியுடன் நிலா முற்ற அரங்குகள் பலவற்றில் ஒன்று கூடிச் சிந்தித்து ஒரு புதிய இலட்சிய ஓவியத்தை வரைந்து தந்துள்ள உங்கள் அனைவர்க்கும், வானொலிக்கும், உலகத் திருக்குறள் பேரவை சார்பாக உளமார்ந்த நன்றி கூறுகிறேன். நமது நிலா முற்றம் மீண்டும் ஒரு முழுநிலா இரவில் கூடும். வள்ளுவரின் நிருவாகவியல் சிந்தனைகள் பற்றியும், திருக்குறளைத் தேசிய நூலாக்குதல் பற்றியும் ஆராயும், ஆவன செய்யும். ‘புகழ்ந்தவை போற்றிச் செய்தல் வேண்டும்’ எனும் வள்ளுவ வாழ்த்துடன் விடை பெறுவோம்.”

குறள் நிலா முற்றம் 13

ஒருங்கிணைப்பாளர்

“உபதேசம் வெறும் ஊறுகாய் போல மட்டும் இருந்து விடலாமா? பற்றே வேண்டாம் என்பதை விட, நாட்டின் மீது பற்றுக்கொள்க, நல்ல செயல்களில் நாட்டம் கொள்க என வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் மக்கள் சக்தி இயக்கங்கள் வளரவேண்டும், வளர்க்கப்பட வேண்டும்.”

அரசு அதிகாரி

“பசிப்பிணியைப் போக்க அரசு பல திட்டங்களைப் போட்டு வருகின்றது. பசிப் பிரச்சினை மற்றும் வேலை இல்லாத் திண்டாட்டம் என்பன பெருகும் மக்கள் தொகையாலும் இதர நிர்வாக முறைகளாலும் தவிர்க்க முடியாத பிரச்சினைகளாக நீடிக்கின்றன. இதைச் சமாளிக்க அரசு வரிகளைக் கூட்டினால் எதிர்ப்பு வலுக்கிறது.”

பேராசிரியர்

“இப்போதெல்லாம் குடியாட்சி செலுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு பெரும்பாலும் வரிகளை மக்கள் ஒரு கடமையாகத் தாமாக முன்வந்து செலுத்த ஊக்கம் தருவதில்லை. கசக்கிப் பிழிய முற்படுவதால் மக்களில் பலர் வரி கட்டாது ஏமாற்றப் பார்க்கிறார்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் பொதுவுடைமைச் சமுதாயம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது. எனவே வரிகளைப் பெருக்கி, வசதிகளைப் பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படுகின்றது. அவ்வாறு வரி தண்டுவதிலும் ஒருவகை மனிதநேயப் பாங்கு இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நியதி.. அனைவருக்கும் தெரிந்த குறள்தான் அது.

‘வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு.’         (552)

ஆட்சி அதிகாரத்தோடு, முறை கடந்து பொருளைக் கைக்கொள்ளுவது, பாதை நடுவே வேலோடு நின்ற கள்வன், பொருளைக் கொடு என அச்சுறுத்திப் பொருளைப் பறித்துச் செல்வதைப் போன்றது என அடித்துச் சொல்கிறார் வள்ளுவர். நல்லாட்சி பற்றிப் பேசும் போது, வெற்றிதருவது கோல் எனப் பேசிய வள்ளுவர், கொடுங்கோன்மையால் கசக்கிப் பிழிந்து வரிபெறுவது அருளற்ற ஆட்சி, அது நிலத்துக்குச் சுமை, கொள்ளையர் ஆட்சி என்றெல்லாம் சாடுகிறார்.”

பெரும்புலவர்

“நன்முறையில் வரி பெறுவதையும் தீய வழியில் வரி பறிப்பதையும் பற்றிய புறநானூற்றுப் பாடலில் வரும் யானை பற்றிய உவமையை இங்கே நினைவில் கொள்ளலாம். ஒருமா பரப்பளவுள்ள நிலமாயினும் அதில் விளையும் நெல்லை அளந்து யானைக்குத் தீனியாகப் போட்டால், அது பல நாட்களுக்கு வேளை தவறா உணவாக நீடிக்கும். அதை விடுத்து, யானையை அவிழ்த்துவிட்டு, நீயே போய் உண்டு கொள்ளலாம் என விட்டோமானால் அதன் வாயில் புகும் நெற்கதிரை விடக் காலால் மிதிபட்டு அழியும் பயிரே பல மடங்கு ஆகும். நூறு செறு நிலப்பரப்பில் விளைந்தவை எல்லாம் ஓரிரு நாளில் பாழாகிவிடும். எனவே அரசன் முறையறிந்து நெறி பிறழாது வரிகளைப் பெற வேண்டும் எனும் அந்தப் பாடலே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது.”

அரசு அதிகாரி

“அந்தப் பாட்டில் புலவர் நன்கு முற்றிக் காயும் நிலையில் உள்ள நெல்லைக் குறித்துள்ளார். ஆனால் இன்று நம் வயிறு காய்ந்தாலும் வரியைக் கட்டியாக வேண்டிய கடுமையான நிலையன்றோ நீடிக்கிறது? இதெல்லாம் நல்லாட்சிக்கு ஏற்றதா என்ன? இந்த ஆட்சி அமைப்பின் மீது மக்கள் எப்படி நம்பிக்கையோ, பற்றோ கொள்ள முடியும்?”

பேராசிரியர்

“பொதுவுடைமை அரசே ஆயினும் வரி இன்றி ஆட்சி செலுத்த முடியாது. பொதுவுடைமை என்பதும் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டும் பந்தலிட்டுப் படருவதால் பயன்இல்லை. உள்நாட்டுப் பொதுவுடைமை, உலகப் பொதுவுடைமையாதல் வேண்டும். ‘ஓருலகம்’ ) என வெண்டல் வில்கி எனும் அறிஞர் ஒருவர் கண்ட கனவும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் தமிழ்ச் சான்றோர் கூறியனவும், தன்னலம் தீர்ந்த, சண்டையில்லாததாய் உள்ள சமுதாயமும் உருவாகக்கூடிய பாதையை விடுத்து உலக சமுதாயம் திசை மாறியே போய்க்கொண்டிருக்கிறது. இதில் பசிப்பிணியை அறவே நீக்க ஒவ்வொருவர் கையிலும் மணிமேகலையின் அட்சயப் பாத்திரம் இருந்தாக வேண்டும்.”

ஒருவர் இடைமறிக்க ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் உங்கள் கருத்தைச் சொல்லி முடியுங்கள்.”

பேராசிரியர்

“‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று அன்று மணிமேகலை செய்தாள், இன்று நம் பாரதப் பிரதமரும் பசியை அறவே நீக்கப் பல அறிக்கைகளை வெளியிடுகிறார். பசியை நீக்கப் பொய்யான பொதுவுடைமைக் கோஷத்தால் முடியாது. உண்மையான நல்லாட்சித் திட்டங்கள் வேண்டும். அரசுத் திட்டங்கள் மட்டும் பசியைப் போக்கிவிடாது. இந்தப் பாரகம் உள்ள வரை தனிமனித நேயமும் உதவிக் கரம் நீட்டியாக வேண்டும். அதுதான் நல்ல நாடு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘உறுபசியும் ஓவாப் பிணியும், செறுபகையும் சேராதியல்வதே’ (734) நல்ல நாட்டின் இலக்கணம் என்பது வள்ளுவம். அத்துடன் புலவர் ஐயா சுட்டிக்காட்டிய, ஒப்புரவு உள்ளமும் மக்களிடம் நிலை கொண்டாக வேண்டும். அதற்கான முன் முயற்சியாகத்தான் ‘செய்க பொருளை’ எனக் கட்டளையிட்டார் வள்ளுவர். அவர் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என எச்சரித்தார்; இல்லாதார்க்கு மனமுவந்து செல்வராக இருப்போர் ஈந்து உவக்கும் இன்பம் பெறவேண்டும் எனத் தூண்டினார்.”

புலவர் செல்வகணபதி

“அப்படியெல்லாம் செல்வரும் எளிதில் ஈயும் மனத்தோடு நடப்பதில்லை. விளம்பரக் கொடையே நடக்கிறது. கட்டாய வசூலே நாடகமாகிறது. ‘ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும் கூன் கையர் அல்லாதார்க்கு’ என்றது  போல, கயவர்களுக்குப் பயந்து தருகிறார்கள். அந்தச் செல்வர்கள் ‘செல்வத்துப் பயனே ஈதல்’ எனப் பெரும்பாலும் நினைப்பதில்லை.”

இடைமறித்த ஒருவர்

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.”

புலவர்

“அப்படியே தீயவர் பெருகினால், சமூகத்தில் புரட்சிதான் வெடிக்கும். பொய்யும் புரட்டும் தான் வளரும்.”

தொழிலதிபர் லெ.நாராயணன் செட்டியார்

“புரட்சியால் விளையும் போட்டி ஆட்சியை விட, மனமாற்றத்தால் நிலவும் நல்லாட்சி முறையே நல்ல பயனை நீடித்துத் தரும். சுதந்திரம் பெற்ற நாள் முதல், நம்மோடு உரிமை பெற்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் தேசத்தில் பரவலாக நல்லாட்சி முறையே நீடித்திருக்கிறது என ஏற்பதில் தவறில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“நாடு என்றால் அது எப்படி அமைந்திருக்க வேண்டும், அதனை ஆளும் நல்லாட்சியின் இலக்கணம் என்ன, அரசர்- அமைச்சர் ஆகியோரின் கடமைப் பொறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் ஓர் அரசியல் பொருளாதார மேதையாகவே நின்று பேசியுள்ளார்.”

ஒருவர்

“அவற்றுள் பொருத்தமான சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கலாமே?”

மற்றொருவர்

“பேசிப் பேசிப் புளித்துப்போன அரசியலைப் பற்றி இங்கேயும் பேசி நேரத்தை வீணாக்க வேண்டுமா? அந்தச் சாக்கடைகளை நாமும் தோண்ட வேண்டுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசான் வ.சுப.மா. அவர்கள் அப்படி நினைக்கவில்லை. பலருக்கும் வாக்குரிமையும் கடமைப் பொறுப்பும் உள்ள குடியாட்சி முறையில் நலன், தீங்கு என்பவை தராசின் இரு தட்டுக்களைப் போன்றவை. ஆனால், வள்ளுவர் வகுத்த அரசு நெறி எவ்வரசுக்கும்- எக்காலத்திற்கும் – அன்பர் குறிப்பிட்டது போன்று இன்றைய அரசியல் சாக்கடையா, சாக்காடா… என்ற அந்த நிலைக்கும் பொருந்தவே செய்யும்.”

அரசு அதிகாரி

“இன்று அரசியல் தலையிடாத துறையே இல்லை. இன்று பேசிப் பேசிப் பொழுதை வீணடிப்பதுதான் அரசியல் கலாச்சாரம். தன் கட்சியை மலையளவு ஏற்றுதல், பிற கட்சியினை முடிந்த அளவு தூற்றுதல், வசவு நடை, வம்பிழுப்பு, ஆகாக் கத்தல், அடியாள் சேர்த்தல் – இத்தகைய போலிக் குடியாட்சியைப் பற்றி – அது வள்ளுவத்தோடு பொருந்துமா என்பது பற்றி – நாம் பேசிப் பயன் என்ன? வாக்களிக்கும் சக்தி படைத்த பெரும்பான்மையும் அரசியலே புரியாத மக்களிடையே அல்லவா போய்ப் பேச வேண்டும்!”

புலவர்

“போய்ப் பேச வேண்டுமா? பெரிய பொய் பேச வேண்டுமா? (சிரிப்பலை) குடியாட்சி முறைக்கே அடித்தளமான தேர்தல் முறையே விலைபேசப்படும்போது, அரசியல் வியாபாரம் பற்றி நாம் பேரம் பேசிப் பயன் என்ன? உலகமே வியாபார மயமாகி வருகிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“உலகம் ஒன்றெனக் கருதும் காலம் எப்போதோ தோன்றிவிட்டது; என்றாலும், அது நனவாக நடைமுறைப்பட எத்தனைக் காலம் ஆகுமோ தெரியாது. ஆனால் எவரும் உலகக் குடிமக்களாகப் பிறப்பதில்லை. ஒருநாட்டு, ஒரு வீட்டு உரிமைக் குடிமகனாகவே ஒருவன் பிறக்கிறான். எனவேதான் வள்ளுவர் நாடு – வேந்து – அரசு என்றெல்லாம் பொதுநிலை அரச அறங்கள் கூறியதாகக் கருதுவோம்.

நாடு என்றால் ஒரு நிலவரையறை இருப்பது போலவே வேந்தளவு அதாவது இறையாண்மை (ஷிஷீஸ்மீக்ஷீமீவீரீஸீtஹ்) எனும் அரசாளுமை இருக்க வேண்டும் என முதலில் விதிக்கிறது. இத்தகைய நாட்டுத் தலைவருக்கு என்ன வேண்டும்? ‘தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன் ஆள்பவர்க்கு’ என்றார் வள்ளுவர்.”

ஓரன்பர்

“இப்போதெல்லாம் தூங்குவதற்கே சட்டமன்றம் போகிறார்கள்.”

மற்றொருவர்

“குறட்டை விடாமல் தூங்கலாம் என்று ஒருமுறை சபாநாயகர்த் தீர்ப்பு வந்ததே…!”

வேறொருவர்

“நம் நிலா முற்ற அவையில் யாரும் குறட்டை விடவில்லையே!” (சிரிப்பலை),

ஒருங்கிணைப்பாளர்

“‘தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும்’ என்றெல்லாம் ஒரு நாட்டிற்குத் தேவையான வள்ளுவ இலக்கணங்களை இங்கே நாம் எண்ணுவதை விட, இன்றைய குடியாட்சி முறையில் புகுந்துவிட்ட கேடுகளை வள்ளுவர் அப்போதே வரிசைப்படுத்தியுள்ள அருமையை நினைவுகூர்ந்து, திருந்தவோ, திருத்தவோ சிந்திக்கலாம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“தேர்தலில் மிகுபெரும்பான்மை பெற்றுவிட்ட தோரணையால் – எல்லை மீறிய வலிமையால் – நல்லாட்சி புரிவதை விடுத்து அடிக்கடி மனம் போலக் கடுமையான சட்டங்களை இயற்றுவதும், தண்டனைகளை விதிப்பதும் நடைமுறையில் உள்ளனவே?”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன், அடுமுரண் தேய்க்கும் அரம்’ (567) எனும் குறளைத் தானே சொல்லுகிறீர்கள்?”

பெரும்புலவர்

“அல்லற்பட்டு ஆற்றாது அழும் நிலை மக்களுக்கு ஏற்பட்டால், அதுவே ஆட்சிச் செருக்கை அழிக்கும் படை ஆகிவிடுமாம்.”

இளைஞர் ஒருவர்

“‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என எங்கள் பாரதிக் கவிஞன் ஏகாதிபத்தியத்தையே ஏளனம் செய்து பாடி விட்டான்” (குரல்கள் : சபாஷ் தம்பி – கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் வகுத்த அரசு குடிமக்களுக்கு முதன்மை மதிப்பும் பாதுகாப்பும் தருவது; குடி தழுவிக் கோலோச்சுவது; முறை செய்து காப்பாற்ற வேண்டியது; காட்சிக்கு எளிமையாய் விளங்க வேண்டியது; உள்ளுவதெல்லாம் மக்கள் நலனே கருதி உயர்வாக உள்ளும் பொறுப்புடையது; பகை நட்பாகக் கொண்டு ஒழுக, உறுபசி, ஓவாப் பிணி என்பன சேராமல், நேராமல் பேண வேண்டியது; எதிர்காலக் குறிக்கோளுடனும் நிகழ்காலத் திட்டங்களுடனும் நன்கு செயலாற்ற வேண்டியது.”

அரசு அதிகாரி

“ஆனால் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் போல உள்நாட்டிலேயே போர்க்களங்கள் அமைத்து அரசை இயங்கவிடாமல் செய்வது தான் அன்றாடக் காட்சிகள்.”

பேராசிரியர்

“எதிர்க்கட்சி வலுவாக இல்லாத குடி ஆட்சிமுறை, அங்குசம் இல்லாத யானைச் சவாரி போன்றது.”

ஒரு மாணவி

“‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்’ என்பது வள்ளுவர் ஏற்ற எதிர்நிலைத் தேவை.”

ஒருங்கிணைப்பாளர்

“‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல் குறும்பும் இல்லது நாடு’ (735).

‘வேந்தலைக்கும்’ என வள்ளுவர் எச்சரித்தது குடியாட்சி முறையில் கொடி கொடியாய்ப் படர்ந்து வருவது நல்லதில்லை.”

பெரும்புலவர்

“ஒரு கட்சிக்குள்ளே பல குழுக்கள், உட்பகைகள், வெளிப்போர்கள், கொல் குறும்புகள்… இந்தப் ‘பல்குழு’, ‘கொல் குறும்பு’ எனும் தொடராட்சி வள்ளுவருக்கே கைவந்த கலை.”

 

ஓரன்பர்

“புலவர் ஐயா கொல் குறும்பில் நுழைந்து விட்டார். இது நீடித்தால் குழப்பம் தான்.”

ஒருங்கிணைப்பாளர்

“என்னதான் பல்குழு, கொல் குறும்புகள் இருப்பினும் அரசாள்வோர் – தக்கார் இனத்தராய், தானொழுக வல்லாராய் இருந்தால் போதுமே! ‘ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து, யார் மாட்டும் தேர்ந்து செய்வதே முறை’ என அறிந்து செயல்பட்டால் நல்லதாயிற்றே! நாள்தோறும் நாடி முறை செய்யாவிட்டால் நாடும் சீரழியும் எனப் புரிந்து கொண்டால் போதுமே!”

குறள் நிலா முற்றம் – 11

Image result for valluvar

பெரும்புலவர்

“இல்லாளுக்குப் பத்து இல்லாதவனுக்கு 20!”

ஓர் அன்பர்

“என்ன பெரும்புலவர் ஐயா ஏதோ புதிர் போடுகிறார்?”

பேராசிரியர்

“மனையற வாழ்வில் ‘இல்லாள்’ எனும் சொல் இல்லத்திற்கு உரியவளேயான மனைவியைக் குறித்திட, ‘இல்லான்’ எனும் எதிர்ச்சொல், கணவனைச் சுட்டாமல் ஏதும் இல்லாத வெறும் பயலைக் குறிப்பதாகப் புலவர் ஐயா, சொல்லாமல் சொல்லுகிறார். ஆனால் 10/20 என்ற கணக்குத்தான் புரியவில்லை.”

ஒருங்கிணைப்பாளர்

“பெரும்புலமைப் பெருந்தகை ஒரு வகையில் கணக்குப் போட்டே சொல்லியிருப்பதாகக் கருதலாம். வாழ்க்கைத் துணை நல இல்லத்தரசி பற்றி 10 குறளோடு முடித்துவிட்டு, இல்லத் தலைவன் கடைப்பிடிக்க வேண்டியவற்றை ‘பிறனில் விழையாமை’, ‘பெண் வழிச்சேரல்’ எனும் இதர தலைப்பில் 20 குறளில் சொல்ல நேர்ந்ததை 20 அம்சத் திட்டம் போலச் சொல்லியதாகக் கருதுவோமே!”

வளனரசு

“பிறனில் விழையாமை’ அதிகாரத்திற்கு முன்னுரை எழுதிய பரிமேலழக உரையாசான், ‘காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை எனும் இது ஒழுக்கமுடையாரிடமே நிகழ்வதாதலின், ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது’ எனப் பொருத்தமான விளக்கம் தருவார்.

“பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

     அறம்பொருள் கண்டார்கண் இல்.”    (141)

“அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

     நின்றாரின் பேதையார் இல்”        (142)

என்றெல்லாம் வள்ளுவர் அறவழி நிறுத்துவர்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வளனரசு வரிசைப்படுத்தியமை போல அறநெறியில் இல்வாழ்பவன், பிறன் மனை நயவாதவனே ஆவான். ‘ஆண்மை’ என்றால் ஆளுமை. அது புற வீரத்தைவிட, அக ஒழுக்கமான மனஅடக்கத்தில்தான் தலைநிமிர்ந்து விளங்கும். அது கோழைத்தனம் அல்ல.”

அரசு அதிகாரி

“ ‘பிறன்மனை நோக்காத பேராண்மை’ என்கிறாரே?”

 

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“அன்பர் சுட்டிய ‘நோக்காத’ எனும் வள்ளுவச் சொல்லாட்சி மீண்டும் மீண்டும் நினைக்கத்தக்கது. ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட ஒரு பொருள் சுட்டும் பல சொற்கள் உள்ளமை போலத் தமிழிலும் காண், பார், நோக்கு எனும் சொற்கள், பல்வேறு பொருளமைதிச் சாயல்களுடன் கையாளப்படுகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சுட்டிக்காட்டியது போல வள்ளுவர் நோக்காமை’ எனும் சொல்லால் மிகுந்த நுண்மாண் நுழைபுலத்தோடும் உளவியல் பாங்கோடும் எடுத்தாண்டுள்ளார்.

ஓர் அன்பர்

“ஒருவகை உள்நோக்கத்துடன் பார்ப்பதைத் தான் ‘நோக்கு’ என்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அதுதான் உகந்த பொருள். அழகாக இருக்கும் பொருளைப் பார்த்து உளமார ரசிப்பதில் தவறில்லை. அழகிய மாதொருத்தியை நோக்கி, அவள் தன் மனைவியாக இருக்கக் கூடாதா என மறுகுவதுதான் தவறான உள் நோக்கு.”

அரசு அதிகாரி

“அப்ப ரசிக்கலாம். நோக்கக்கூடாது என்கிறீர்கள்.”

கருணைதாசன்

“ரசனைக்கும் ஒரு வரையறை உண்டே?”

பெரும்புலவர்

“வரம்பு மீறி ரசித்து, விழைந்தமையால் வந்த வினையைப் பல கதைகள் நமக்குப் பாடமாகச் சொல்லி உள்ளனவே… அடுத்தவன் மனைவியின் அழகில் மயங்கி, அறம் தவறி, மதிகெட்டு, மானம் மட்டும்  இன்றி, தன் வாழ்க்கையையே வீணடித்துக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகள் நம் நாட்டில் பல உண்டு.”

மற்றொரு புலவர்

“வானுலக வேந்தனான இந்திரன், அகலிகையின் அழகில் மயங்கி, அவளை நுகர மானுட வேடம் போட்டு நடத்திய நாடகத்தில் முனிவரிடம் பெற்ற சாபம் ஒரு பெரிய புராணம்!”

புலவர் செல்வ கணபதி

“அதைச் சேக்கிழாரின் புனிதமான பெரிய புராணத்தோடு ஒப்பிட்டு விடாதீர்கள்.” (சிரிப்பலை அவையில்)

அரசு அதிகாரி

“இந்தக் காலத்தில் எல்லாம் ஏதேனும் ஒரு சின்னவீடு இருந்தால்தான் ஒரு பெரிய மனிதருக்குப் பெருமை என்றாகிவிட்டது.” (மீண்டும் சிரிப்பலை)

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இராமாயணக் காப்பியத்தின் மூலக்கருவே இராவண வதம் என்றால் அவனது அழிவுக்குக் காரணம்? ‘முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், எவராலும் வெல்லப்படாய் எனப் பெற்ற வரமும், உலகெல்லாம் கடந்த புயவலியும்’ என்பன எல்லாம் கற்பெனும் கனலியான சீதையை, வஞ்சகமாய் அபகரித்த காரணத்தால் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான் என்ற அவலத்தை நினைத்து சின்ன வீட்டு ஆசைகளை அகற்றிவிட வேண்டுகிறேன்.” (சிரிப்பு)

வருமான வரித் துறை ஆணையர்

“இல்லறக் கடமைகளில் ஆணை விடக் கூடுதலாகப் பொறுப்பேற்கும் பங்காளி என்பதால் தான் ஆங்கில மரபில் ‘ஙிமீttமீக்ஷீ பிணீறீயீ’ என்பர். காந்தியடிகள் ‘கீஷீனீணீஸீ வீs லிவீயீமீ’s றிணீக்ஷீtஸீமீக்ஷீ’ எனச் சரிநிகர் சமானம் தந்தார்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராண்மை என்ற சொல்லை மீண்டும் நினைத்தால் வள்ளுவர் மனத்திட்பத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் என்பது விளங்கும்”

அவையில் ஒருவர்

“செம்மல் சொல்வது போல எவ்வளவுதான் மனத்திட்பத்தோடு வீட்டை விட்டு வெளிக்கிளம் பினாலும் சினிமாக் கவர்ச்சிகளும் விளம்பரக் காட்சிகளும் ஆண்கள் மனத்தை மட்டும் அல்ல, பெண்கள் உடல் நளினத்தையும் அளவுக்கு மீறிக் கொச்சைப் படுத்தும் ஒரு புதிய அநாகரிகம் ஓங்கி வருவது எல்லோரையும் அன்றைய இந்திரன் போல அகலிகைகளைத் தேடச் செய்துவிடும் போல உள்ளது.”

அன்பர் ஒருவர்

“கண்களை மூடிக்கொண்டு நடக்கப் பழகுங்கள், சரியாகிவிடும்” (அவையில் சிரிப்பு)

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“நீங்கள் என்னதான் சமாதானம் கூறினாலும் வள்ளுவர் பெண்களை ஆண்களுக்கு அடிமை களாகக் கருதியே பல குறட்பாக்களைச் செய்துள்ளதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

சான்றாக,

‘தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதுஎழுவாள்

     பெய்யெனப் பெய்யும் மழை’        (55)

எனும் குறளில் பெண் தன் கணவனையே தெய்வமாகத் தொழவேண்டும் எனும் நிபந்தனை யையும், அத்தகையவள் ‘பெய்’ எனச் சொன்னால் மழை பொழிய வேண்டும் என்ற கட்டாயமும் ஒருவகை ஆணாதிக்கத்தையே காட்டுகின்றன. இப்போதெல்லாம் பெண்கள் கணவனைத் தொழாமல், பெய் எனவும் சொல்லாமல் இடை விடாமல் பேய்மழை பொழிந்து ஊரெல்லாம் வெள்ளக்காடாகி விட்டதே? அப்படியானால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தத்தம் கணவன்மார்களுக்கு ஒரே சமயத்தில் செய்த வழிபாட்டு ஆராதனையின் விளைவா இந்த வெள்ளப் பெருக்கு?”

மற்றொரு தமிழாசிரியை

“செல்வி சித்ரா குறிப்பிட்டதை விட, சமுதாயத்தில் கண்டதும் காதல், பெண்மைச் சீண்டல் (ணிஸ்மீ ஜிமீணீsவீஸீரீ)..” ஆகியன தினசரி நடப்பு களாக உள்ளனவே…

இடைமறித்த ஒருவர்

“ஆண்களும் சீண்டப்படுகிறார்களே?” (சிரிப்பலை)

மற்றொருவர்

“சீண்டலாலும் தீண்டலாலும் ஆண்மகன் எப்படியோ தப்பித்து விடுகிறானே! பெண்கள் தானே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்? சீண்டல்- தீண்டலின் விளைவை காலம், பருவம் எல்லாம் காட்டிக் கொடுத்து விடுகின்றனவே…?”

புலவர்

“குறள் நம் கையில் உள்ள முகக் கண்ணாடி போன்றது. அவரவர் முகம் அதில் தெரிவது போல, ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அவரவரே வரம்பு கட்டி வாழ வேண்டும்.”

வளனரசு

“சற்றுமுன் குறிப்பிடப்பட்ட பெண் பெய் எனப் பெய்யும் மழை பற்றி ஒரு கருத்து…”

அன்பர் ஒருவர்

“வெளியே மழை ஓய்ந்தாலும் அரங்கினுள்ளே தூவானம் விடாது போலிருக்கிறதே!”

வளனரசு

“சிறுதெய்வ வழிபாட்டை விடத் தன் கணவனையே உளமார நேசித்து வணங்கி வாழ்பவள், உரிய நேரத்தே பெய்ய வேண்டும் எனப் பிறர் எல்லாம் வேண்டும் பருவ மழையைப் போன்றவள் என நேரடியாகவே பொருள் கொள்ளலாம். இதில் ஒரு கடவுள் தன்மையையும் பகுத்தறிவுக்குப் பொருந்தாமையையும் தம் உரைமேல் ஏற்றி, பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பெருமக்கள் அன்றைய காலப் போக்கிற் கேற்பச் செய்து வைத்த தவறு. அந்த உரைகளில் கூட வேறுபாடுகள் உண்டு என்பதே உண்மை.”

பேராசிரியர்

“இக்குறட்பா இளங்கோவடிகளையும் மணிமேகலை ஆசிரியரையும் மனம் கவர்ந்தது என்பார் பேரறிஞர் கா.அப்பாத்துரையார், இருவருமே தமது காப்பியங்களின் நாயகியரின் கற்புத்திறம் விளக்க இக்குறளை எடுத்தாண்டு உள்ளதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“கற்பரசி, தெய்வத்தையோ கணவனையோ தொழுதெழுவாள்; மழை பெய்யும் என்பதை விட கற்புடைப் பெண்ணைத் தெய்வமும் தொழுதேத்தும் எனும் உணர்வோடு பொய்யில் புலவன் பொருளுரை தேர்ந்து இந்த விவாதப் பகுதியை இத்துடன் முடிப்போமே.”

கல்லூரி மாணவி

“முற்றத்து அவையோர் முன்னர் மகளிர் சார்பாக மற்றும் ஓர் ஐயத்தைக் கேட்டு, இனி அடுத்து வரும் நாட்டாட்சி பற்றிய பகுதிக்குச் செல்லத் தடைக்கல்லாக நிற்கிறேன். மன்னிக்கவும்.”

முதியவர் ஒருவர்

“ஏம்மா தயக்கம்? வீட்டுக்கு அப்புறம் தான் நாடு, அதிலும் மகளிர்க்கு ஐயப்பாடு வந்தால் வீடும் சரிப்படாது; நாடும் உருப்படாது. கேளுங்கள், கேளுங்கள்.”

மாணவி

“வள்ளுவரின் காமத்துப்பால் உலகு முழுவதும் உள்ள ஆண் – பெண் உறவு முறைக்குப் பொருந்துமா? இந்த உறவு முறைகளில் இப்போதெல்லாம் பல வகையான அனுசரித்துப் போதல். அதாவது…”

பேராசிரியர்

ஆங்கிலத்தில் சொல்லப் படும் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் இசைவில்லாத, அவிழ்த்து விடப்பட்ட ஒரு சுதந்திரமான, மனம் போன போக்கு – ஒரு கலாச்சாரமாக அல்லது அனாச்சாரமாக வளர்ந்து வருவதைத்தானே சொல்கிறீர்கள்?”

வளனரசு

“ஆண் – பெண் உறவு முறை என்பது அடிப்படை நோக்கில் உலகு முழுவதும் ஒன்றுதான். அணுகும் முறைகளில்தான் அந்தந்தப் பண்பாட்டுக்கு உகந்த மாறு பாடுகள் உண்டு. அதனை அந்தந்தச் சமூகம் ஏற்றுக் கொண்டால் சரிதான். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, சங்க இலக்கிய அகத்திணை தொட்டு வள்ளுவம் வரை கருதும்போது – ‘களவில் தொடங்கி கற்பில் முடிவதே’ இந்தப் புனித உறவு என்று சொல்லி விடலாம். எங்கள் பேராசான் வ.சுப.மா.அவர்கள் முனைவர் பட்ட ஆய்வேடாக நூலில் கிரேக்க ஆங்கில மேதைகளின் கருத்துக்களையும் குறிப்பாக ஹாவ்லக் எல்லிஸ்எ ன்பாரின் இரு தொகுதிப் பேரேட்டிலும் இக்கருத்தே நிலவுகிறது. காதலில் தொடங்கிக் கற்பில் நிலை கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலவே கொழுநனிடம் ‘நண்ணேன் பரத்த நின்மார்பு’ எனும் உறுதிப்பாடு நன்றாகத் தொனிக்கிறது; இன்பத்துப் பால் வாழ்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“இன்பத்துப்பாலில்தான் வள்ளுவர் மிக நுட்பமான செய்திகளைச் சொல்லுகிறார்.”

ஒருவர்

“அதை விரிவாகவே சொல்லுங்கள்!” (சிரிப்பலை)

ஒருங்கிணைப்பாளர்

“அறத்துப்பாலில் சொல்லாது விடப் பட்ட பல அறிவியல் செய்திகள்… குறிப்பாக ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்…’ என்ற அரிய தொடர்  அன்றே கருதிய ஒப்பரிய செய்தி வருகிறது.”

பேராசிரியர்

“மனம் பயன்படும் இடம் சமூக வாழ்வோடு இணைந்திருந்தாலும் அது பண்படும் இடம் குடும்ப வாழ்வின் இன்ப நிலையமே என்பார் பேரறிஞர் மு.வ. அது மட்டும் அல்ல. அறிவும் உணர்வும், வன்மையும் மென்மையும், அழகும் இளமையும், கவர்ச்சியும் முயற்சியும் என்றெல்லாம் இணந்துள்ள குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, தொண்டும் தியாகமும் மேவிட வாழ்வதே சீரிய வாழ்வு எனவும் வலியுறுத்துவார்.”

பெரும்புலவர்

“அதுமட்டும் அல்ல ஐயா!… வள்ளுவர் காமத்துப் பாலில் ஒருதலைக் காமத்தையோ, ஒவ்வாக் காதலையோ கூறவில்லை. ‘அன்பின் ஐந்திணை’ எனப் பெரியோர் வகுத்த ஒத்த அன்புடைய, ஒன்றிய அன்றில் பறவை போன்ற உரிமை வாழ்வையே பேசுகிறார்; நன்கு குறிப்பிட்டுப் பேசுகிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“குறளில் ‘நட்பு’ எனும் மானுடப் பொது உறவு பற்றி வரும் ஐந்து அதிகாரங்கள் ஒருபுறம் இருக்க, இருமுறை வரும் அதிகாரப் பெயர் ஒன்றும் உள்ளது. அது என்ன என்று சொல்கிறீர்களா?”

(அவையில் சற்று அமைதி)

குறள் நிலா முற்றம் – 10

Image result for thirukkural

 

பேராசிரியர்

“குணம் என்னும் குன்றார்க்கு வெகுளி ஏற்படுவது இயல்புதான் என்றே வள்ளுவர் ஏற்கிறார்.”

புலவர் ஒருவர்

ஆனால், அது ஒரு கணமே நீடிக்கும் – அதற்குள் காத்துக் கொள்க என மீட்சியும் சொல்கிறார். இந்த இளைஞர் அந்த ஒரு கணத்திற்குள் ஓடி வந்துவிட்டார் என நினைக்கிறேன்.”

இளைஞர்

“குணம் எனும் குன்றேறி நிற்பதாகக் கருதப்படும் பெரியவரிடம் கோபாக்கினி போலச் சுட்டெரிக்கும் சினம் வரலாம் என வள்ளுவர் சொல்லுகிறாரா?”

ஒருங்கிணைப்பாளர்

“சுயநலம் கருதாது, பொதுநலப் பணியில் முனைந்திருக்கும் போது இடையூறுவரின், அதுவும் ஒரு வகையில் குணநல வெளிப்பாடு எனவே கொள்ள வேண்டும். அத்தகைய சினம் – வெகுளி, கரவின்றிச் சடுதியில் வெளிப்பட்டுவிடும். மின்னல் போல ஒரு வெட்டுவெட்டிவிட்டு, விரைவில் மறைந்தும் விடும் என்பதே என் கருத்து.”

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

     வேந்தனும் வெந்து கெடும்.”         (899)

உயரிய கொள்கையால் உரம் பெற்ற சான்றோர்க்குக் கோபமே வரக்கூடாது என்பது நடைமுறைச் சாத்தியமா? எனும் கேள்வி இங்கு முரணாக முன் நிற்கிறது.”

வருமான வரித் துறை அதிகாரி

“இயேசுபிரான், நபிகள் நாயகம் உள்ளிட்ட சமய நிறுவனர்களுக்கும், காந்தியடிகள் போன்ற அகிம்சையே உயிராகக் கொண்டோர்க்கும், பண்டித நேரு போன்ற ஆட்சிப் பொறுப்பாளர் களுக்கும் அவ்வப்போது சினம் ஏற்பட்டதை வரலாற்றில் படித்திருக்கிறோம்.”

வாழ நூல் செய்த வள்ளுவர்

வளனரசு

“வள்ளுவப் பெருந்தகை எப்பொருளையும் அதன் பயன்பாடு கருதியே விளக்குவார். உலகுக்கு ஒட்டக்கூடிய ஒழுக்க வரைமுறையே பேசுவார். வாழ நூல் செய்தவர் ஆதலால் செயல்பாட்டுக்கு வரும் அற முறைகளையே அடுக்கிச் சொல்வார் என்பது எங்கள் பேராசான் வ.சுப.மா.வின் வள்ளுவம்.”

பேராசிரியர்

“இங்கு கூறிய கருத்துக்கு உடன்பட்டு ஒன்று சொல்வேன். ஈட்டும் பொருளனைத்தையும் ஈகையாகத் தந்துவிடுக என வள்ளுவர் சொல்லவில்லையே?

“ஆற்றின் அளவறிந்து ஈக; அது பொருள்

     போற்றி வழங்கும் நெறி”            (477)

என்றே போதிக்கிறார்.”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த நடைமுறைக்கு உகந்த முறையினையே அவர் கூறும் சான்றோர் சினம், அல்லது சாதாரண மக்கள் வெகுளாமை என்பனவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒருவர் உள்ளத்தில் உருவாகும் வெறுப்பும் பகையுமே வெகுளியாய், சடுதியில் வெளிப்படுகிறது. அது அருளுடைமைக்கு மாறானது. எனவே, அதற்கு இடம் தராமல் காத்து வர வேண்டும். ஆயினும் குறிப்பாக வலியார் – மெலியார் என எல்லோரிடமும் சகட்டு மேனிக்குச் சினம் காட்டி எரிந்துவிழுதல் மனிதப் பண்பு ஆகாது. செல்லிடத்தும் காப்பதே சினம். பிற இடத்தில் அதைக் காப்பதும், காத்துக் கொள்ளாததும் ஒன்றுதான். எனவே நிர்வாகச் செயலினூடே சிலரது இடையீட்டால் பொறுப்பில் உள்ளோருக்கு அடக்கமுடியாதபடி வெகுளி ஏற்படினும், சினம் கொள்ளமாட்டேன் எனும் உறுதியை நாள் தோறும் வளர்த்து வந்தால்தான், தப்பித்தவறியும் சினம் கொள்ளாமல் பிறரோடு, தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.”

ஓர் அன்பர்

“அலுவலகக் கோபத்தைப் பற்றிப் பேசுவதைவிட அன்றாடம் வீட்டில் மனைவி மக்களோடு எல்லாம் கோபப்படாமல் பொழுதை ஓட்ட முடிவதில்லை; கல்விக் கூடத்தில் மாணவரைக் கண்டிக்காமல் இருக்க முடிவதில்லை.”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

 ‘கோலைப் பேணிக் குழந்தையைக் கெடு’ எனும் பழமொழியே நியாயமான கோபம் – உலோகத்தைச் சூடேற்றி உருவமைப்பதற்குச் சமமானது என்றே உளவியல் ரீதியாகச் சொல்லுகிறது. கோபமே கொள்ளாத சாதுவை ‘அப்பிராணி’ என்றும் ‘மண்ணாந்தை’ என்றும் பட்டம் சூட்டி நையாண்டி செய்கிறது.”

பெரும்புலவர்

“சப்-கலெக்டர் ஐயா… ஆங்கிலப் பழமொழியைச் சொன்னார்… நான் ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் பயின்ற நாளில் கேட்டும் சொல்லியும் மகிழ்ந்த பாடலைச் சொல்லட்டுமா?”

அன்பர் ஒருவர்

“பெரும் புலவர் ஐயா பாட முற்பட்டால் அதைத் தடுத்துவிட முடியுமா? நீங்கள், உங்கள் பழைய பாட்டைப் பாடுங்கள்; எங்கள் பாட்டிற்கு நாங்கள் இருக்கிறோம்.”

பெரும்புலவர்

“அந்தக் காலம் அச்சுப்புத்தகம் வராத – ஏடும் எழுத்தாணியும் மாணவப் படைக் கலங்களாக இருந்த காலம்.”

அன்பர்

“சரி ஐயா – பாட்டைச் சொல்லுங்கள்”

ஏடும் எழுத்தாணியும்

பெரும்புலவர்

“ஏடு கிழியாதா? எழுத்தாணி ஒடியாதா? வாத்தியாரு சாவாரா? வயிற்றெரிச்சல் தீராதா?” (எல்லோரும் சிரித்தல்)

அன்பர்

“புலவர் ஐயா.. எத்தனை ஏட்டைக் கிழித்தாரோ, எத்தனை எழுத்தாணியை ஒடித்தாரோ… ஆனால் (பட்ட) பாட்டை மட்டும் மறக்காமல் சொல்லிவிட்டார்.”

ஒருங்கிணைப்பாளர்

“நாட்டு நிலவரப் போக்கில் சீர்குலைவு ஏற்படக் காணும் போது சான்றோர் வாய் மூடி இருக்கலாகாது; இருக்கவும் மாட்டார்கள். அத்தகைய ஏந்திய, உயரிய கொள்கையர் சீற்றம் கொள்ள நேரிட்டால், ஆட்சித் தலைவனாகிய வேந்தனோ, அவர் யாராயினும் இடைமுறிந்து வீழ்ந்து விடுவர்; ஆட்சியும் கவிழ்ந்துவிடும்.”

பேராசிரியர்

“ஒருங்கிணைப்பாளர் கூறிய இந்த கருத்தைத் தொடர்ந்து நான் சொல்ல வருவது ஒன்று உண்டு. சினம், கோபம், வெகுளி என்பன எல்லாம் வாழ்க்கைப் போக்கில் நமக்கு ஏற்படும் இயல்பான தொரு மெய் உணர்வு. புராண கால விசுவாமித்திரர் சாபம் தொட்டு, இராமாயண இராம பிரானின் சினம், பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலி சபதம், மதுரையை எரித்த கண்ணகியின் ஆறாச் சினம், கண்ணகியையும் கோவலனையும் மதுரைக்குக் கூட்டி வந்த கவுந்தியடிகள் இடைவழியில் குறுக்கிட்ட தீயவர்களை முள்ளுடைக்காட்டில் முது நரிகளாகிடச் சபித்த கோபம் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் சமுதாயத்தை அணி கோலிக் காப்பது இந்த அன்றாட மன உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் (லிணீஷ்s) என ஒரு தொகுப்பு இன்றேல் இன்று சமூக ஆட்சியோ, அரசமைப்போ இராது.”

அன்பர்

“இந்தச் சட்டத்தாலும் பல சமயம் தீங்கு நேரிட்டுள்ளதே?”

பேராசிரியர்

“உரிமைப் போர்க்காலத்தில் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியதற்கும் இன்று பல வகைகளில் நாடெங்கும் சட்ட எதிர்ப்பு உண்ணாவிரதங்கள் நடப்பதற்கும் உரிய காரணம் – சட்டம் எப்போதும் சரிவரச் செயல்படாமையே அல்லது செயல்படவிடாமையே.”

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அரசு அதிகாரி

“அத்தகைய சங்கடமான சூழலில் என்ன செய்வது?”

ஒருங்கிணைப்பாளர்

“அங்கே தான் சான்றோர்கள் வந்து முன் நிற்கிறார்கள். நமது பெரிய ஆதீனம் அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் முதலிய பண்பட்ட அருளாளர்களும் ஞானசீலர்களும் சமுதாயத்தை நெறிப்படுத்த முன் வருகிறார்கள்! அத்தகைய ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என முத்தாய்ப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. உலகம் வாழ்வது சட்டத்தால் அல்ல; சம்பிரதாயக் கோட்பாடுகளால் அல்ல; உலகு உயிர்ப்பது பண்பட்ட பெரியோரின் தன்னலமற்ற வழிகாட்டுதலால் மட்டுமே! அத்தகைய சான்றோர் சினம் கொள்ள நேர்ந்தாலும், அது ஒரு கணமே நீடித்தாலும்… அத்தகைய சூழல் ஏற்படாமல் முற்காக்கும் தற்காப்பே மக்களுக்கும் நல்லது; ஆட்சிக்கும் பொருந்துவது. மற்றொன்று பிறர் நலமும் பேணும் நல்ல சமுதாய அமைப்பில் போராட்டத் தேவையே ஏற்படாமல் போய்விடும்; அதையும் மீறிப் போரிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தை ஓர் அரசமைப்போ, நிர்வாகமோ உருவாக்கு மானால், அதுவும் இடைமுரிந்து அழிந்து போய்விடும் எனும் கருத்தில் யாருக்கும் முரண் இருக்க முடியாது.”

‘தமிழ்ப் பாவை’ கருணைதாசன்

“வாழ்க்கையில் இன்று முரண்கள் அதிகமாகி முட்டுக்கட்டையிடும் களங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில் புதிய அங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் உருவாகி வருவதையும் அவற்றைப் பயன் கொள்வதை¬யும் முரணாக ஏற்க வேண்டிய தில்லை. ஆனால் வாழ்வியல் அடிப்படைத் துறைகளான கல்வி, அரசு, நிர்வாகம், ஆன்மீகப் போக்கு, பொதுத்துறை நிறுவனச்செயல்பாடு, மக்கள் போராட்டம் என நாள்தோறும் புதுப்புது முரண்கள் முளைத்து வருவதை நாம் கண்டும் காணாமல் இருக்க இயலாதல்லவா..? அந்த முரண்களைப் பற்றியும்…”

அரசு அதிகாரி

“இன்று சந்தித்த எண்ணற்ற முரண்களோடு நிலா முற்ற அரங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.. சாப்பாடு காத்திருக்கிறது.”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘தமிழ்ப்பாவை’ ஆசிரியர் சுட்டியது போல, நமக்குத் தோன்றும் முரண்களை எல்லாம் அடுத்து வரும் அரங்கில் கலந்து ஆய்வோம். இந்த அரங்கு அன்ன மீனாட்சி உணவக வள்ளுவர் அரங்கில் விரைவில் நிகழ்வுறும். இப்போது தமிழ் வாழ்த்துடன் உணவுக்குச் சொல்வோம். அனைவரும் வருக.”

(நிலவை மேகம் மறைக்கிறது)

அமர்வு மிமிமி

அன்ன மீனாட்சி வள்ளுவர் மன்ற அரங்கு இறைவாழ்த்துடனும் குறள் வாழ்த்துடனும் தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய நிலா முற்றத் தொடர்ச்சி அரங்கிற்கு மகளிர் அதிகமாக வந்துள்ளமை பெருமை தருகிறது.”

ஒருவர்

“அன்ன மீனாட்சி அரங்கில் அறுசுவையோடு நடக்கும் போது மகளிர் அதிகமாக வருவது இயல்புதானே!”

ஒருங்கிணைப்பாளர்

“முதலில் எங்கள் வி.கே.கே.மேனிலைப் பள்ளித் தமிழாசிரியர் திருமிகு வள்ளியம்மை வந்துள்ளார். அவர் தொடங்கட்டும்.”

வள்ளியம்மை

“நான் குறளைப் போலவே கடவுள் வாழ்த்துடன் என் ஐயத்தைத் தொடங்குகிறேன். வள்ளுவப் பேராசான் தம் பொதுமை நூலில் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ எனத் தொடங்கு கிறார். ஆதிபகவன் என்பது சமண, பௌத்த சமயத் தொடர்புடையவை.  அப்படியானால் வள்ளுவர் எந்தச் சமயத்தவர்?”

வளனரசு

“எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய (ஆங்கில நெடுங்கணக்கின் ‘ஏ’ உட்பட) எழுத்தை முதன்மையாகக் கொண்டிருப்பது போல, உலகம் ‘பகவனை’ அதாவது ஒரு மூலப் பொருளை முதலாகக் கொண்டுள்ளது என்பது நேர் பொருள்.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இந்த ‘பகவன்’ எனும் சொல் வடமொழியில் இல்லை. வள்ளுவரால் உருவாக்கப்பட்ட தூய தமிழ்ச்சொல் என்றே அறிஞர் பலர் கருதினர். ஏனெனில், இச்சொல் சங்க இலக்கியங்களில் பயிலப்படவில்லை; சிலம்பு, மணிமேகலையில் முறையே அருகப் பெருமானையும் புத்தரையும் அதிலும் கூட இடுகுறிப் பெயராகவே சுட்டுகிறது.”

இடைமறித்த புலவர்

“இன்னா நாற்பதில் முதல் பாடலிலும் வருகிறது.”

பேராசிரியர்

“ஆனால் உரையாசிரியர்கள்தான் வடமொழிச் சொல்லோ எனக் கருதி ‘வழிபாட்டுக்கு உரியவன்’ எனப் பொருளமைதியைத் தந்துவிட்டனர் எனலாம். ‘ஆதிபகவன்’ எனும் சொல், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியங்கள், ஏன் பிற்காலத் தேவார திருவாசகம், திருமந்திரம், ஆழ்வார் பாசுரங்களிலும் இல்லை என அறுதியிட்டுச் சொல்லலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“ஆனால், குறளில், ‘முதல’ எனும் சொல் அடிப்படையானது, காரணமானது, முதன்மை யானது எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது என ஏற்போமே.”

பெரும்புலவர்

“நோய் நாடி நோய் ‘முதல்’ நாடி, ‘முதல்’ இல்லார்க்கு ஊதியம் இல்லை… எனப் பின்னர் வரும் சொற் பயன்பாடுகளோடு இணைத்தும் இதைச் சிந்திக்கலாமே?”

வேறு ஒரு புலவர்

“திருவாய் மொழியிலும் ‘ஆதி எம் பகவன்’ என வருவதாக நினைவு.”

ஒருங்கிணைப்பாளர்

“‘கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’ எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவர், கடவுள் வாழ்த்தோடு தொடங்கினார் என்பதை மறுப்போர் கடவுள் சார்பினை ஏற்காது படிமுறை  வளர்ச்சி, உலோகாயதச் சிந்தனை  எனும் எண்ணத்தோடும் ஏற்கலாம்.”

பேராசிரியர்

“ஆனால், வள்ளுவர் பிந்திய குறள் வரிசையில், நிலையாமை, துறவு, மெய்யுணர்வு பற்றி எல்லாம் குறிப்பிடுவதால் இறைமை வழிபாடே இல்லாதவர் என முடிவு கட்டுவது பொருந்துமா?”

புலவர் செல்வ கணபதி

“குறளில் ‘கடவுள்’ எனும் சொல் இல்லை. பரிமேலழகர் தம் உரையில் புகுத்திய இதனை மாற்றி ‘இறைவழிபாடு’ எனவும் ஏற்கலாம்.”

கருணைதாசன்

“நாவலர் தாம் எழுதிய உரையில் ‘அறிவன்’ என்றார்; கலைஞர் தம் உரையில் ‘வழிபாடு’ எனும் பொதுச் சொல்லால் குறிப்பிட்டுவிட்டார்.”

வளனரசு

“தமிழாசிரியை அவர்கள் கூறியபடி, ‘வள்ளுவர் – சமண, பௌத்த சமயச் சார்பினரோ?’ எனும் கேள்விக்கே திரும்பவும் வர விழைகிறேன்… வள்ளுவர் காலத்தே இவ்விரு சமயங்களும் இங்கு நிமிர்ந்திருந்த தடயங்கள் உள்ளன. கல்லாடனாரும் இறைமையைக் குறிக்கும் சொல்லாக ஏற்றது இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், எந்த இறைமை? சமணமா? பௌத்தமா? வள்ளுவர் பௌத்தர் போல முடியை மழித்தலும் வேண்டா, சமணர் போலத் தாடி வளர்த்தலுமாகிய வெளி அடையாளம் வேண்டா, உலகு பழித்ததை ஒதுக்கி வாழ்ந்தாலே அது இறைமை வழிபாடுதான் என உறுதிபட, நடுவு நிலை பேணி விளக்கினார். எனவே வள்ளுவரைச் சமயச் சிமிழுக்குள் அடைக்க முயல வேண்டாம்.

‘சமயக் கண்ணர் தம் மதிவழிச் செல்லாது உலகியல் கூறிப் பொது இது’ என்ற திருவள்ளுவ மாலைச் செய்தியை, வள்ளுவப் பொதுமைக்கும் மாலையாக அணிவித்து இவ்விவாதத்தை இத்துடன் நிறைவு செய்யலாம்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறிவு பெறப் பெற, அறிவின் தூய்மையை எட்டி அடைய முற்பட வேண்டும். தூய அறிவு வடிவானதொரு பரம்பொருள் கடவுள் எனக் கொள்ளலாம். வாலறிவனான அவன் திருவடிகளைத் தொழாவிட்டால், கற்ற கல்வியால் பயன் இல்லை. அத்தகைய ‘வாலறிவன்’ யார் எனத் தேர்ந்து தெளிவதும், ஓர்ந்து தொழுவதும் அவரவர் மனத்தைப் பொறுத்தது; சார்ந்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தது. இதைச் சர்ச்சைக்கு உரியதாக்கிச் சமர்கள் புரிந்த சரித்திர ஏடுகளின் ரத்தக் கறைகள் மீண்டும் கசிய வேண்டாம். எனவேதான் நமது இந்தியத் திருநாடு, சமயங்கள் பலவற்றின் விளைநிலமாயிருந்து வந்துள்ள போதிலும் – சமயச்சார்பற்ற நாடாக (ஷிமீநீuறீணீக்ஷீ ஷிtணீtமீ) தன்னை அரசியல் சட்டபூர்வமாக அறிவித்து உலகிற்கே வழிகாட்டியும் வருகிறது.” (கைதட்டல்)

பேராசிரியர்

“சமயம் என்பது வேறு; ஆன்மீகம் (ஷிஜீவீக்ஷீவீtuணீறீவீsனீ) ஆகிய அருள் என்பது அதன் வழியே அடையக் கூடிய நற்பேறு. இவற்றில் ஏற்பட்டு வரும் மயக்கமே நாட்டில் குழப்பமாக, கலவரமாகக்கூட நீடிக்கிறது. உண்மைச் சமயங்கள் வேறு; சமய நெறியாளர் போல நடிக்கும் கபட வேடதாரிகள் வேறு.”

புலவர் செல்வ கணபதி

“ ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’ (247) எனும்  இறுதியுரை போல, நமக்கு அருளும் வேண்டும்; பொருளும் வேண்டும்.”

கருணைதாசன்

“ஆனால் இந்த இரண்டையும் கபட வேடத்தால் கவரும் நிலை பரவுகிறதே என்பதுதான் நல்லவர்களிடையே ஏற்பட்டுவரும் கலக்கம்… மரம் பழுக்க உழைத்த தோட்டக்காரன் கனிகொய்யக் கருதியிருக்கும் போது எல்லாம் வெம்பி விழுந்த பரிதாப நிலை பரவக்கூடாதே… மக்களில் நல்லவர் யார்? தீயவர் யார்? எனப் பிரித்தறிய முடியாது. எல்லோரும் ஆன்மிக அடையாளங்களுக்குள் ஒரே மாதிரியாகத் தோன்றும் புதியதொரு ‘சமய விழிப்பு’ ஏற்படுகிறதே. இது நலம் பயக்குமா?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“‘தமிழ்ப் பாவை’ ஆசிரியர் மக்களையும் கயவரையும் ஒன்று போலக் காண்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது.”

கருணைதாசன்

“நினைவூட்டலுக்கு நன்றி. ஒரே உடை, ஒரே மாதிரி தோற்றப் பொலிவு. நல்லவர் – தீயவர் யாரெனப் பகுத்தறிய முடியாத் தவிப்பு. ‘மக்களே போல்வர் கயவர்’ எனும்படி வள்ளுவரே மயங்கியது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“வள்ளுவர் கயமையைக் கண்டு கடியும் குறட்பா வரிசையில் மக்களில் கயவர் உருவுடையவர் பலர் உண்டு எனும் உலகியலைக் கண்முன் கொணரும் கருத்து இது; மயக்கம் ஏதும் இல்லை; சற்றுத் தயக்கம் வருவதை விளக்கவே வள்ளுவர் முயன்றுள்ளார்.

மக்கள் கயவரைப் போலத் தோன்றுபவர்கள் என்பதை விட, கயவர்கள் மக்கள் போல நடிப்பார்கள் எனப் பொருள் கொள்ளுவதே நலம்.

மக்கள், விலங்குகள் எனும் உயிரினங்களைப் பொறுத்தவரை புலி, மான் முதலியன தோற்றத்திலும் செயலிலும் தத்தமது இயல்பினின்று – குணத்திலிருந்து- வேறுபடுவதில்லை. ஆனால் மனிதர்களில் விலங்குக் குணம் உடையோரும் உண்டு. விலங்கை அடையாளம் கண்டு கொள்ளுவதைப் போல, உடல் அமைப்பால் ஒன்று போலத் தோன்றினாலும், குணநிலையில் குள்ள நரி மனமுடையோரை – வஞ்சகரை – எளிதில் இனம் கண்டுபிடித்துவிட முடியாது என்கிறார் வள்ளுவர். அத்தகையோரை ‘மக்களே போல்வர் கயவர்’ எனும் அருமையான உவமையால் மனதில் பதியும்படியாகக் குறிப்பிடுகிறார். இதிலே ஒரு கேலி, நையாண்டி, ஷிணீக்ஷீநீணீsனீ எல்லாம் புலப்படச் செய்கிறார்!”

செந்தமிழ்க் கல்லூரி மாணவி சித்ரா

“ ‘தேவர் அனையர் கயவர்’ எனும் குறளில் கயவரை மனிதரைவிட உயர்த்தி, தேவர் நிலையோடு ஒப்பிடுவது ஏன்?”

ஒருங்கிணைப்பாளர்

“‘தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

 மேவன செய்தொழுக லான்.’        (1073)

மக்களும் கயவரும் வடிவால் முழுவதும் ஒத்திருப்பர். ஆனால் குணத்தால், பண்பால், செயலால் மாறுபட்டவர் என நேரடி விளக்கம் தந்த வள்ளுவர் இந்தக் ‘கயமை’ அதிகாரக் குறளில் மேவன செய்து ஒழுகுதல், அதாவது செய்யக் கூடியவை, தவிர்க்க வேண்டியவை எனும் அறநெறிக் கோட்பாடுகளை மதியாது, மனம் விரும்பியபடி எல்லாம் நடப்பர் என இருசாராரையுமே சாடுகிறார்! கட்டுப்பாடற்ற போது தேவர் – கயவர் – மக்கள் எல்லாம் ஒரு நிலையரே ஆவர் என்கிறார்.”

பெரும்புலவர்

“எற்றிற்குரியராக, விரைவில் அரசியலில் சமுதாய ஒழுக்கக்கேட்டில் விலை போகும் விற்றற்குரியராக விளங்கும் கயவரை விடுத்து, அச்சமே கீழ்களது ஆசாரமாகக் கொள்ளாத மிச்சம் உள்ள நன்மக்களைப் பற்றி நிலா முற்ற அரங்கு தடம் மாறலாமே!”

தலைமை ஆசான் கணேசன்

“புலவர் ஐயா சொன்னபடி தடம் மாற விடாமல் தடுக்கும் வினா ஒன்று. ‘வாழ்க்கைத் துணை நலம்’ வகுத்த வள்ளுவர் அதில் பெண் களுக்கு மட்டுமே அறிவுரை கூறி, ஆண்களை விட்டுவிட்டாரே அது ஏன்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“தலைமையாசிரியர் குறிப்பிட்ட இந்த ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனும் அருமையான சொல்லமைப்பு சங்க இலக்கியந்தொட்டு வேறு எந்த இலக்கியத்திலும் கையாளப் பெறாத, வள்ளுவப் பெருந்தகையே முதன்முதலில் உருவாக்கித் தந்த சிறப்பான சொல்லடைவு. ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால், இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ எனப் பின்னாளில் பாரதியை உரிமைப் பொதுமை பேச வைத்த தலைப்பு என இதைக் கருதி மேல் விளக்கம் தரச் செம்மல் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“நல்லறமாக இல்லறம் விளங்கிடக் காதலன் ஒருவனைக் கைப்பிடித்தோ, ஏற்பாட்டுத் திருமணமோ செய்து கொண்டு மனையறம் ஏற்ற மங்கை நல்லாளிடம் வேண்டும் குணநலச் சிறப்புக்களை ‘வாழ்க்கைத் துணை நலம்’ எனும் அதிகாரத்தில் வகுத்த வள்ளுவர், அவருக்குத் துணையான கணவன் கடைப்பிடித்தாக வேண்டிய ஒழுக்கங்களையும் கூறாமல் விடவில்லை.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 9

Image result for thirukkural

இளைஞர் ஒருவர் 

“இப்போதைய கல்லூரி மாணவியர் இக்குறட்பாவைச் சற்றே திருத்தி ‘அத்தான் வருவதே இன்பம்!’ எனப் புதுக்குறள் புனைந் திருக்கிறார்கள்.”

(அவையில் சிரிப்பு அலைமோதுகிறது)

ஒருங்கிணைப்பாளர்

“என் மனதில் நிற்கும் குறட்பா முரண்களைச் சொல்ல விடாமல், இப்படி முரண்டு பிடிக்கலாமா? (மீண்டும் சிரிப்பு)

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

 கேடும் நினைக்கப் படும்”           (169)

எனும் ‘அழுக்காறாமை’ அதிகாரக் குறள் நாம் இதுவரை கருதிய இவ்வகைக் குறளோடு ஒரு வகையில் கருத்தொற்றுமை உடையதுதான்.

ஓரன்பர்

“ஊழை உப்பக்கம் காணாமல், அத்தானைத் தேடி வந்துவிட்டோமே? ஊழை ஒரு கை பார்த்து விட்டு ஒருங்கிணைப்பாளர் செம்மல் அவர்களின் சிந்தையில் பட்டதைக் கேட்போமே!”

ஊழ் – வாழ்கிறதா? பாழ்படுத்துகிறதா?

பேராசிரியர்

“‘ஊழ்’ என்பது எப்போதுமே சமய நம்பிக்கையோடும் வாழ்வுப் போக்கோடும் இணைந்ததொரு நெடிய சர்ச்சைதான். பண்டைய குறளின் உரையாசிரியர்களான பரிமேலழகர், மணக்குடவர் போன்றோரின் கருத்துக்களிலேயே மறுகி நில்லாது, நம் காலத்தில் வாழ்ந்த திரு.வி.க., இலக்குவனார், தெ.பொ.மீ., மு.வ., வ.சுப.மா. போன்ற பேரறிஞர்கள் என்ன சொல்லிச் சென்றார்கள் என நினைவூட்டுவது சாலப் பொருத்தம்; காலப் பொருத்தம்.”

வளனரசு

“நாங்கள் வ.சுப.மா. ஐயாவிடம் பாடம் கேட்டவரை, ஊழ் அதிகாரம் ஒரு கருத்துச் சிக்கலான பகுதி என்று தான் சொல்வார். ஊழின் மறுபெயராக நாட்டில் காலம் காலமாக வழங்கி வருவது ‘வினை’. அதனையே நேர் பொருளாகக் கொண்டு ஊழ் என்றால் தொழில் செயல் என்று கருதாமல் ‘பாவம்’ எனும் அர்த்தம் பரம்பரையாகப் பயமூட்டி வந்துவிட்டது.”

ஒரு புலவர்

“மறுமை, எழுபிறப்பு என்றெல்லாம் வள்ளுவர் கூறிய கருத்துக்கள் ஊழுக்கு மாறானவையா? நான் இதை ஏற்க மறுக்கிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

“மறுப்பது அவரவர் கருத்துச் சுதந்திரம்; ஆனால், பேராசிரியர் சுட்டிக்காட்டும் பேரறிஞர் மாணிக்கனார் கருத்தை நாமும் மீண்டும் சிந்திக்கலாம். மறுமை, எழு பிறப்பு என்பன குறளில் பிற இடங்களில் வந்தாலும், அதனை ‘ஊழ்’ அதிகாரப் பொருளோடு வலிந்து பொருத்திப் பாராமல் தனியாகப் பொருளமைதி காண முற்படலாம்.”

பேராசிரியர்

“வள்ளுவரின் ஊழ் பற்றிய கொள்கை முற்பிறப்புக் குறிப்போ, பழமை வினைக் கருத்தோ, அவ்வுலக அறிவிப்போ சிறிதளவும் இல்லாதது. ‘ஊழ்’ அதிகாரம் முழுவதிலும் இத்தகைய செய்திகள் இல்லை. பரிமேலழகர் உரையிலும் முன்வினைக் குறிப்புப் பற்றி ஏதும் இல்லை என்பதே பேரறிஞர் ஆய்வு. மாணிக்கனார் ‘ஊழ்’ எனும் சொல்லுக்கு ‘முறை’ என்றே, அதாவது உலக முறை, உலகச் சூழ்நிலை, உலகத்து இயற்கை என்றே பொருள் கண்டார்.”

அரசு அதிகாரி

“உலக மயம் எனும் நிறீஷீதீணீறீவீsணீtவீஷீஸீ பற்றி வள்ளுவர் அப்போதே சொல்லிவிட்டார் என நிறுவலாமே?”

ஒருங்கிணைப்பாளர்

“மாணிக்கனார் கருத்துப்படி ஊழ் என்பது ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு உருப்பெறுவது; ஆனாலும், அதன் போக்கைக் கணிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஏனெனில், ஊழின் தோற்றத்திற்குப் பல காரணங்கள் அமையக்கூடும். இடம், காலம், அரசு, சமூகம், சுற்றுச்சூழல் முதலிய புறநிலைப் பாங்கெல்லாம் முடிவில், உலகியற்கையாய் ஊழாய் மாறி நிற்கும். அது ஒரு மனிதனின் வாழ்வுப் போக்கின் புற நிலையைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், அந்த அதிகாரத்தில் செல்வம் பற்றிய செய்தியை அடுக்கிச் சொல்லுகிறார். ஒரு சூழ்நிலையில் வருந்தி உழைத்தாலும் வாராத செல்வம், மற்றொரு சமூகச் சூழலில் கோடி கோடியாய்ச் சேர்ந்து விடுகிறது. ஆயினும், சூழ்நிலையால் ஊழுக்கு நம்மை அடிமைப் படுத்திக் கொள்ளாமல் இடைவிடா முயற்சியால் ஊழையும் புறம் காண முற்பட வேண்டும்.”

பேராசிரியர்

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

     அவ்வது உறைவது அறிவு”           (426)

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

     இயற்கை அறிந்து செயல்”           (637)

எனும் குறள்களை ஊழோடு பொருத்திப் பார்த்தால் மேலும் தெளிவு பெறுவோம்.

ஒருங்கிணைப்பாளர்

“‘உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் ஊழையும்’ அதாவது வலிமையுடைய ஊழையும் என ‘உம்’ அடைமொழி சேர்த்திருப்பதைக் கவனிப்போம். வள்ளுவர் எவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டுகிறார் எனச் சிந்திப்போம். ‘அறிவுடையார் எல்லாம் உடையார், எண்ணிய எண்ணியாங்கு எய்துப, துன்பம் உறவரினும் செய்க, பெருமை முயற்சி தரும்’ என்பன எல்லாம் ஊழைப் புறம் காண நமக்கு வள்ளுவம் தந்துள்ள ஊக்கக் கருவிகள்: ஆக்கக் கருத்துக்கள்.”

பேராசிரியர்

“மாணிக்கனார் கருத்துக்கு மகுடம் வைத்தாற் போல, திருக்குறள் செம்மல் அடுக்கிச் சொன்ன விளக்கக் குறட்பாக்கள் நமக்கு எழுச்சியூட்டு கின்றன. சற்று முன்னர் பேரறிஞர் மு.வ.வின் ஊழ்க் கருத்து என்ன என்றும் கேட்கப்பட்டது.”

மு.வ. தந்த முதன்மை விளக்கம்

அரசு அதிகாரி

“நான் அவரது வாழ்க்கை விளக்கப் பேரேட்டில் படித்தது நீங்காது நினைவில் நிற்கிறது. படைப்பில் விண்ணிலும் மண்ணிலும் ஒரு முறையான ஆட்சி இயக்கம் உள்ளது. அவை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டே இயங்கியும் இயக்கியும் வருகின்றன. அதுபோல, மக்கள் வாழ்வில் ஆக்கமும் அழிவும் ஒரு நியதிப்படியே நிகழ்கின்றன. இந்த ஒழுங்கமைவு நிலையை ஆய்ந்தறிவது மிக அரிது; ஆனால் உண்டு என உணர்வது எளிது. இந்த ஆட்சி முறையை ‘ஊழ்’ எனச் சான்றோர் கூறிவந்தனர். வள்ளுவரும் அவ்வழி பற்றியே பேசினார். செல்வம் சேர்த்தல், நுகர்தல் முதலிய புறவாழ்வுப் போக்கில் ஊழ் தலையிடுவது போல, அறிவு, அடக்கம், ஒழுக்கம் முதலிய வாழ்வுப் பாங்கில் ஊழின் ஆட்சியை மட்டுப்படுத்தி வெற்றி கொள்ள முடியும். வேண்டிய வேண்டியாங்கு எய்திட முடியும். அதாவது, சமூக வாழ்வின் புற நிலையில் ஊழின் போக்கிற்கு ஏற்பவே செயல்கள் நடக்கின்றன; ஆனால், மனிதர்களின் அகவாழ்வுத் துறை எதுவாயினும் அதில் தனி நபரின் தன்னம்பிக்கையும் இடைவிடா முயற்சியுமே ஊழையும் புறங்கண்டு விடத் தூண்டுதல் தரும்.”

ஒருங்கிணைப்பாளர்

“அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.”     (32)

“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

     பிற்பகல் தாமே வரும்”              (319)

எனும் குறளாசான் அறிவுரையோடு ஊழை இங்கே புறங்கண்டுவிட்டு, நான் முன்னர் கூறக் கருதிய, எனக்குத் தோன்றிய சில குறள் முரண்களைச் சிந்திக்க முற்ற அவையோர் இசைய வேண்டும்.”

அவையிலிருந்து ஓரன்பர்

“செம்மல் உங்கள் முரண்களைச் சொல்லுங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

     கேடும் நினைக்கப் படும்”                 (169)

எனும் குறளில் நல்லவனுக்குக் கேடும் தீயவனுக்கு ஆக்கமும் வருவது ஏன் என ஆராய்க என்கிறார் வள்ளுவர்.”

பெரும்புலவர்

“இக்குறட்பாவில் ‘அவ்விய’ (அதாவது நடுவுநிலை கருதா நெஞ்சுடைய), ‘செவ்வியான்’, ‘ஆக்கம்’, ‘கேடு’ எனும் நான்கு சொற்களும் பல பொருட்களைத் தரும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளன. ‘நினைக்கப்படும்’ என்பது இந்தக் குறளைத் தவிர வேறெங்கும் கையாளப் படவில்லை என்பதையும் நாம் இங்கே நினைக்க வேண்டும்!”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைய சமுதாய நிலையில் அவ்வியர்களான தீயவர்கள் பலர் ஆக்கம் பெற்று விடுகின்றனர் என்பதையும், செவ்வியர்களான நல்லவர்கள் அத்தகைய ஆக்கமின்றி நலிவுறுகின்றனர் என்பதையும் வள்ளுவர் மறுக்கவில்லை; அத்தகைய ஆக்கமும் கேடும் முறையானவை எனவும் ஏற்கவில்லை. இந்த மாற்றுநிலை ஏன் என்பதை ஆராய வேண்டும் என்கிறார்.”

பெரும்புலவர்

“வள்ளுவரும் இதை ஆராயாமல் விடவில்லை. அவற்றை மாற்றும் வழிகளை வரையறுக்காமல் நழுவி விடவில்லை. காலந் தொறும் மாறும் சமூக, அரசியல் சூழலினூடே தக்க நெறிமுறைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள் என அறைகூவல் விடுப்பது போல இக்குறளை அமைத்துள்ளார்.”

அரசியல் அன்பர்

“அறைகூவல் என்று புலவர் ஐயா மழுப்ப வேண்டாம். இன்றைய மாசு படிந்த சமுதாய அமைப்பை மாற்றிப் புதியதொரு உலகம் படைக்கும் புரட்சியே சரியான நெறி எனக் கோடு காட்டிக் கொடி அசைத்திருக்கிறார் என்பதே எங்கள் கருத்து” (கைதட்டல்).

ஒருங்கிணைப்பாளர்

“அவ்விய நெஞ்சத்தான் அடைவது நிலையான ஆக்கமாக நீடிக்க முடியாது. செவ்வியான் உறுவதும் கேடாகவே இருந்துவிட இயலாது. எனினும் நடைமுறை வாழ்வில் அவ்வியர் ஆக்கம் பெறுவதும், செவ்வியான் கேடுறுவதும் நீடிக்கிறதே என அப்பெருந்தகை வருந்தும் உணர்வே இக்குறளில் எதிரொலிக்கிறது. ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் பழவினை காரணம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ‘நினைக்கப்படும்’ எனும் சொல்லால் பல வகையிலும் ஆய்ந்து உரிய செம்மை நெறிகளைச் சமுதாயம் பின்பற்ற முற்பட வேண்டும் எனவே எச்சரிக்கிறார். சமுதாயத்தில் உள்ள சுயநலமிகளுக்கும், முறையற்ற, நெறியற்ற அரசியல் பொருளாதாரக் கூட்டமைப்புக்களை ஆட்டிப் படைப்போருக்குமே இந்த எச்சரிக்கை முதலில் பொருந்தும்.”

‘திருக்குறள் செம்ம’லின் சீர்மிகு பட்டியல்

பேராசிரியர்

‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் அழகாக ஒருங்கிணைத்துச் சுட்டியமை போல வள்ளுவப் பேராசான் மாற்று நெறிகளாகப் பட்டிய லிட்டுள்ளவை:

– அறன் இழுக்கி, அல்லவை நீக்காத அரசமைப்பு

– இயற்றல், ஈட்டல், காத்தல் முதலிய ஆட்சிப் பொறுப்புக்களில் புகுந்துள்ள ஜனநாயகச் சீர்கேடுகள்

– நேர்மை, திறமை என்பவற்றைப் போற்றாத நிறுவனங்கள்

– ஒப்புரவோ நடுவுநிலையோ போற்றிக் காக்க முடியாத சான்றோர் சிலரின் தவிப்புக்கள்.

– கயமையைக் கருவியாகக் கொண்டோரின் அன்றாட ஊர்வலக் கொடிபிடிப்புக்கள்

– உள்ளூர்ப் பழ மரமாகவோ, ஊருணியாகவோ உதவாமல், நடுவூர் நச்சுமரமாக நிற்கும் நாசகார சக்திகள்

– இரந்தும் உயிர் வாழும் இழிநிலையினைச் சமுதாயத்தில் இன்னும் நீடிக்க வைத்துவிட்டு, ஆன்மீகப் போதனை செய்யும் போலி நிறுவனக் கூட்டங்கள், கூடாரங்கள்.

– குற்றம் கடியாமல், குடிதழுவிக் கோலோச்சாமல், கட்சி நலனையே ஆட்சித் திறனாகக் கொண்டு, சட்டமன்றங்கள் – நீதிமன்றங்களைச் சந்தைக் கடையாக்கும் ஆகாப் போக்குகள் – என்று நீளும் இவற்றையெல்லாம் நினைக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதை முரண் என ஏன் கருதவேண்டும்?”

(கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் வள்ளுவப் பேராசான் பல இடங்களில் சுட்டிக் காட்டியவற்றைப் பட்டியலிட்டு ‘நினைக்கப்படும்’ என்பதற்கு விளக்கம் தந்தமை பாராட்டுக்கு உரியது. அவ்வித்து அழுக்காறுடையான் ஆக்கமெல்லாம் அப்போதைக்குப் பெற்றாலும் அது மற்றொரு நாளில் நிச்சயம் தவ்வையை – மூதேவியைக் கூட்டி வந்து விடும் என்கிறார். ‘அழுக்காறு என ஒரு பாவி’ (168) என அச்சுறுத்துகிறார். இன்றைக்கு ஆலமர நிழல் அமர் அரச வாழ்வு கை கூடினாலும், நாளைக்கே அது ஒற்றைப்பனை நிழல் போலப் பயனற்று ஒதுங்கிப் போய்விடும் என்கிறார். நல்லவர்கள் கெடுவதில்லை என்றே நம்பிக்கையூட்டுகிறார்.”

வருமான வரித் துறை அதிகாரி

“ ‘நல்லவர்கள் கெடுவதில்லை இது நான்கு மறைத்தீர்ப்பு’ .. என மகாகவி பாரதியார் வள்ளுவத்திற்கு விளக்கமாகத் தந்துள்ள முத்தாய்ப்புச் செய்தியை ஏற்று, இதை முரணாக எண்ணாது இதர சமுதாய நன்னெறி அரண்களைத் தேடலாமா?”

ஒருங்கிணைப்பாளர்

“சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

     வறங்கூர்ந் தனையது உடைத்து”       (1010)

சமுதாயச் சீர்மையை நாடுகின்றவரே சீருடைச் செல்வர்! அதாவது, காந்தியடிகள் கூறும் ‘ஜிக்ஷீustமீமீsலீவீஜீ’. சமூகநலக் காவல் பண்புடைமையுடை யோர்கள், ஒரு சமயம் வறுமைப்பட்டாலும், அது ‘சிறுதுனி’, சிறுதுயரம்’ என்றும், மாரி சில சமயம் மழை பொழியாமல் கருத்தும் மேகம் கலைந்துவிடுவதைப் போன்றதே என்றும் அருமையான உவமையால் தெளிவூட்டுவதாகவே இதனைக் கருதவேண்டும். தனி உடைமைச் செருக்கில்லாமல், ஒப்புரவே நாட்டமாகக் கொண்ட அத்தகைய சீருடைச் செல்வரின் மீதுள்ள மதிப்பு ஒருநாளும் சமுதாயப் பார்வையினின்றும் நீங்கிவிடாது. மேகம் சிறிது நேரம் வானினை மறைத்துவிட்டு விலகுவதைப் போல, அந்தத் தற்காலிக வறுமையும் நீங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நல்லார்க்கு வரும் கேடு நிரந்தரம் இல்லை. அதுபோல அவ்விய நெஞ்சம் உடையார்க்குச் சேரும் ஆக்கமும் நிலையான தில்லை எனும் வள்ளுவ அமைதியை ஏற்கலாம்.”

ஒரு புலவர்

“ஒருங்கிணைப்பாளர் தந்த விளக்கத்தை நாமும் ஏற்கலாம்.”

அதிகாரி

“ஒருங்கிணைப்பாளர் முற்றத்து அவையில் நாம் அமரும் முன்னர், தவத்தின் பயன் பற்றிய ஒரு முரண்பாட்டுச் செய்தியைச் சொன்னார்; அதை நினைவூட்ட விரும்புகிறேன்.”

ஒருங்கிணைப்பாளர்

ஐயா அவர்கட்கு நன்றி.

தவம் படுத்தும் பாடு

“ ‘தவமும் தவம் உடையார்க்கு ஆகும்’ – அதாவது இங்கே தவம் என்றால் காடு சென்று கண்மூடித் தனித்து இருப்பதில்லை; சமுதாயத்தில் வாழ்ந்திருந்தே, மக்களுக்குப் பயன்தரும் சீரிய பணிகளை மேற்கொள்ளுவது என்றே கருத வேண்டும். அத்தகைய சமுதாயப் பொறுப்பற்றவர்கள் தவம் செய்வதாகச் சொல்வது சமூகக் கேடாகவே முடியும்.”

இடைமறித்த ஒருவர்

“நம் நாட்டில் பல ஆசிரமச் சந்நியாசிகள் நடத்திய அலங்கோலங்கள் எல்லாம் நமக்குத் தெரியுமே!”

ஒருபுலவர்

“அந்த ஆனந்த உல்லாசங்கள் எப்படித் தவம் ஆகும்? அவையெல்லாம் ‘பாவம்’ என்றே சொல்ல வேண்டும்.”

ஒருங்கிணைப்பாளர்

‘தவம் செய்தார்தம் கருமம் செய்வார்’ என்றும், ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை’ என்றும் கூறும் வள்ளுவர்…”

பேராசிரியர்

(இடைமறித்து) “ஆனால் அதே குறள் வரிசையில்,

“ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

     எண்ணின் தவத்தான் வரும்” (264)

எனச் சொல்லும் போது தவம் என்பது பிறரைத் தண்டிக்க, ஒறுக்க ஒரு கருவியாகக் கொள்ளப்படுவது ஒரு வகையில் முரண்தானே?”

மற்றொருவர்

“தவக்கோலம் வேறு; தவ ஒழுக்கம் வேறு என்பார் அறிஞர் மு.வ. தவ ஒழுக்கம் இல்லாதவர்கள் அதை மேற்கொள்வதாக நடிப்பது வீண்.”

இன்னொருவர்

“இந்தத் தவக்கோலமும் தவ ஒழுக்கமும் துறவிகளுக்கு மட்டும்தானா? ‘இந்த வம்பு நமக்கு ஏன்?’ என இல்லறத்தார் ஒதுங்கி விடுகிறார்களே?”

ஒருங்கிணைப்பாளர்

“அப்படிச் செய்ய அவசியம் இல்லை. தவம் – இரு சாராருக்கும் பொது; பொருந்தக்கூடியது. சிலர் இல்லறத்தை முற்றிலும் விடுத்துத் தவ வாழ்வில் முற்றாக ஈடுபடுவர். எனினும் இல்லற வாழ்வில் ஓரெல்லை தாண்டிய பின், மேற்கொள்ளலாம்.

வள்ளுவர் இதை வேடிக்கையாக,

“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டின் மறந்தார்கொல்

     மற்றை யவர்கள் தவம்”        (263)

என வினா எழுப்புகிறார். இல்வாழ்க்கையில் பகைவர்களை மடக்கித் திருத்துவதற்கும் நண்பர்களை மதித்து உயர்த்துவதற்கும் ஒரு வகை ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றல் தவ ஒழுக்கத்தினைக் கைக்கொள்ளுவதால் எவருக்கும் வந்து சேரும் என்பதே வள்ளுவம். வாழும் வாழ்க்கையையே ஒரு நோன்பாக மாற்றிக் கொள்ளும் சான்றோர் பலர் நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து வழிகாட்டி யுள்ளனர் – வள்ளலார், மறைமலை அடிகளார், திரு.வி.க. போல்…”

இளைய தலைமுறையின் வழிகாட்டிகளாக…

ஓர் இளைஞர்

“இன்றைய தலைமுறைக்கு எழுச்சியூட்டு வதையே ஒரு தவமாகக் கொண்ட நம் தமிழகத்து டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, நம் அறிவியல் மேதை டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் எனப் பெரிய பட்டியலே போடலாமே?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“இந்த இளைஞர் தன் வாழ்க்கை வழிகாட்டிகளாகப் பிறரைப் போலச் சினிமாக் கலைஞர்க்குப் போஸ்டர் ஒட்டாமல், சமுதாய நலனுக்கே தம்மை அர்ப்பணித்து வாழும் சான்றோரைக் குறிப்பிட்டது என்னை மெய்சிலிர்க்கச் செய்து விட்டது. (சபையை நோக்கி) உங்களுக்கு அந்த உணர்வோட்டம் தெரியவில்லையே.”

கூட்டத்தில் பலர்

“நன்றாகத் தெரிகிறது; தெளிவாகவும் புரிகிறது… எல்லோரும் இளைஞரைப் பாராட்டிக் கைதட்டி விடுவோம்” (சிரிப்பலையும் கர ஒலியும்)

ஒருங்கிணைப்பாளர்

“இளைஞர் குறிப்பிட்டதைப் போலத் தவப்பாங்குடைய சான்றோர் உலகில் சிலராகவும், தவ நன்முயற்சி செய்யாதவர் பலராகவும் உள்ளனரே என வள்ளுவர் வருத்தப்பட்டார். அந்த வருத்தம் நீங்கும் வகையில் வளரும் சமுதாயத்து இளைஞர் பலர், அறிவாக்கமுடைய சான்றோருடன் அணிசேர்ந்து உழைப்பு, விடாமுயற்சி, பொதுநலம் எனும் புதிய தவநெறிகளால் இச்சமுதாயத்தில் எண்ணிக்கையில் பலராகப் பெருகிடப் போகும் ஒளிக்கதிர்கள் வீசத் தொடங்கிவிட்டன.”

(மீண்டும் கைதட்டல்)

இளைஞர்

“நான் மீண்டும் ஒரு சந்தேகத்தை அவை முன்னர் வைக்க அனுமதிக்க வேண்டுகிறேன். குணமெனும் குன்றேறி நிற்கும் சாதனைச் சான்றோர்களை நாட்டு இளைஞர்கள் தமது வாழ்க்கை வழிகாட்டிகளாக (ஸிஷீறீமீ விஷீபீமீறீs) கொள்ள வேண்டும் என அடிக்கடி எங்களுக்குச் சொல்லப் படுகிறது. அத்தகைய சான்றோரில் பலர் கோபத்தால், வெகுளியால் அவர்களை அணுக முயலும் இளைஞர்களை விரட்டி விடுகிறார்களே?”

அரசு அதிகாரி

“தம்பி… அப்படி விரட்டப்பட்டோரில் நீங்களும் ஒருவரா?”

இளைஞர்

“அந்தப் பெரியவர் விரட்டும் முன்னரே நான் தப்பி ஓடிவந்துவிட்டேன்.” (அவையில் சிரிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“ஒருவேளை.. அந்தப் பெரியவர்,

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

     அவியினும் வாழினும் என்”          (420)

என இந்த இளைஞரைக் கருதியிருக்கச் சற்றும் வாய்ப்பில்லை.”

 

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 8

ஒருங்கிணைப்பாளர்

“போராட்ட காலத் தலைமை வேறு, சுதந்திரம் பெற்றபின் அமையும் உரிமைக் காலத் தலைமை வேறு. அங்கே தியாகம் அடிப்படை, இங்கே ஒழுக்கம் அடிப்படை.”

பேராசிரியர்

“இதைக் கிரேக்கச் சிந்தனையாளரான சாக்ரடீசும், ‘அரசியல்’ எனும் உன்னதமான சித்தாந்த நூலை அளித்த பிளேட்டோவும் அன்றே சொல்லியிருந்தார்கள்.”

 

ஒருவர்

“நினைவில் இருந்தால் அதை நிலா முற்றத்திலும் உலவ விடுங்களேன்.”

ஆட்சி பீடத்திற்கு வர அருகதை என்ன?

பேராசிரியர்

“மிகச் சாதாரணமான தொழிலுக்குக் கூட அதற்கான ஒரு பயிற்சி இல்லாமல் எவரும் மேற்கொள்ளுவது இல்லை. ஆனால், மிகக் கடினமான ஆட்சித் தொழிலுக்கு மட்டும் எவர் வேண்டுமானாலும் தகுதியுடையவர்கள் என்று முன் வந்து விடுகிறார்கள்..”

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கா.கருப்பையா

“சாக்ரடீஸ் அரசியலைத் ‘தொண்டு’ என்று சொல்லாமல் ‘ஆட்சித் தொழில்’ என்று அன்று சொன்னது இன்றைக்கும் எவ்வளவு பொருத்தம் என்பதை நினைவுகூர்ந்து சொன்ன பேராசிரியர்க்கு உளமார்ந்த நன்றி. அதற்காகவாவது கைதட்டு வோமே!” (கர ஒலி)

புலவர்

“இன்று அரசியல் என்பது முழுக்க முழுக்க ஒரு மோசடியான தொழில் போலத் தானே ஆகி வருகிறது? ‘தேர்தல்களில் தில்லுமுல்லு; தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் வாக்குறுதிகள் காற்றில் பறப்பு…” என்று மிக மட்டமான நிலைக்கு அரசியல் சரியாமல் தடுப்பது அனைவரின் பொறுப்பு அல்லவா..?”

ஒருங்கிணைப்பாளர்

“மொழிப் போர்க்காலத்தில் பேரறிஞர் அண்ணா எழுதியதை அவையோர்க்கு நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.”

சில குரல்கள்

“சொல்லுங்கள், அண்ணாவை மறந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நீங்களாவது நினைவில் வைத்திருக்கிறீர்களே!”

ஒருங்கிணைப்பாளர்

“ ‘சுதந்திரம், விடுதலை என்றால் சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல; வாலிபன் எண்ணுவது புதிய நிலை, புது அழகு, புது உருவம், புதிய மகிழ்ச்சி! நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான். உண்மையும்  அதுதான்!’ என்றார் அண்ணா.”

இடைமறிக்கும் ஒரு குரல்

“ஆனால், அநியாயமாக உண்மை நிலை அப்படி மாறவில்லையே..! (எல்லோரும் சிவப்புத் துண்டு அணிந்திருந்த அவர் பக்கம் திரும்பிப் பார்த்தல்)

ஒருங்கிணைப்பாளர்

“பொதுவுடைமைப் பேராளர் தோழர் ஐயா சொல்வதையும் கேட்போமே..”

தோழர்

“‘நாம் மக்களுக்காக வாழ்பவர்கள்; மக்களைக் காட்டிலும் அதிகாரச் சலுகைகளையும் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் மட்டும் வாழ முற்படக்கூடாது என்று ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்ற தோழர் லெனின் வழிக்கோட்டில் வழுவாது நின்று பணியாற்றுகின்றன நாங்கள் பொறுப் பேற்றுள்ள மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா முதலிய மாநிலங்கள்.”

ஒருங்கிணைப்பாளர்

“நம் திருக்குறள் பேரவையும் அது வானொலியுடன் இணைந்து நடத்தும் நிலாமுற்ற அரங்கும் அரசியல் பிரச்சாரங்களுக்கு அப்பாற் பட்டவை.”

தோழர்

“நான் நடைமுறையைத்தான் யதார்த்த எடுத்துக் காட்டாகச் சொன்னேன். அரசியல் பேசவில்லை.”

பேராசிரியர்

“நல்ல அரசியல்வாதிகள் எல்லாக் கட்சி களிலும் இருக்கிறார்கள். எல்லோருமே மோசமாகி விட்டார்கள் என்றோ, இந்தக் கட்சிதான் ஒழுக்கக்கோட்டில் நிற்கிறது என்றோ வெளிப்படையான விமர்சனம் வேண்டாம். நாம் பொதுவான நடைமுறைகளையே தொடர்ந்து சிந்திப்போம். தனி நிலா முற்றம் கூட்டி ஆராய்வோம்.”

(அவையில் சற்று அமைதி)

புலவர்

“அப்படியானால் மாதந்தோறும் பௌர்ணமி வரும்; நிலாமுற்றமும் சுவையான விருந்தும் தொடரும் என நம்பலாமா?”

மாதந்தோறும் பௌர்ணமி! முரணா – அரணா?

மற்றொருவர்

“எங்கள் புலவர் ஐயா.. எதை மறந்தாலும் சுவையான சாப்பாட்டை மட்டும் மறக்கவே மாட்டார்.”

புலவர்

“அட… நான் சொன்னது செவிக்கு உணவை ஐயா! நீர்தான் வயிற்றுப் பெருச்சாளி” (சிரிப்பு)

மற்றோர் அன்பர்

“‘செவிக்குச் சுவையா? வயிற்றுக்குச் சுவையா?’ எனும் முரண்பாட்டுச் சர்ச்சை போதும். நிலா முற்றம் கூடத் தொடங்கியவுடன் ‘திருக்குறளில் முரண்கள்’ பற்றியும் கருதுவோம் எனச் சொன்னது என்ன ஆயிற்று? தூக்கம் வரும் முன்னர் முரண்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாமா?”

பேராசிரியர்

“‘வள்ளுவ முரண்கள்’ என்றதும் என் நினைவு, நான் பயின்று, பணியாற்றிய அழகப்பர் கல்லூரிக்கு ஓடுகிறது. அங்கே தமிழ்த்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் துலங்கிய பேராசான் வ.சுப.மாணிக்கனார் முதுகலை, தமிழ் மாணவர் வகுப்பை மாற்றி அமைத்திருந்தார். இங்கு வந்துள்ள பேராசிரியர் வளனரசு அப்போது அங்கே பயின்ற முதல்நிலை எம்.ஏ.மாணவர். அவருக்கும் அந்த வகுப்பறை அமைப்பு நினைவில் இருக்கக்கூடும்.”

பேராசிரியர் வளனரசு

“ஆம். அந்த வகுப்பில் இருபாலருமாக இருபது பேர் எம்.ஏ. தமிழ் பயின்றோம். வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருப்போம் – பின்புறத்தில் ஒரு வரிசை நாற்காலிகள் போடப் பட்டிருக்கும். தனிக் கதவும் இருக்கும். பாடம் நடக்கும் போது வேறு வகுப்புக்களில் பாட வேளை இல்லாது, ஓய்வில் இருக்கும் பேராசிரி யர்கள், தாம் விரும்பினால் அந்த வரிசையில், ஓசையின்றி வந்தமர்ந்து, வேறு ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கும் பாடத்தைத் தாமும் கேட்கும் பயன் பெறவே இந்த ஏற்பாடு.”

பேராசிரியர்

“அது மட்டுமல்ல. எம்.ஏ. முதுகலை வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்க்கு அது ஒரு அக்கினிப் பிரவேசம் போலவே அறிஞர் வ.சுப.மா. வைத்தார். அதாவது, பாடம் நடத்தும் பேராசிரியர், மாணவர்க்கு ஏற்றாற்போலப் புரியும் படி. இன்னும் சொல்லப் போனால், தம் புலமையை மட்டும் அருவியாகக் கொட்டாமல் பாடம் நடத்த வேண்டும். அதே சமயம், பின்னால் அமர்ந்திருக்கும் பேராசிரியர்கள் ஏற்கும் வகையிலும் செய்தாக வேண்டும்.”

புலவர்

“இப்படியெல்லாம் வகுப்புக்களில் யாரும் நடத்தவும் மாட்டார்கள்; அமர்ந்து கேட்க இசையவும் மாட்டார்கள். அது வ.சுப.மா.வின் வசந்த காலம்.”

வருமான வரித் துறை ஆணையர்

“அந்த வசந்த காலங்கள் மீண்டும் வலம்வர வாழ்த்துவோம்.. வ.சுப.மா. கூறிய வள்ளுவ முரண் களைத் தாண்டி விட்டாரே பேராசிரியர் குழந்தைநாதன்?”

குறளிலும் முரண்களா?

பேராசிரியர்

“தாண்டிவிடவில்லை; நினைவைக் கொஞ்சம் தோண்டுகிறேன். சொல்கிறேன். ஒரு நாள் எம்.ஏ.வகுப்புப் பாடம். பேராசிரியர் இரா.சாரங்க பாணியின் ‘திருக்குறள் உரை வேற்றுமை முதல் தொகுதி’ வெளிவந்த சமயம் என நினைக்கிறேன். அது திருக்குறள் திறனாய்வு வகுப்பு.. ஒரு மாணவர் அவர் பெயரும் மாணிக்கம் என்றே நினைவு. ‘ஐயா குறளில் முரண்கள் பல உள்ளனவே. அவற்றிற்கு எப்படி அமைதி கூறுவது?’ எனக் கேட்டார். அதற்கு அறிஞர் வ.சுப.மா.. இடை மறித்துக் கேட்ட வினா விடை என்ன தெரியுமா?”

கூட்டத்தில் ஒருவர்

“சுவையாய் இருந்தால் சொல்லுங்கள்..”

பேராசிரியர்

“நீதிமன்றத்தில் திருடியதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டுக் கூண்டில் நிற்கும் விசாரணைக் கைதியிடம் குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர், முதல் கேள்வியாக, ‘நீ களவாடிய பொருளை யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாய்’ என்று மடக்கி வினவுவார். அதாவது, அவன்தான் திருடினான் என்பதை உறுதி செய்து கொண்டவர் போல, அவனே ஒப்புக் கொள்ளத் தூண்டும் வகையில் கேள்வி தொடுப்பார் அல்லவா? அதைப் போல, மாணவர் மாணிக்கமும், ‘திருக்குறளில் உள்ள முரண்களுக்கு அமைதி என்ன?’ எனக் கேட்கும் போதே, திருக்குறளில் முரண்கள் நிறைய உள்ளன என்று என்னை ஒப்புக் கொள்ளச் செய்யும் கட்டாயம் அதில் தொனிக்கிறது. குறளின் முரண்களுக்கு அமைதி தேடும் முன்னர், குறட்பாக்களில் குழப்பம் உண்டா என்பதை முதலில் சற்றே சிந்திக்கச் செய்தது இன்றும் மறக்க முடியாத காட்சி. பேராசிரியர் வளனரசால் சில குறட்பாக்களை நினைவுகூர முடியும் என நினைக்கிறேன்.”

பேராசிரியர் வளனரசு

“நன்றி பேராசிரியர் ஐயா அவர்களே! ஒரு சில குறள்கள் நினைவில் படருகின்றன.”

ஒருங்கிணைப்பாளர்

“நீங்கள் அன்றைய நினைவேட்டைப் புரட்டுங்கள்; நானும் இன்றைய குழப்பங்களைச் சொல்ல முற்படுகின்றேன்.”

பேராசிரியர் வளனரசு

“சான்றாக, ஓரிரு குறட்பாக்கள் நினைவிற்கு வருகின்றன.”

“நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

     கொல்லாமை சூழும் நெறி” (324)

எனும் அறத்துப்பால் குறளும்,

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்

                           பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்” (550)

எனும் பொருட்பால் குறளும் தம்முள் முரண்படுவதாகத் தோன்றுகின்றன.”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“இதற்குப் பேரறிஞர் வ.சுப.மா. அவர்களே தம் ‘வள்ளுவம்’ எனும் புகழேட்டில் பொருத்தமான விளக்கங்களை அப்போதே தந்துள்ளார். இக்குறட் பாக்களைப் போலவே, ஒறாமை, ஒறுப்பு; நெஞ்சத் துறவு, வஞ்சத் துறவு பற்றி மேலோட்டமாகத் தோன்றும் முரண்பாடுகளுக்கும் சரியான வள்ளுவப் பார்வையோடு அரண்கோலியுள்ளதை இந்த நிலாமுற்ற அவைக்கு நினைவூட்டுவது அவசியம்.

பேரறிஞர் வ.சுப.மா. அகநிலையறங்கள், புறநிலையறங்கள் என இரண்டாகப் பகுத்து, ஒரு மனிதன் அகநிலையிலும் புறநிலைப் பொறுப்பிலும் ஆற்ற வேண்டிய கடமைகளை முரண் எனக் கருத வேண்டாம் என விளக்க ஓர் உவமை சொன்னார், தந்தை ஒருவன், தன் மகன் சொந்த வீட்டிலேயே திருடிவிட்டால், அதைக் குடிமானம் கருதி வெளியில் சொல்லாமல், தன் மகனைத் திருத்தவோ, கண்டிக்கவோ முனைகிறான். அவனே நீதிபதி பொறுப்பேற்றிருக்கும் போது, அதே மகன் பிற இடத்தில் திருடியமைக்காகக் குற்றவாளிக் கூண்டில் எதிர்நிற்கும் போது, தன் மகன் எனவும் பாராது, உரிய நியாயமோ, தண்டனையோ அளிக்க வேண்டிய இக்கட்டான பொறுப்பிற்கு உள்ளாகிறான். இவ்விரு நிலைகளையும் ‘முரண்’ என்பதா? அல்லது ‘அரண்’ என்பதா?”

பேராசிரியர் வளனரசு

“பேராசிரியர் எடுத்துக்காட்டிய உவமைக்குப் பொருத்தமான குறட்பாக்களாக..

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் என்பதோடு, களை கட்ட தனொடு நேர்”

“குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

     வடுவன்று வேந்தன் தொழில்”   (549)

என்னும் குறளை மாணிக்கனார் எடுத்துக் காட்டுவார். நாட்டுத் தலைவன், தனி மனிதன், வேந்தன் அல்லது அமைச்சன் எனும் இரண்டு நிலைப்பாடுகள் உடையவன். குடிமக்களுக்குப் பெரிதும் இடையூறு செய்பவரைத் தண்டித்துக் கொல்லுதல் பொதுநலம் காக்கும் அவனது (வேந்தன்) தொழில்; அதே சமயம், குடிநலம் பேணாது, தன் பதவியைக் காத்துக் கொள்ளு வதற்காகச் சட்டத்தை வளைத்துப் பிறரைத் தண்டிக்க முற்பட்டால் அதனை ‘நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும்நெறி’ (324) எனும் ‘கொல்லாமை’ அதிகாரப் பாடலோடு முரணுவதாகக் கருதக்கூடாது. ‘அதிகார துஷ்பிரயோகம்’ எனும் மகாப்பழியாகவே அது பிந்திய வரலாற்றில் இடம்பெறும்.”

புலவர் ஒருவர் இடைமறித்து

“‘பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

      நன்மை பயக்கும் எனின்’           (292)

என எல்லோர்க்கும் நன்மை பயக்குமானால் ஒருவன், தன்னலம் நோக்காது, பொய் கூற நேர்ந்தாலும், அது வாய்மையின் இடத்தில் வைத்து மதிக்கப்படும் என வள்ளுவர் மனவியல் புரட்சியை அன்றே செய்துவிட்டார்.”

மற்றொரு பெரும்புலவர்

“வள்ளுவர் அப்படிப் பொதுநலம் நோக்கிச் சொல்லும் பொய்யினை, வாய்மை என்று முழுமையாக ஏற்கவே இல்லை. அதனை வாய்மை எனும் இடத்தில் கொள்ளலாம்; அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்று தான் கருதியிருக்க வேண்டும் என நான் அடித்துச் சொல்லுகிறேன்.”

கூட்டத்திலிருந்து ஒரு குரல்

“புலவரய்யா யாரையும் அடித்துவிட வேண்டாம். நாங்களே தங்கள் கருத்தை வள்ளுவர் கருத்தாக ஏற்றுக் கைதட்டி விடுகிறோம்” (கரவொலிகள் – சிரிப்பலைகள்)

பேராசிரியர்

“பொய்யோ வாய்மை எனும் இடமோ இவை இரண்டுமே ஒருவரின் மனத்தைக் களமாகக் கொண்டவை என்பது உளவியலாரின் தீர்ப்பு. மனிதன் என்பவன் மனதால் வாழ்கிறான். மன எழுச்சியும் வளர்ச்சியுமே ஒரு தனி மனிதனின் மலர்ச்சியும் தளர்ச்சியும் என்பது அறிவியல் துணிபு.”

மற்றொருவர்

“ஐயா… ஓர் இடைமறிப்புக்கு மன்னிக்கவும்.”

ஒருங்கிணைப்பாளர்

“பேராசிரியர் சொல்லுங்கள். நீங்கள் முடித்ததும் வள்ளுவ முரண்களாக என் மனதில் எழுந்த ஐயங்களை இந்த அவை முன்னர் வைக்க விரும்புகிறேன்.”

பேராசிரியர்

“நான் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். மக்களிடம் வள்ளுவர் காலத்தில் இருந்த மனம் தானே இன்றும் இருக்கிறது? அதே அகவுணர்வு தானே இப்போதும் இருத்தல் வேண்டும்? மனச்சான்று, காலத்திற்குக் காலம் மாறுபடுமா?”

ஒருங்கிணைப்பாளர்

“இது சிந்திக்க வேண்டிய கேள்விதான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக வள்ளுவத்தின் மூலமே நமக்குப் புலனாகிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலே கூட சமுதாய மக்களில் பலருக்கு நல்ல மனம் இல்லை என்பதை அவரே இயற்றியுள்ள ‘கயமை’ எனும் தனி அதிகாரம் அழுத்தமாகச் சொல்கிறது.”

இடையில் ஒருவர்

“கயவராய் இருப்பதற்கு மன அழுத்தம் அவசியம் தான்” (அவையில் சிறு புன்முறுவல் பிரதிபலிப்பு)

ஒருங்கிணைப்பாளர்

“அது மட்டும் அல்ல; மனம் மாறுபடும் இயல்புடையது என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் ‘மகளிர் மனம் போல மாறுபடும்’ எனவும் வள்ளுவம் கூறுவதாக நினைவு! ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்” எனக் கவியரசு கண்ணதாசனும் பாடியுள்ளார்.”

பெரும்புலவர் இடைமறித்து

“மகளிர் மனப் போக்குப் பற்றிய ஆய்வில் இறங்கினால் எளிதில் மீள முடியாது; முரண்கள் முட்டி மோத ஆரம்பித்துவிடும். எனவே ஒருங்கிணைப்பாளர் ‘திருக்குறள் செம்மல்’ அவர்கள் சற்று முன்னர் கூற நினைத்த வள்ளுவ முரண்களைக் கோடிட்டுக் காட்டட்டும். நாமும் உடன் சிந்திப்போம்.”

ஒருங்கிணைப்பாளர்

“நான் வள்ளுவத்தில் முரண்பாடுகளை விட உடன்பாடுகளையே பெரிதும் காண்கிறேன். சிறு முரண்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவற்றைக் காலச் சூழலோடும் பாட வேறுபாட்டோடும் பொருத்தி அமைதி காண முற்படுவேன். மனம் பற்றி நிறையச் சொன்னார்கள். இந்த இடத்தில் டாக்டர் மு.வ. அவர்கள் கூறிய கருத்தை முதலில் முன்வைக்க விரும்புகிறேன். அவர் சொன்னார்:

‘பிற உயிர்களை விட மக்கள் வாழ்வு சிறந்திருக்கக் காரணம் அவர்கள் பெற்றுள்ள மனம் எனும் கருவிதான். அதைப் பயன்படுத்தவும் பண்படுத்தவும் வல்லவர்களாக அவர்கள் துலங்க வேண்டும். மக்கள் வாழ்வு என்பது ஐம்புல நிலைக்கும் அப்பாற்பட்ட உற்றுணர்ந்து ஒப்புரவோடு வாழ வேண்டிய மனத்தால் வாழும் வாழ்க்கை ஆகும். இந்த மனம் பண்படும் இடம், காதல் வாழ்க்கை; மனம் பயன்படும் இடம், பொது வாழ்க்கை; மனம் வாழும் இடம், தனி வாழ்க்கை.’”

அரசு அதிகாரி

“அறிஞர் மு.வ.வைச் சரியான இடத்தில் பொருத்தமாக நினைவூட்டி, எங்கள் மனங்களையும் நிறைத்து விட்டீர்களே?” (கைதட்டல்)

ஒருங்கிணைப்பாளர்

“‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என வள்ளுவரே முத்தாய்ப்பு இட்ட பின்னர், நாம் மனத்தைப் போட்டு இதற்கு மேலும் குழப்பிக் கொள்ள வேண்டுமா?

குறள் பட்டிமன்றங்களில் எல்லாம் வினாவாக எழுப்பப்படும் குறளை இந்த நிலா முற்ற அவையில் என் மனதைத் தாக்கிய முதல் முரணாக வைக்கிறேன்.

அந்தக் குறட்பா:

“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

     பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை’    (37)

அறத்தாறு என்றால் அறத்தின் பயன். ஆனால் இங்கு ஊழ்வினையையும் சுட்டுவது போலப் படுகிறது. அதாவது பல்லக்கைத் தாங்குவோர் தீவினை செய்தோர், அதில் ஏறி அமர்ந்து செல்வோர் நல்வினை செய்தோர் எனப் பன்னெடுங் காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது.”

அறத்தாறு – இதுதானா?

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“இன்றைய குடியாட்சிக்கு வந்து பொன்விழாக் கொண்டாடி விட்ட நம் நாட்டு நிலை என்ன? வாக்களித்தோர் தீவினை செய்தோராகவும், எப்படியோ வெற்றி பெற்றோர் நல்வினையாளராகவும் நாடகங்கள் அரங்கேறு கின்றனவே? வேட்பாளராக விழைவோர் தம் பூர்வ கதையை எல்லாம் தெரிவித்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் அளவுக்கு ஆட்சிக் கட்டி லேறுவோர் மீது அவநம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே? அவர்கள் எல்லாம் நல்வினைப் பயனால் ஆட்சிக்கு வருகிறார்கள்; ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுகிறது’ என்பது தானே நடைமுறை?”

ஒருங்கிணைப்பாளர்

“அரசுப் பொறுப்பில் இருக்கும் அன்பர் அடுக்கிய ஐயங்கள் இன்றைய நம் குடியாட்சி முறையைச் சீர்குலைத்து வரும் கயமைகள் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை; ஆனால், குறட்பாவின் உண்மைப் பொருள் எதுவாயிருக்கும் என நாம் மனம் விட்டுச் சிந்திக்கலாமே?”

 

பேராசிரியர் வளனரசு

“இந்தக் குறளுக்கு ஊழைக் கருத்தில் கொண்டு பொருள் காண முற்பட்டால் ஏற்றத்தாழ்வு எண்ணமே நம்முன் நந்தி போல் நிற்கும்.”

ஒருவர்

“அப்படியானால் வள்ளுவர் ‘ஊழ்’ பற்றித் தனி அதிகாரமே செய்துள்ளமைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”

பேராசிரியர் சு.குழந்தைநாதன்

“ஊழுக்கு அவர் தனி அதிகாரம் செய்திருப்பினும் அங்கு அவர் கருதிய பொருளமைதி இந்தக் குறளுக்குப் பொருந்தாது என்பது பல அறிஞர் முடிபு. அப்படிக் கருதினால் சமுதாயத்தில் உயர்வு தாழ்வுப் போராட்டத்திற்கு, சமூக நியதிக்கு, சட்டத்திற்கு எல்லாம் அப்பால் போய், ஏதோ ஒரு சமாதானம் தேடிக் கொள்ளுவதாகவே அமையும். வள்ளுவர் ஊழில் உறுதி இல்லாதவர் அல்லர். அது இக்குறளுக்குப் பொருந்துமா என மட்டுமே நாம் கருத வேண்டும்.”

ஒருங்கிணைப்பாளர்

அறநெறி என்பது இரு சாராருக்கும் பொதுமையானது தான். பல்லக்கைத் தாங்குவோரும் மனிதரே. அதில் அமர்ந்து செல்வோரும் மனிதரே. பல்லக்கைச் சுமப்போராயினும் அவர்கள் அற நெறியில் நின்றால் அறவோர் ஆகலாம். அதில் அமர்ந்து செல்வோராயினும் அவர்கள் அறநெறி பற்றி நின்றாலே அறவோர் ஆகலாம். அறவோர் ஆகும் வாய்ப்பு இருசாரார்க்குமே உண்டு. அது அவரவர் செயல் விளைவே அன்றி – அறத்தின் பயன் எனக்கொண்டு, ஏதோ முற்பிறவிப் பயன் என ஊழை மாசுபடுத்தக் கூடாது, காரணம் காட்டக் கூடாது.

‘அறத்தான் வருவதே இன்பம்’ என்பதுதான் வள்ளுவத்தின் உண்மைப் பொருள்.”

( தொடரும் )

குறள் நிலா முற்றம் – 6

Related image

ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

“உணவுக்கு முன் ஒரு நிமிடம்… கவிஞர் கருப்பையா அவர்களே, திருக்குறளின் சிறப்பான பெருமைகளை எடுத்துக் கூறுங்கள்?

கவிஞர் கா.கருப்பையா

திருக்குறளுக்குச் சூட்டப்பெற்ற புகழாரங்கள் சில:

    “திருக்குறள் நீரோட்டம் பாயாத தமிழ்வயல்களே இல்லை”

– மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்

மானிட வேதம்

“சினமெனும் வேதம் மற்றும் இடமெனும் பேதம் மாறும்

 தினமெனும் வேதம் யாவும் தீர்த்தொரு பொதுமை கண்டு

 வாழ்வியல் படைத்த மேதை வள்ளுவன் தந்தமுப்பால்

 சூழ்நிலை அனைத்தும் தன்னுள் சூழ்ந்தொரு பாதை

காட்டும்,

 மானிட வேதம் சிந்த வையத்தார் அனைவர்கட்கும்

 தேனினும் இனிய எங்கள் செந்தமிழ் தந்த செல்வம்”

& அறிஞர் வா.செ.கு. (குலோத்துங்கன்)

ஒப்பற்ற நூல்

“வானுக்குச் செங்கதிரவன் போன்றும்

     புனல் வன்மைக்குக் காவிரியாறு போன்றும்

     நல்ல மானத்தைக் காத்து வாழ எண்ணும்

     வையக மாந்தர்க்கு ஒப்பற்ற நூல் திருக்குறள்…”

& பாவேந்தர் பாரதிதாசன்

வளரும் எண்ணம்

“வள்ளுவரின் குறள் மீது விழியை நாட்டி

     வடித்த இரண்டடி எடுத்து மனத்துள் போட்டுத்

     தெள்ளிதின் நற்பொருள் கண்டே உளம்பூரித்துச்

     சிந்தித்துப் பார்க்குங்கால் வளரும் எண்ணம்”

& கவியரசு கண்ணதாசன்

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்…” என்றுதானே வள்ளுவர் சொன்னார்; நாம் செவிக்கு இதுவரை உணர்வு பெற்றோம்; இனி வாயுணர்வுக்கு வகை வகையாக வைக்கப் பட்டுள்ளவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு வருவோமே! பந்திக்கு முந்துங்கள் ஐயா!”

 

ஒருவர்

“நிலா முற்றத்தில் செவிக்குக் கிட்டிய உணவால் நிறைவு கிட்டியதா..?”

மற்றவர்

“அல்லது வயிற்றுக்குக் கிட்டிய அறுசுவை உணவால் நிறைவு ஏற்பட்டதா? எனச் சொல்ல முடியாத அளவு நிலாச்சோறும் சுவையாய் இருந்தது; வள்ளுவச் செய்திகளும் சுவையாய் இருந்தன.”

முன்னவர்

“அது சரி… நாம் சைவப் பந்திக்குச் சென்று வந்தோம். அசைவத்தை நாடிச் சென்றவர்கள் எங்கே? இன்னும் காணோமே…”

இரண்டாமவர்

“அதோ பாரும் ஐயா… அசைந்து அசைந்து, ஆடியபடி வருகிறார்கள். நடக்கக்கூட முடியாமல்.. அவர்தான் அசைவ வேட்டைக்குப் போனவர்… அவர் அசைந்தாடி வந்தபின் சாப்பாட்டை ருசித்துப் பாராட்டுவார். வந்த பின் கேட்டால் நமக்கும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். கட்சி மாறி விடுவோம்.” 

முன்னவர்

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

மற்றவர்

“நீரே பாராட்டிவிட்டீர் மிக அரிதாக, ஆச்சரியமாக!”

முன்னவர்

“ஏன் அப்படிச் சொல்கிறீர்? நல்லதைப் பாராட்ட வேண்டியது மனிதப் பண்பு அல்லவா?”

மற்றவர்

“அந்த நல்ல இயல்பு தமிழர்களாகிய நம்மிடம் அதிகம் இல்லையே? இது நம் தவக்குறை; நம் ஒருமித்த வளர்ச்சிக்கும் தடை.”

ஓர் அரசு அதிகாரி

“ஆங்கிலத்தில் வரும் புகழ்பெற்ற மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் அண்மையில் படித்தேன்: “மனிதன் சற்று அதிகமாகவே உணர்ச்சி வசப்படுபவன், அவன் முதுகைச் சற்று ‘சபாஷ்’ எனத் தட்டிக் கொடுத்துவிட்டால், உடனே தலை கனத்துப்போய் விடுமாம், கர்வம் வந்துவிடுமாம்.”

இன்னொருவர்

“ஆனால், பலருக்குத் தட்டிக்கொடுக்காமலே கர்வம் தலைக்கேறி விடுகிறதே?”

ஒருங்கிணைப்பாளர்

“அந்த கர்வம் பார்க்கும் சர்ச்சையை விடுத்து,  நாம் உணவுக்கு முன் பேசிய, வள்ளுவ முரண், அரண்களைப் பற்றிப் பேசுவோமா..?”

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கா.கருப்பையா

“அதற்கும் முன்பாக நிலா முற்ற விருந்துச் சாப்பாட்டைப் பற்றி ஓரிரு சொற்களில் பாராட்டட்டுமே.. ‘பண்பு பாராட்டும் உலகு’ என வள்ளுவரே சொல்லி உள்ளாரே..?”

 

ஒருங்கிணைப்பாளர்

“‘பண்பு’, ‘பாராட்டு’, ‘நாகரிகம்’ எனும் சொற்களுக்கு அறிவுபூர்வமாகச் சரியான விளக்கம் ஒரு போதும் சொல்ல இயலாது; உணர்வை வேண்டுமானால் ஓரளவு புலப்படுத்தலாம்.

இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் அரசியல், சமுதாயக் காழ்ப்புணர்வுகள், சுயநல வேட்டைகள் முதலியவை காரணமாகப் பண்புகள் அருகி வருகின்றன என்பது ஓரளவு ஏற்கத்தக்கதுதான் என்றாலும் பாராட்டும் பண்பினைச் சிறு வயது முதலே ஊக்கியும் போற்றியும் வளர்க்க வேண்டியது அனைவரின் அன்றாட வாழ்வுப் பொறுப்பே ஆகும். நலம் கண்ட இடத்துப் பாராட்டுவது பண்புடையாரிடம் மட்டும் காணப்பெற்றால் போதாது. பலரிடம் பரவ வேண்டும்.”

பண்பு பாராட்டும் பக்குவம்

புலவர் ஒருவர்

“‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு’ (994) எனும் தமிழ்மறை, அறிவுடையோர் பண்பு பாராட்டுவதே சிறப்பு என அறிவுறுத்துகிறது. எல்லோரும் பாராட்ட முற்பட்டால் அறிவுடையோராகவும், ஆட்சித் திறத்தை ஊக்குவிப்போராகவும் வளரலாம்; தாமும் உயர்ந்து, நாட்டோரையும் உயர்த்தலாம். பாராட்டு வோரிடத்திலும் அதனை ஏற்போரிடத்திலும் பாராட்டுதல் எனும் பண்பு மேன்மேலும் சிறந்தோங்கிடவே துணை புரியும்.”

தமிழ்ச் சங்கக் கல்லூரிப் பேராசான்

“பாராட்டு எனும் போது என் நினைவில் படரும் இரு சங்கப் பாடல்களின் செய்திகளைச் சுருக்கமாகச் சொல்ல எனக்கு இந்த நிலா முற்ற அவை இசைவு தர வேண்டும்.”

ஒருவர்

“நிலா மறைந்து பொழுது விடிவதற்குள் சொன்னால் தூங்கி விடாமல் கேட்போம்… புலவரய்யா… புறநானூற்றிலேயே எங்களை மூழ்கடித்துவிடக்கூடாது” (சிரிப்பு)

பேராசான்

“நான் அகத்துறை நற்றிணைப் பாடலில் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல் ஒன்றின் கருத்தைச் சொல்ல விழைந்தேன். போருக்குச் சென்ற வீரன், ஆற்றலோடு போர் முடித்து வெற்றி வீரனாகத் தன் மனையாளைக் காணக் குதிரை பூட்டிய தேரில் விரைந்திடும் காட்சியை, ஒக்கூரார் ஓவியமாக்கி உள்ளார். ‘வாயு வேகம் மனோ வேகம்’ என விரைந்து வந்திட அவனுக்கு உதவிய தேரோட்டியையும் குதிரைகளையும் செய்வினை முடித்த செம்மல் உள்ளத்தோடும், புரிந்த காதலொடும் வந்த அவன் ‘போர் முடித்துத் தேரில் ஏறியதைத் தான் அறிவேன்; ஆனால் இவ்வளவு விரைவில் வந்தது எப்படி என அறியேன். என்னப்பா..! வானில் சுழலும் காற்றைக் குதிரைகளாகப் பூட்டிவந்தாயா! அல்லது மனத்தைப் பூட்டி வந்தாயா?’ என வியந்து கேட்கும் அளவுக்கு விரைந்து வந்து இறங்கிக் காலமெல்லாம் காத்திருந்த தன் மனையாளை மார்புடன் கட்டி அணைத்துக் கொள்ளுகிறான்… இது மாசாத்தியார் வெற்றி வீரன் ஒருவன் தன்னிலும் நிலை தாழ்ந்த குதிரைச் சாரதியை மனதாரப் பாராட்டுவதாக அமைத்த அரிய காட்சி. அதுபோல, ‘யான் கண்டனையர் என் இளையரும்’ எனப் பிசிராந்தையார் எனும் புறநானூற்றுப் பெரும்புலவர் தம்மினும் இளைஞரைப் பெருமையுறப் பாராட்டினார். முதுமையிலும் கவலையால் நரை முடி படராது எனச் சான்று காட்டினார். எனவே ‘யார் யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றாற் போல, யார் சிறந்த பணி செய்தாலும் சிந்தை குளிரப் பாராட்டும் சிறந்த மனம் வேண்டும். ‘சின்னப் பசங்க தானே..?’ என அலட்சியப்படுத்துவதால், அவர்கள் பெரியவர்களைத் தாமும் அலட்சியப்படுத்துவதில் கைதேர்ந்தவர் களாகி வருவது சமுதாயக் காட்சியாகி விட்டது.”

ஒருவர்

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

ஒருங்கிணைப்பாளர்

“இந்தக் கருத்தை நம் மூதறிஞர் மு.வ. ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை நிலா முற்ற அவையின் கவனத்திற்குக் கொணர்கிறேன்.

பொருளும் புகழும் வாழ்வுக்குத் தேவை. ‘புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்’ என்ற வள்ளுவர், ஒருவர் மறைவுக்குப்பின்னர் தாம் பெற்ற மக்களைப் போல அவருக்கு எஞ்சி நிற்கப்போவது அவர் ஈட்டும் புகழே என வலியுறுத்திச் சொல்லியுள்ளார்.”

ஒருவர்

“வள்ளுவர் ‘புகழெனும் எச்சம்’ என்றே குறிக்கிறார்: ‘இசையெனும் எச்சம்’ (238): அன்பரின் நினைவூட்டலுக்கு நன்றி. ஆனால் வள்ளுவர் காலச் சமுதாய வாழ்வு ஊரளவில் – கிராம அளவில் – சுருங்கியதொரு குடிமை வாழ்வாக இருந்தது. எனவே ஒருவர் புகழுக்கு உரியவர் தானா என ஒரு சாதனையாளரை உண்மையிலேயே நேரிடையாகக் கண்டறிந்து போற்றிப் பாராட்டு வதையும் அதைச் சமுதாயத்தவர் ஒருமனமாக ஏற்பதையும் உணர முடியும். ஆனால், போலிப் புகழ் ஊர்வலங்கள் இன்று, உலகின் நாலா திசையிலும் ஒரு வகையில் விரிந்துள்ளன; இன்னொரு வகையில் உலகம் கைக்குள் அடங்கு மாறு சுருங்கியும் உள்ளது. இன்றுள்ள அறிவியல் சாதனத் தொடர்புப் பெருக்கத்தின் காரணமாக ஒரு வினாடிக்குள் ஒருவர் உலகப் புகழுக்கோ அல்லது உலகின் கவனத்துக்கோ கொணரப் பட்டு விடுகிறார்.”

இடைமறிக்கும் ஒருவர்

“அதை கின்னஸ் சாதனை எனப் பதிவு செய்கிறார்கள். அப்புறம் இன்னொருவர் அந்த நுனியைத் தொட்டவுடன் முந்தையவர் பெயர் காணாமல் போய்விடுகிறதே, அது புகழா? போலியா?”

ஒருங்கிணைப்பாளர்

“இன்றைக்குப் புகழ், பாராட்டு என்பதெல்லாம் பணபலமோ, ஆட்பலமோ உள்ளவர்களின் கைக்கருவியாகி விட்டது உண்மை. செய்தித் தாள்கள் போன்ற ஊடகங்கள் அவர்களுக்கு விலைபோகி விடுவதும் மறுக்க முடியாத நடைமுறை. அவையோர்க்கு இங்கே ஒன்றை நினைவூட்டுவது என் கடமை. மேலும், இது குறள் நிலா முற்றமாக இருப்பதால், புகழ் – போலி என்பதைப் பற்றிய வள்ளுவர் கருத்தைச் சுற்றி வருவதைவிட, வள்ளுவப் பெருந்தகை புகழுக்கு ஊறு செய்பவை என எவ்வெவற்றைப் பட்டியலிட்டாரோ அவற்றையும் இன்றைய வாழ்வோட்டத் தோடு கருதிப் பார்க்கலாம்.”

இடைமறித்த ஒருவர்

“மன்னிக்கவும்… மொழிபெயர்ப்பு முறைகள் – முரண்பாடுகள் பற்றிக் கூற எனக்குப் போதிய ஞானம் இல்லை; ஆனால் குறள் கூறும் கருத்துக்களில் ஆங்காங்கே பல என்று சொல்லாவிட்டாலும் சில முரண்கள் தோன்றுவதாக என் சிற்றறிவு சுட்டுவது உண்டு.”

மற்றோர் அன்பர்

“‘குறளில் முரண்பாடு’ என்று இவர் புதிய சர்ச்சையைக் கிளப்புகிறாரே..?”

ஒருங்கிணைப்பாளர்

“சர்ச்சைகள், சந்தேகங்கள் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? .. குறள் கூறும் செய்திகளில் முரண்கள் இருப்பது போலத் தோன்றுவதும் உண்மை என அறிஞர்கள் சிலர் கருதியது உண்டு. அவற்றையும் நிலா முற்றத்தில் சிந்தித்துச் சிறந்ததைப் பாராட்டுவோம், சிறப்பில்லாததைச் சீராக்குவோம்.”

ஓர் அன்பர்

“ஐயா… இந்த முரண்பாட்டிற்குள் நுழைந்தால் நம் வயிறுகள் முரண்பாடு செய்யும் போலத் தோன்றுகிறது. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பார்கள். செவி நிறையக் கேட்டு விட்டோம். வயிற்றுக்கு ஏதேனும் வருமா எனப் பாருங்கள். வயிறு கிள்ளுகிறது” (சிரிப்பலை)

மற்றோர் அன்பர்

“அதோ.. உணவுப் பண்டங்களின் வரிசை வைப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? இரண்டு வரிசை இருக்கிறது! அதென்ன இரண்டு வரிசை? ஒன்று சைவம்; மற்றொன்று அசைவம்.”

ஒருங்கிணைப்பாளர்

 

“செவிக்கு இனிய உணவோடு நாவிற்குச் சுவையான அமுதும் அளித்தமையை உளமாரப் பாராட்ட வேண்டும்.”

 

“சிறிய வயதினர் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துச் சீர்பெறுவதும், சீரழிவதும் ஒருபுறம் இருக்கட்டும். பெரியவர் களாகிய நம்மில் பலர் நடத்தும் பாராட்டு விழாக்களின் பரிதாபக் காட்சியைப் பலமுறை கண்டு வியந்து பயந்தே போன அந்த அதிர்ச்சியில் சொல்கிறேன்.”

இன்னொருவர்

“எங்களுக்கும் அதிர்ச்சியூட்டாமல் சொல்லுங்கள்.”

புகழோசையா? விளம்பர இரைச்சலா?

பெரும்புலவர் தொடருகிறார்

“இன்று சிறந்த சாதனை புரிந்தமைக்காக ஒருவரை உரிய முறையில் பாராட்டுவதை அனைவரும் வரவேற்பது முறைமை. ஆனால் என்ன நடக்கிறது? சாதாரணமான அற்பக் காரியத்தைக்கூட, விளம்பரத்தால் மிகைப்படுத்தி சம்பந்தப்பட்டவரிடமும் பிறரிடமும் நன்கொடை வசூலித்துப் ‘பாராட்டு விழா’ எனும் பெயரில் ஒரு பகட்டு விழாவை நடத்தி, தானும் ‘சாதனை யாள’ரோடு முதல் வரிசையில் நின்று, புகைப்படம் எடுத்து, மறுநாள் பத்திரிகையில் அதைப் பிரசுரிக்கக் கண்டு மனச்சாந்தி பெறும் ஒரு மாயையே இன்று பாராட்டாக, புகழாக உலா வருகிறது என்பது என் கருத்து.”

 

( தொடரும் )